மேலும் அறிய

தென்காசி: பணி நீக்கம் செய்யப்பட்ட நகராட்சி ஆணையர்: லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் அதிரடி

அப்போது  நடைபெற்ற சோதனையில் பவுன்ராஜ் அரசு விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட்டு இருந்ததும், ஓராண்டு காலத்தில் மட்டும் 1256 காசோலைகள் மூலம் 15.62 கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தை முறைகேடாக விடுவித்து இருப்பதும் தெரியவந்தது.

தென்காசி மாவட்டம் அய்யாபுரத்தை சேர்ந்தவர் பவுன்ராஜ். இவர் தென்காசி மாவட்டம் கடையநல்லூர், தென்காசி, புளியங்குடி நகராட்சியில் கடந்த  2017, 18ம் ஆண்டுகளில் ஆணையராக பணியாற்றி வந்துள்ளார். அதன் பின்னர் பணிமாறுதலாகி கோவை மாவட்டம் வால்பாறைக்கு சென்று பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர் தனது பதவியை தவறாக பயன்படுத்தி நகராட்சி பணத்தை முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. வால்பாறை நகராட்சியில் கடந்த சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு சட்ட விரோதமாக ஒப்பந்ததாரர்களுக்கு கான்டிராக்ட் வழங்கி கோடிக்கணக்கில் பணம் விடுவித்ததாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆறுமுகம் தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடத்த கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த நாகராஜ், திருப்பூர் நகராட்சிகளின் மண்டல இயக்குனர் சரவணகுமாருக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் சரவணகுமார் முன்னிலையில் கோவை மாவட்ட குற்றப் பிரிவு காவல் துறையினர் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர்.

அப்போது  நடைபெற்ற சோதனையில் பவுன்ராஜ் அரசு விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட்டு இருந்ததும், ஓராண்டு காலத்தில் மட்டும் 1256 காசோலைகள் மூலம் 15.62 கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தை முறைகேடாக விடுவித்து இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து நகராட்சிகளின் திருப்பூர் மண்டல நிர்வாக இயக்குனர் சரவணகுமார் கோவை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து வால்பாறை நகராட்சி ஆணையாளர் பொறுப்பில் இருந்து பவுன்ராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மோசடி தொடர்பாக பவுன்ராஜ் மீது கோவை மாவட்ட குற்றப் பிரிவு காவல் துறையினர் இரண்டு வழக்குகள் பதிவு செய்தனர். 15 கோடி மோசடி ஒரு வழக்காகவும், 35 லட்சம் மோசடி செய்ததாக ஒரு வழக்காகவும் பதிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அவர் 2 கோடி ரூபாய்க்கும், மேல் சொத்து சேர்ந்து உள்ளதாக லஞ்ச  ஒழிப்பு போலீசாருக்கு வந்த தகவலையடுத்து இன்று பணி நீக்கப்பட்ட ஆணையருக்கு சொந்தமான  பல்வேறு இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்றது, குறிப்பாக தென்காசி அய்யாபுரத்தில் உள்ள இவரது வீடு மற்றும் இவரது தாயார் பெயரில் தென்காசி நகர பகுதியான மங்கம்மாள் சாலையில் உள்ள  ஜே.எஸ்.ஆர்.கார்மெண்ட்ஸ் எக்ஸ்போர்ட் நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகளில் நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் ராபின்சன் ஞானசிங் தலைமையில் திடீர் சோதனையானது நடைபெற்றது. காலை முதல் பல மணி நேரம் இந்த சோதனையானது நடைபெற்றது. பல மணி  இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாகவும், லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சோதனையால் தென்காசி நகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Gukesh Chess: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதிபெற்ற குகேஷூக்கு ரூ. 75 லட்சம் ஊக்கத் தொகை - நேரில் வாழ்த்திய முதலமைச்சர்!
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதிபெற்ற குகேஷூக்கு ரூ. 75 லட்சம் ஊக்கத் தொகை - நேரில் வாழ்த்திய முதலமைச்சர்!
Breaking Tamil LIVE: நிதிஒதுக்கீட்டில் மத்திய அரசு பச்சை துரோகம் - வைகோ கண்டனம்
நிதிஒதுக்கீட்டில் மத்திய அரசு பச்சை துரோகம் - வைகோ கண்டனம்
Fact Check: ”எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும்” - அமித்ஷா பேசியது என்ன?
”எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும்” - அமித்ஷா பேசியது என்ன?
ICC Men T20 World Cup: விரைவில் வெளியாகவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி.. விக்கெட் கீப்பருக்கு 5 பேர் போட்டியா..?
விரைவில் வெளியாகவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி.. விக்கெட் கீப்பருக்கு 5 பேர் போட்டியா..?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Thambi Ramaiah Speech | Bala on Samuthirakani :   ”1000 மாற்றுத்திறனாளி குழந்தைகள்! உடனே ஓடிவந்த சமுத்திரக்கனி” பாலா உருக்கம்Villupuram flying squad : ரூ.68,000-ஐ வாங்க 2 கிலோ நகை அணிந்து வந்த நபர்!அதிர்ந்த தேர்தல் அதிகாரிகள்Kadambur Raju  : ”சசிகலாவுக்கு எதுவும் தெரியாது! அரசியல்ல ஈடுபட்டது இல்ல” கடம்பூர் ராஜூ பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gukesh Chess: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதிபெற்ற குகேஷூக்கு ரூ. 75 லட்சம் ஊக்கத் தொகை - நேரில் வாழ்த்திய முதலமைச்சர்!
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதிபெற்ற குகேஷூக்கு ரூ. 75 லட்சம் ஊக்கத் தொகை - நேரில் வாழ்த்திய முதலமைச்சர்!
Breaking Tamil LIVE: நிதிஒதுக்கீட்டில் மத்திய அரசு பச்சை துரோகம் - வைகோ கண்டனம்
நிதிஒதுக்கீட்டில் மத்திய அரசு பச்சை துரோகம் - வைகோ கண்டனம்
Fact Check: ”எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும்” - அமித்ஷா பேசியது என்ன?
”எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும்” - அமித்ஷா பேசியது என்ன?
ICC Men T20 World Cup: விரைவில் வெளியாகவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி.. விக்கெட் கீப்பருக்கு 5 பேர் போட்டியா..?
விரைவில் வெளியாகவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி.. விக்கெட் கீப்பருக்கு 5 பேர் போட்டியா..?
Artificial Sweetener: கவனமா இருங்க. Cup Cake-இல் செயற்கை இனிப்பூட்டிகளால் அபாயம்.. ஆய்வில் தகவல்
Artificial Sweetener: கவனமா இருங்க. Cup Cake-இல் செயற்கை இனிப்பூட்டிகளால் அபாயம்.. ஆய்வில் தகவல்
TN Weather Update: அடுத்த 4 நாட்களுக்கு தொடரும் வெப்ப அலை.. எந்தெந்த மாவட்டங்களில்? வானிலை சொல்வது என்ன?
அடுத்த 4 நாட்களுக்கு தொடரும் வெப்ப அலை.. எந்தெந்த மாவட்டங்களில்? வானிலை சொல்வது என்ன?
Kavin: சீரியல் மூஞ்சி என சொன்ன திரையுலகம்.. சாதித்து காட்டிய கவின்.. ஸ்டார் படம் இவரின் கதையா?
சீரியல் மூஞ்சி என சொன்ன திரையுலகம்.. சாதித்து காட்டிய கவின்.. ஸ்டார் படம் இவரின் கதையா?
Indian Premier League: இந்த சீசனில் மட்டும் 8 முறை.. ஐபிஎல் வரலாற்றில் அடுத்தடுத்து எகிறும் 250+ ரன்கள்..!
இந்த சீசனில் மட்டும் 8 முறை.. ஐபிஎல் வரலாற்றில் அடுத்தடுத்து எகிறும் 250+ ரன்கள்..!
Embed widget