மேலும் அறிய

சித்தா க்ளினிக்கில் தவறான சிகிச்சையால் இளைஞர் உயிரிழப்பு - மருத்துவர் உட்பட 2 பேர் ஓட்டம்

நெல்லையில் தவறான சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்ததாக புகார், சித்த மருத்துவர் உட்பட 3 பேர் மீது வழக்குபதிவு, ஒருவர் கைது

நெல்லை மாவட்டம் கோவைகுளம் பகுதியை சேர்ந்தவர் மாரி, 25 வயதாகும் இவர் கூலித்தொழில் செய்து வருகிறார், கடந்த 2ஆம் தேதி அதிகப்படியான காய்ச்சலால் அவர்  பாதிக்கப்பட்ட அவர் மருதகுளம் பகுதியில் உள்ள தனியார் கிளினிக்கில்  சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் சிகிச்சை அளிக்கப்பட்டு இடுப்பில் ஊசி போடப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அங்கிருந்த மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில்  மருந்துகள் கொடுக்கப் பட்டுள்ளது. இதனையடுத்து அன்றிரவு மாரிக்கு இடுப்பில் கடுமையான வலி ஏற்பட்டு கால்   நடக்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து  மறுநாளும் அவர்  மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்,  அங்கு மீண்டும் அவருக்கு வேறு ஊசி போடப்பட்டு  மருந்துகள் கொடுக்கப்பட்டு அனுப்பியுள்ளனர். இருப்பினும் அவரது உடல்நிலை மிகவும் மோசமாகியதையடுத்து நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.  அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஊசி முறையாக செலுத்தாததால் நரம்பு மற்றும் ரத்த நாளங்கள் சேதமடைந்ததால் கால்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது,  மேலும் இடது காலில் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சை செய்த பின்னரும் அவரது காலில் மீண்டும் இரத்த ஓட்டம்  சீராக வில்லை,  இதன் காரணமாக  இடதுகாலை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என குடும்பத்தினரிடம்  அரசு மருத்துவர்கள் கூறியுள்ளனர்.  இல்லையெனில் உயிருக்கு ஆபத்தாகி விடும்  என அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர் இதனை அடுத்து மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாரியை குடும்பத்தினர் அழைத்துச் சென்றுள்ளனர், அங்கும் இளைஞரின்  காலை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில் கடந்த 13ஆம் தேதி மாரியின் தந்தை பேச்சி மூன்றடைப்பு காவல் நிலையத்தில் மருத்துவமனை மீதும் மருத்துவர்கள் மீதும் புகார் மனு  அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மூன்றடைப்பு போலீசார் சித்த மருத்துவர் சக்தி சித்த மருத்துவமனை  மாணவர் அருண் செல்வம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்,


சித்தா க்ளினிக்கில் தவறான சிகிச்சையால் இளைஞர்  உயிரிழப்பு -  மருத்துவர் உட்பட 2 பேர் ஓட்டம்

இதனிடையே  மீண்டும் மாரியை உறவினர்கள்  நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக மாரியை அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில்  நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து மாரியின் உறவினர்கள் அரசு மருத்துவமனை  முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதோடு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கும் தவறான சிகிச்சை அளித்தது தொடர்பாக புகார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் தலைமையிலான மருத்துவக்குழுவினர் மருத குளத்தில் உள்ள மாரி சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனையை மூடி சீல் வைத்தனர்.   அதனைத் தொடர்ந்து மூன்றடைப்பு காவல் நிலையத்தில் மாரியின் தந்தை அளித்த புகார் தொடர்பாக பதியப்பட்ட வழக்கு மரணத்தை ஏற்படுத்தும் விதமாக செயல்படுதல் (304), போலியாக மருத்துவர் என கூறி சிகிச்சை அளித்தல் 420, 417 உள்ளிட்ட பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் ஊசி செலுத்திய செவிலியர் இசக்கியம்மாளை  கைது செய்ததோடு சித்த மருத்துவர் சக்தி மற்றும் அருண் செல்வம் ஆகியோரையும்  போலீசார் தேடி வருகின்றனர். 


சித்தா க்ளினிக்கில் தவறான சிகிச்சையால் இளைஞர்  உயிரிழப்பு -  மருத்துவர் உட்பட 2 பேர் ஓட்டம்

இந்த சம்பவத்திற்கு காரணமான சித்த மருத்துவர் ஆங்கில மருந்துகளை வழங்கக்கூடாது, ஊசி செலுத்தக் கூடாது என சட்டம் இருக்கும் நிலையில் அவர் தவறான முறையில் ஊசி செலுத்தியதாலேயே மாரி உயிரிழந்தார் என  குற்றம் சாட்டிய உறவினர்கள் இது போன்ற தவறுகள் நடைபெறாத வண்ணம் துரிதமாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், இளைஞர் மாரியின் உயிரிழப்புக்கு காரணமான அனைவரின் மீதும் உரிய நடவடிக்கை எடுப்பதோடு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து 10,00,000/- வழங்க வேண்டும் என கூறி ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்த அவர்கள் தொடர்ந்து ஆட்சியரை சந்தித்து மனு அளித்து சென்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்வைஸ், இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, அத்துமீறிய பேராசிரியர்கள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்வைஸ், இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, அத்துமீறிய பேராசிரியர்கள் - 11 மணி வரை இன்று
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
Embed widget