மேலும் அறிய

பீகார் தேர்தல் முடிவுகள் 2025

(Source:  ECI | ABP NEWS)

நெல்லையில் விநாயகர் சிலை தயாரிப்பு...! காவல்துறை கட்டுப்பாடு..! சம்பவ இடத்தில் குவிந்த இந்துமுன்னணி..!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருநெல்வேலியில் காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி விழா வரும் 18ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்து முன்னணி, இந்து மகாசபை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் விக்கிரகங்கள் வைக்கப்படக்கூடிய இடங்களில் சிலை வைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாடு:

இந்த ஆண்டு சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத வகையில் விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும்., குறைந்த அளவிலான உயரம் கொண்ட விநாயகர் சிலைகளை வைப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நெல்லை மாநகர் பகுதிகளில் இந்து அமைப்புகள் சார்பில் சுமார் 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

வட மாநில தொழிலாளர்களால் நெல்லை பாளையங்கோட்டை அடுத்த கிருபா நகர் பகுதியில் விநாயகர் சிலை செய்வதற்கான கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து பல்வேறு வடிவங்களில், பல்வேறு வண்ணங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு ஆர்டர் கொடுத்தவர்களுக்கு கொடுக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களாக நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் விநாயகர் சிலை செய்யும் கிருபா நகர் பகுதியில் உள்ள தயாரிப்பு கூடத்தில் ஆய்விற்காக பல்வேறு மாதிரிகளை எடுத்துச் சென்றுள்ளனர்.

காவல்துறை கெடுபிடி:

இந்த நிலையில் விநாயகர் சிலை கூடத்திற்கு வருவாய் துறை, காவல் துறை சீல் வைக்க போவதாக தகவல் பரவியது. இதனை அடுத்து விநாயகர் சிலை தயாரிப்பு கூடத்தில் இந்து அமைப்பு நிர்வாகிகள் குவிய தொடங்கினர். அதே வேளையில் போலீசாரும் விநாயகர் சிலை தயாரிப்பு கூடத்தில் குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது, ஏற்கனவே விநாயகர் சிலைகளை பெறுவதற்கு இந்து அமைப்பு நிர்வாகிகள் வட மாநில தொழிலாளர்களிடம் பல்லாயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துள்ள நிலையில் தயார் நிலையில் உள்ள விநாயகர் சிலைகளை எடுத்துச் செல்வதற்கான பணிகளை தொடங்கினர்.


நெல்லையில் விநாயகர் சிலை தயாரிப்பு...! காவல்துறை கட்டுப்பாடு..! சம்பவ இடத்தில் குவிந்த இந்துமுன்னணி..!

10 அடி உயரம் வரை தயாரிக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் அட்வான்ஸ் கொடுத்தவர்கள் ஆட்டோ மற்றும் டெம்போ வேன்கள் மூலம் அந்தந்த பகுதிகளுக்கு எடுத்து செல்லும் பணிகளை தொடங்கினர். வழக்கமாக விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாள் வந்து விநாயகர் சிலைகளை இந்து அமைப்பு நிர்வாகிகள் வட மாநில தொழிலாளர்கள் இடமிருந்து பெறுவது வழக்கம்.

ஆனால் காவல்துறையின் கெடுபிடி காரணமாக குறிப்பிட்டு நாளுக்கு முன்னதாகவே விநாயகர் சிலைகளை தங்கள் பகுதிக்கு கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. தொடர்ந்து காவல்துறை கட்டுப்பாடுகள் என்ற பெயரில் கெடுபிடி கொடுக்கும் சூழல் உருவானால் மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்தப் போவதாக இந்து முன்னணி நிர்வாகிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்..

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்..

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SIR-ஐ எதிர்ப்பதில் தவறில்லை! திமுக B-Team இல்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி பரபரப்பு பேச்சு!
SIR-ஐ எதிர்ப்பதில் தவறில்லை! திமுக B-Team இல்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி பரபரப்பு பேச்சு!
TVK Vijay: Gen Z வாக்காளர்களே உஷாரா இருங்க.! SIR பற்றி விஜய் வீடியோ - என்ன சொல்லியிருக்கார் பாருங்க
Gen Z வாக்காளர்களே உஷாரா இருங்க.! SIR பற்றி விஜய் வீடியோ - என்ன சொல்லியிருக்கார் பாருங்க
IPL Released Players: RCB முதல் CSK வரை.. 10 அணியும் கழட்டிவிட்ட வீரர்கள் யார்? யார்? லிஸ்ட் இதான்!
IPL Released Players: RCB முதல் CSK வரை.. 10 அணியும் கழட்டிவிட்ட வீரர்கள் யார்? யார்? லிஸ்ட் இதான்!
Jan Suraaj Slams NDA: “கற்பனைக்கு அப்பாற்பட்ட வெற்றிக்கு ‘அது‘ தான் காரணம்“ - NDA-வை குற்றம்சாட்டும் ஜன் சுராஜ்
“கற்பனைக்கு அப்பாற்பட்ட வெற்றிக்கு ‘அது‘ தான் காரணம்“ - NDA-வை குற்றம்சாட்டும் ஜன் சுராஜ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dog Bite | பிறப்புறுப்பில் கடித்த நாய்!வடமாநில இளைஞர் படுகாயம் பகீர் சிசிடிவி காட்சிகள்
”சேட்டன் வந்தல்லே”CSK-வில் இணைந்த சஞ்சு ஜடேஜா, சாம் கரனுக்கு TATA..! | CSK Trade 2026
பீகாரின் 25 வயது பாஜக MLA பாடகி To அரசியல்வாதி யார் இந்த மைதிலி தாக்கூர்? | Bihar | Maithili Thakur
Tirupattur School Caste issue | சாதி பெயரை சொல்லி திட்டிய சத்துணவு பெண்!சிறுவன் கண்ணீர் வாக்குமூலம்
Rahul vs Tejashwi Yadav | காங்கிரஸ் கவலைக்கிடம்!ஆத்திரத்தில் தேஜஸ்வி தரப்பு!தோல்விக்கான காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR-ஐ எதிர்ப்பதில் தவறில்லை! திமுக B-Team இல்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி பரபரப்பு பேச்சு!
SIR-ஐ எதிர்ப்பதில் தவறில்லை! திமுக B-Team இல்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி பரபரப்பு பேச்சு!
TVK Vijay: Gen Z வாக்காளர்களே உஷாரா இருங்க.! SIR பற்றி விஜய் வீடியோ - என்ன சொல்லியிருக்கார் பாருங்க
Gen Z வாக்காளர்களே உஷாரா இருங்க.! SIR பற்றி விஜய் வீடியோ - என்ன சொல்லியிருக்கார் பாருங்க
IPL Released Players: RCB முதல் CSK வரை.. 10 அணியும் கழட்டிவிட்ட வீரர்கள் யார்? யார்? லிஸ்ட் இதான்!
IPL Released Players: RCB முதல் CSK வரை.. 10 அணியும் கழட்டிவிட்ட வீரர்கள் யார்? யார்? லிஸ்ட் இதான்!
Jan Suraaj Slams NDA: “கற்பனைக்கு அப்பாற்பட்ட வெற்றிக்கு ‘அது‘ தான் காரணம்“ - NDA-வை குற்றம்சாட்டும் ஜன் சுராஜ்
“கற்பனைக்கு அப்பாற்பட்ட வெற்றிக்கு ‘அது‘ தான் காரணம்“ - NDA-வை குற்றம்சாட்டும் ஜன் சுராஜ்
KKR Purse 2026:  KKR-ன் அதிரடி முடிவு! ரஸ்ஸல், வெங்கடேஷ் ஐயர் நீக்கம் !  ஏலத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்
KKR Purse 2026: KKR-ன் அதிரடி முடிவு! ரஸ்ஸல், வெங்கடேஷ் ஐயர் நீக்கம் ! ஏலத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்
CM Stalin On Bihar Election: ”பீகார் தேர்தல் ஒரு பாடம், தேர்தல் ஆணையம் மீது அதிருப்தி” சி.எம்., ஸ்டாலின் எச்சரிக்கை
CM Stalin On Bihar Election: ”பீகார் தேர்தல் ஒரு பாடம், தேர்தல் ஆணையம் மீது அதிருப்தி” சி.எம்., ஸ்டாலின் எச்சரிக்கை
திருமணமான 9 மாதத்திலே குழந்தை பிறக்குமா? மருத்துவர் சொல்வது என்ன?
திருமணமான 9 மாதத்திலே குழந்தை பிறக்குமா? மருத்துவர் சொல்வது என்ன?
CSK Trade: Its Official.. ஜடேஜா, சாம் கரன் விட்டுக் கொடுத்த சிஎஸ்கே.. தோனியின் வாரிசாக சாம்சன் இணைப்பு
CSK Trade: Its Official.. ஜடேஜா, சாம் கரன் விட்டுக் கொடுத்த சிஎஸ்கே.. தோனியின் வாரிசாக சாம்சன் இணைப்பு
Embed widget