மேலும் அறிய

Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 6 லட்சத்து 20 ஆயிரத்து 91 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன் வழங்கும் பணி துவங்கியது.

விழுப்புரம்: விழுப்புரத்தில் பொங்கல் தொகுப்பிற்கு டோக்கன் வினியோகத்தை துவக்கி வைத்த அமைச்சர் பொன்முடி அமலாக்கதுறையினர் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் சோதனை செய்வது குறித்த செய்தியாளர் கேள்விக்கு பதில் அளிக்காமல் நழுவி சென்றார்.

பொங்கல் பண்டிகையையொட்டி நியாய விலை கடைகளில் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை முழு கரும்பு ஆகிய அடங்கிய பொருட்கள் தொகுப்பாக வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் வினியோகம் இன்று முதல் துவக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 6 லட்சத்து 20 ஆயிரத்து 91 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன் வழங்குவதை விழுப்புரம் நகர பகுதியான ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள நியாய விலைக்கடையில் வனத்துறை அமைச்சர் பொன்முடி டோக்கன் வினியோகத்தை துவக்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி... 

இன்று முதல் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன் அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் ரேஷன் கடைகள் மூலமாக டோக்கன் வழங்கப்படுமெனவும் அதில் குறிப்பிட்ட தேதிகளான 9,10, 11, 12, ஆகிய தேதிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் விடுபட்டவரக்ள் 13 ஆம் தேதி பெற்றுக்கொள்ளலாம் என பொன்முடி கூறினார். அமைச்சர் துரை முருகன் வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை செய்வது தொடர்பாக அமைச்சர் பொன்முடியிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது அதற்கு பதில் அளிக்காமல் மறுத்து சென்றார்.

இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி துவக்கம் 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டு கோடியே 21 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகள் மூலம் இதற்கான டோக்கன் இன்று முதல் வழங்கப்பட உள்ளது. டோக்கனில் குறிப்பிடப்படும் நாளில் பொங்கல் பரிசுத் தொகுப்பை ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும், நாள்தோறும் காலையில் 100 பேர், பிற்பகலில் 100 பேர் பெறும் வகையில் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்றும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட ரேசன் கடைகள் மூலம் இதற்கான டோக்கன்கள் இன்று (ஜனவரி 3-ந்தேதி) முதல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட உள்ளது

இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் வினியோகம் செய்ய டோக்கன் அச்சடிக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்தது. இதைத் தொடர்ந்து இன்றிலிருந்து வீடு வீடாக ரேசன் கடை ஊழியர்கள் டோக்கன் வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமும் காலையில் 100 பேர் மாலை 100 பேர் 

அவர்கள் வழங்கும் டோக்கனில் பரிசு தொகுப்பை பெறுவதற்கான நாள், நேரம் ஆகிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும். தினமும் காலையில் 100 பேர் பிற்பகலில் 100 பேர் பொருள் வாங்கும் வகையில் டோக்கன் வினியோகம் செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.

தலைப்பு செய்திகள்

சொட்டுநீர் பாசனத்திற்கு 100% மானியம்! இன்றே விண்ணப்பியுங்கள்: முழு விவரம் உள்ளே!
சொட்டுநீர் பாசனத்திற்கு 100% மானியம்! இன்றே விண்ணப்பியுங்கள்: முழு விவரம் உள்ளே!
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
மனுக்கள் தூங்கி வழியும் காலம் முடிந்தது! - திமுகவை போட்டுத்தாக்கிய அமைச்சர் ஆனந்த்...!
மனுக்கள் தூங்கி வழியும் காலம் முடிந்தது! - திமுகவை போட்டுத்தாக்கிய அமைச்சர் ஆனந்த்...!
புதுச்சேரியில் பரபரப்பு! பிரியாணி கடைக்காரர் செய்த 'ஒற்றை' சம்பவம்... மாட்டிக்கொண்ட மின்துறை அதிகாரி!
புதுச்சேரியில் பரபரப்பு! பிரியாணி கடைக்காரர் செய்த 'ஒற்றை' சம்பவம்... மாட்டிக்கொண்ட மின்துறை அதிகாரி!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Upcoming Powerful SUVs: SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
Embed widget