மேலும் அறிய

UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!

UDISE Plus 2023-24 Report: 2024ஆம்‌ ஆண்டில்‌, பள்ளிப்‌ படிப்பை இடையில்‌ நிறுத்தாமல்‌, நடுநிலை- உயர்நிலை பள்ளிகளில்‌ தொடர்ந்து படிக்கும்‌ மாணவர் எண்ணிக்கையில்‌ தமிழ்நாடு மாபெரும்‌ சாதனை படைத்துள்ளது.

காலை உணவுத்‌ திட்டம்‌, திறன்மிகு வகுப்பறைகள்‌ திட்டம்‌ இல்லம்‌ தேடி கல்வி திட்டம்‌, எண்ணும்‌ எழுத்தும்‌ திட்டம்‌ வாசிப்புப்‌ பழக்கத்தை வளர்க்கும்‌ திட்டம், மாற்றுத்‌ திறனாளி மாணவர்கள்‌ மீது தனிக்‌ கவனம்‌ செலுத்தும்‌ திட்டம்‌ முதலிய திட்டங்களால்‌ தமிழ்நாட்டில்‌ பள்ளிப்‌ படிப்பை இடையில்‌ விடும்‌ மாணவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டு மாபெரும்‌ சாதனை படைத்திருப்பதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்துப் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்தியா முழுவதும்‌, 2019ஆம்‌ ஆண்டை விட, 2024ஆம்‌ ஆண்டில்‌, பள்ளிப்‌ படிப்பை இடையில்‌ நிறுத்தாமல்‌, நடுநிலை- உயர்நிலை பள்ளிகளில்‌ தொடர்ந்து படிக்கும்‌ மாணவர்களின்‌ எண்ணிக்கையில்‌ தமிழ்நாடு மாபெரும்‌ சாதனை படைத்துள்ளது.

இடையில்‌ படிப்பை விடுவோர்‌ தமிழ்நாட்டில்‌ இல்லை

தமிழ்நாட்டில்‌ பள்ளிப்‌ படிப்பில்‌ குழந்தைகளின்‌ சாதனைகள் தமிழ்நாட்டில்‌ பள்ளிப்படிப்பைத்‌ தொடங்கிய 100 சிறுவர்களில்‌ நடுநிலைப்பள்ளி முடிப்பை முடித்தவர்கள்‌ 2019ல்‌ 99 பேர்‌ என்பது 2024ல்‌ 100 பேர்‌ என உயர்ந்துள்ளது. அதேபோல, சிறுமியர்‌ எண்ணிக்கை, 97.5ல்‌ இருந்து 100 ஆக 2024-ல்‌ அதிகரித்து இடையில்‌ படிப்பை விடுவோர்‌ தமிழ்நாட்டில்‌ இல்லை என்பது புலனாகியுள்ளது.

அதேபோல, தமிழ்நாட்டில்‌ மேல்நிலைப்‌ பள்ளிப்‌ படிப்பை முடித்த மாணவர்கள்‌ 2019-ல்‌ 81.3 என இருந்தது 2024-ல்‌ 89.2 ஆக உயர்ந்துள்ளது. மாணவிகளைப்‌ பொறுத்தவரை 2019-ல்‌ 89.4 சதவிகிதமாக இருந்தது 2024-ல்‌ 95.6 சதவிகிதமாக அதிகரித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

பீகார்‌ மாநிலத்தில்‌ பள்ளிப்‌ படிப்பை இடையில்‌ விட்டோர்‌

அதே நேரத்தில்‌, பீகார்‌ மாநிலத்தில்‌ பள்ளிப்‌ படிப்பைத்‌ தொடங்கிய 100 மாணவர்களில்‌ நடுநிலைப்பள்ளிப்‌ படிப்பை முடித்தவர்கள்‌ 2019-ஆம்‌ ஆண்டில்‌ 78.6 சதவிகிதமாக இருந்தது 2024-ல்‌ 65 சதவிகிதமாகக்‌ குறைந்துவிட்டது. மாணவிகளைப்‌ பொறுத்தவரை 2019-ல்‌ 81.1 சதவிகிதமாக இருந்தது 2024-ல்‌ 65.4 சதவிகிதமாக குறைந்து பள்ளிப்‌ படிப்பை விட்டவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாயிற்று.

பீகாரில்‌ மேல்நிலைப்‌ பள்ளிப்‌ படிப்பை முடித்த மாணவர்கள்‌ எண்ணிக்கை 51.2 சதவிகிதம்‌ என்பது 38.8 சதவிகிதம்‌ என 12.4 சதவிகிதம்‌ குறைந்து இடையில்‌ விடுபவர்கள்‌ எண்ணிக்கை மிக மிக அதிகம்‌ என்பதை வெளிப்படுத்துகிறது. அதேபோல மாணவிகளைப்‌ பொறுத்தவரையிலும்‌, மேல்நிலைப்பள்ளிப்‌ படிப்பில்‌ 2019-ல்‌ 51.6 சதவிகிதமாக இருந்தது 2024-ல்‌ 9.3 சதவிகிதம்‌ குறைந்து அதாவது 42.3ஆக குறைந்து பள்ளிப்‌ படிப்பை இடையில்‌ விடுபவர்கள்‌ எண்ணிக்கை மிகவும்‌ அதிகரித்துள்ளது.

அசாம்‌ மாநிலத்தில்‌ பள்ளிப்‌ படிப்பை இடையில்‌ விட்டோர்‌

அசாம்‌ மாநிலத்தைப்‌ பொறுத்தவரை, பள்ளிப்‌படிப்பைத்‌ தொடங்கிய 100 மாணவர்களில்‌ நடுநிலைப்பள்ளிப்‌ படிப்பை முடித்தவர்கள்‌ 2019-ஆம்‌ ஆண்டில்‌ 93.4 சதவிகிதமாக இருந்தது 2024-ல்‌ 82.6 சதவிகிதமாகக்‌ குறைந்துவிட்டது. மாணவிகளைப்‌ பொறுத்தவரை 2019-ல்‌ 96.7 சதவிகிதமாக இருந்தது 2024-ல்‌ 88.7 சதவிகிதமாகக்‌ குறைந்து பள்ளிப்‌ படிப்பை விட்டவர்கள்‌ எண்ணிக்கை மிக அதிகமாயிற்று.

மேல்நிலைப்பள்ளிப்‌ படிப்பைப்‌ பொறுத்தவரை 2019-ல்‌ மாணவர்கள்‌ எண்ணிக்கை 62.6 என்பது 2024-ல்‌ 57.4 சதவிகிதமாகவும்‌; மாணவிகள்‌ எண்ணிக்கை 64.6 சதவிகிதம்‌ என்பது 63.7 சதவிகிதமாகவும்‌ குறைந்துவிட்டது.

அரியானா மாநிலத்தில்‌ பள்ளிப்‌ படிப்பை இடையில்‌ விட்டோர்‌

அரியானா மாநிலத்தை பொறுத்தவரை, பள்ளிப்‌ படிப்பைத்‌ தொடங்கிய 100 மாணவர்களில்‌ நடுநிலைப்பள்ளி படிப்பை முடித்தவர்கள்‌ 2019-ஆம்‌ ஆண்டில்‌ 98.3 சதவிகிதம்‌ என்பது 2024-ல்‌ 93 சதவிகிதமாகவும்‌; மாணவிகளைப்‌ பொறுத்தவரை 2019-ல்‌ 97.7 சதவிகிதம்‌ என்பது 2024-ல்‌ 95.6 சதவிகிதமாகவும்‌ குறைந்து பள்ளிப்‌ படிப்பை விட்டவர்கள்‌ எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மேல்நிலைப்பள்ளி படிப்பை பொறுத்தவரை 2019-ல்‌ மாணவர்கள்‌ எண்ணிக்கை 82.6 என்பது 2024-ல்‌ 77.3 சதவிகிதமாக குறைந்துவிட்டது.

ராஜஸ்தான்‌ மாநிலத்தில்‌ பள்ளிப்‌ படிப்பை இடையில்‌ விட்டோர்‌

ராஜஸ்தான்‌ மாநிலத்தில்‌, பள்ளிப்‌ படிப்பைத்‌ தொடங்கிய 100 மாணவர்களில்‌ நடுநிலைப்பள்ளி படிப்பை முடித்தவர்கள்‌ 2019-ஆம்‌ ஆண்டில்‌ 914.2 சதவிகிதம்‌ என்பது 2024-ல்‌ 84.8 சதவிகிதமாகவும்‌; மாணவிகளைப்‌ பொறுத்தவரை 2019-ல்‌ 90.8 சதவிகிதம்‌ என்பது 2024-ல்‌ 86.6 சதவிகிதமாகவும்‌ குறைந்து பள்ளிப்‌ படிப்பை விட்டவர்கள்‌ எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதேபோல, மேல்நிலைப்பள்ளி படிப்பை பொறுத்தவரை 2019-ல்‌ மாணவர்கள்‌ எண்ணிக்கை 78.6 என்பது 2024-ல்‌ 72.6 சதவிகிதமாகவும்‌; மாணவிகள்‌ எண்ணிக்கை 78 சதவிகிதம்‌ என்பது 76.9 சதவிகிதமாகவும்‌ குறைந்துவிட்டது. பீகார்‌, அசாம்‌, அரியானா, ராஜஸ்தான்‌ ஆகிய மாநிலங்களில்‌ பள்ளிப்‌ படிப்பை இடையில்‌ விடுவோர்‌ எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

என்னென்ன திட்டங்கள்?

முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌‌, தமிழ்நாட்டில்‌ பள்ளிப்‌ படிப்பில்‌ சேரும்‌ குழந்தைகள்‌ அனைவரும்‌ தொடர்ந்து படிக்க வேண்டும்‌ என்பதற்காகச்‌ செயல்படுத்தி வரும்‌ காலை உணவுத்‌ திட்டம்‌, திறன்மிகு வகுப்பறைகள்‌ திட்டம்‌, இல்லம்‌ தேடிக் கல்வி திட்டம்‌, எண்ணும்‌ எழுத்தும்‌ திட்டம்‌, வாசிப்புப்‌ பழக்கத்தை வளர்க்கும்‌ திட்டம்‌ மாற்றுத்‌ திறனாளி மாணவர்கள்‌ மீது தனி கவனம்‌ செலுத்தும்‌ திட்டம்‌, முதலிய திட்டங்களால்தான்‌ குழந்தைகள்‌ பள்ளிக்‌ கல்வியில்‌ இடைநிற்றல்‌ இல்லாமல்‌ தொடர்ந்து ஆர்வத்துடன்‌ படிப்பதில்‌ ஊக்கமும்‌ உற்சாகமும்‌ அடைகிறார்கள்‌ என்பது ஒன்றிய அரசின்‌ கல்வி அமைச்சக ஆய்வின்‌ மூலம்‌ தெரியவந்துள்ளது.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Vs Sengottaiyan: “அவர போய் கேளுங்க சார்“.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையன் பதில் என்ன தெரியுமா.?
“அவர போய் கேளுங்க சார்“.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையன் பதில் என்ன தெரியுமா.?
Varun Chakravarthy: வசூல் சக்கரவர்த்திக்காக காத்திருந்த வருண் சக்கரவர்த்தி.. லேட்டா வந்துட்டீங்களே பாஸ்.!
வசூல் சக்கரவர்த்திக்காக காத்திருந்த வருண் சக்கரவர்த்தி.. லேட்டா வந்துட்டீங்களே பாஸ்.!
"யோவ்.. பிஸ்தா பருப்பு" துணை முதலமைச்சரையே வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்
சிவன் கோயிலில் நந்தி ஏன்  வெளியிலேயே இருக்கிறார்? என்ன வரலாறு? - பக்தர்களே தெரிந்து கொள்ளுங்கள்
சிவன் கோயிலில் நந்தி ஏன்  வெளியிலேயே இருக்கிறார்? என்ன வரலாறு? - பக்தர்களே தெரிந்து கொள்ளுங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs Sengottaiyan: “அவர போய் கேளுங்க சார்“.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையன் பதில் என்ன தெரியுமா.?
“அவர போய் கேளுங்க சார்“.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையன் பதில் என்ன தெரியுமா.?
Varun Chakravarthy: வசூல் சக்கரவர்த்திக்காக காத்திருந்த வருண் சக்கரவர்த்தி.. லேட்டா வந்துட்டீங்களே பாஸ்.!
வசூல் சக்கரவர்த்திக்காக காத்திருந்த வருண் சக்கரவர்த்தி.. லேட்டா வந்துட்டீங்களே பாஸ்.!
"யோவ்.. பிஸ்தா பருப்பு" துணை முதலமைச்சரையே வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்
சிவன் கோயிலில் நந்தி ஏன்  வெளியிலேயே இருக்கிறார்? என்ன வரலாறு? - பக்தர்களே தெரிந்து கொள்ளுங்கள்
சிவன் கோயிலில் நந்தி ஏன்  வெளியிலேயே இருக்கிறார்? என்ன வரலாறு? - பக்தர்களே தெரிந்து கொள்ளுங்கள்
TN Agri Budget 2025: யப்பா.. வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி ஒதுக்கீடு... வேளாண் பட்ஜெட் முழு விவரங்கள் இதோ...
யப்பா.. வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி ஒதுக்கீடு... வேளாண் பட்ஜெட் முழு விவரங்கள் இதோ...
TN Agri Budget 2025: விவசாயிகள் கொண்டாட்டம் ..! ரூ.1,477 கோடி கடன் தள்ளுபடி - தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு
TN Agri Budget 2025: விவசாயிகள் கொண்டாட்டம் ..! ரூ.1,477 கோடி கடன் தள்ளுபடி - தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு
Patanjali: வெளிநாட்டிலும் ஆயுர்வேதத்தை பதஞ்சலி வளர்ப்பது எப்படி?
Patanjali: வெளிநாட்டிலும் ஆயுர்வேதத்தை பதஞ்சலி வளர்ப்பது எப்படி?
TN Agri Budget 2025: விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்: ரூ.6 லட்சம் மானியம், 1000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள்
TN Agri Budget 2025: விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்: ரூ.6 லட்சம் மானியம், 1000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள்
Embed widget