மேலும் அறிய

ராமநாதபுரம் : ராமர் பாலம் கட்ட பயன்படுத்திய கல் என ஏமாற்று.. பவளப்பாறைகள் ஆன்லைனில் மோசடி விற்பனை..

'ராமர் பாலம் கட்டிய கல்' என்கிற பெயரில் ஆன்லைனில் 20 கிராம் ரூ. 5 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருவது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராமர் பாலம் கட்ட பயன்படுத்திய கல் என்கிற பெயரில் பவளப்பாறைகள் ஆன்லைனில் மோசடி விற்பனை: எச்சரிக்கும் வனத்துறை.!

தடை செய்யப்பட்ட பவளப்பாறைகளை 'ராமர் பாலம் கட்டிய கல்' என்கிற பெயரில் ஆன்லைனில் 20 கிராம் ரூ. 5 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருவது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் நூற்றுக்ம் மேற்பட்ட பவளப்பாறைகள் காணப்படுகினறன. இந்தப் பவளப்பாறைகளைச் சார்ந்தே கடல்பசு, டால்பின், கடல் ஆமைகள் என 500-க்கும் மேற்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன. மீன்களின் உறைவிடமாகவும், உணவிடமாகவும் விளங்கி வரும் பவளப்பாறைகளை விற்பனைக்காக வெட்டியெடுப்பது, பிளாஸ்டிக் கழிவுகள், தடை வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பது போன்ற காரணங்களால் அழியத் தொடங்கியது. அழிந்து வரும் பவளப்பாறைகளை பாதுகாக்க, செயற்கை பவளப் பாறைகள் வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன.


ராமநாதபுரம் : ராமர் பாலம் கட்ட பயன்படுத்திய கல் என ஏமாற்று.. பவளப்பாறைகள் ஆன்லைனில் மோசடி விற்பனை..

 

வடமாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஆன்மீகப் பயணமாக ராமேசுவரத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்காணோர் வந்து செல்கின்றனர். இவர்கள் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் புனித நீராடி விட்டு சாமி தரிசனம் முடிந்த பின் ராமேசுவரத்தைச் சுற்றியுள்ள கோயில்கள் மற்றும் தீர்த்தங்களுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதில் கோதண்டராமர் கோயில் மற்றும் ராமேசுவரம் ராமர் தீர்த்தத்திற்கு நீராட வரும் வட மாநில பக்தர்களிடம் மிதக்கும் தன்மை கொண்ட பவளப் பாறைகளை ராமர் பாலம் கட்டிய கல் என்று கூறி சிலர் விற்பனை செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தடை செய்யப்பட்ட பவளப்பாறைகளை 'ராமர் பாலம் கட்டிய கல்' என்கிற பெயரில் ஆன்லைனில் 20 கிராம் ரூ. 5 ஆயிரத்திற்கு விற்பனை செய்து வருவது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ராமநாதபுரம் : ராமர் பாலம் கட்ட பயன்படுத்திய கல் என ஏமாற்று.. பவளப்பாறைகள் ஆன்லைனில் மோசடி விற்பனை..

குறிப்பாக, வட மாநில மக்களுக்கு பவளப்பாறைகள் குறித்து தெரிய வாய்ப்பில்லை. காரணம் ஆந்திரா, லட்சத்தீவு, தமிழகம் ஆகிய கடற்கரை மாநிலங்களில் மட்டுமே பவளப்பாறைகள் அதிகம் உள்ளன. எனவே மக்களின் அறியாமையை பயன்படுத்தி அதில் ஆன்மீகத்தை சேர்த்து சில மாஃபியா கும்பல்கள் தடை செய்யப்பட்ட அரிய வகை பவளப்பாறைகளை ஆன்லைனில் விற்பனை செய்ய தொடங்கியுள்ளன. இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். வட மாநிலங்களில் இருந்து செயல்படும் வர்த்தக நிறுவனங்களுக்கு ராமேஸ்வரம் போன்ற கடற்கரை நகரங்களில் இருந்து சப்ளை செய்து வரும் உள்ளூர் நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதுடன், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


ராமநாதபுரம் : ராமர் பாலம் கட்ட பயன்படுத்திய கல் என ஏமாற்று.. பவளப்பாறைகள் ஆன்லைனில் மோசடி விற்பனை..

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,"உயர் தர ஆபரணங்கள் தயாரிப்பிற்கும், மீன் தொட்டிகளை அலங்கரிக்கவும், மீன்களை வளர்க்கவும், பவளப்பாறைகள் கடத்தி அழிக்கப்படுகின்றன. பவளப்பாறைகளை அழிப்பது எளிது. ஆனால் அதனை செயற்க்கையாக உண்டாக்குவது மிகவும் கடினம். பவளப் பாறைகளை அழிப்பதால் கடலில் வாழும் ஏராளமான உயிரினங்கள் அழிவதுடன், புவி வெப்பமயமாதலும் அதிகரிக்கும் அபாயங்களும் உள்ளன. உயிர் உள்ள பவளப்பாறைகளை கடலிலில் இருந்து எடுத்து வெயிலில் உலர்த்திய பின்னர் அது தண்ணீரில் மிதக்கும் திறனைப் பெற்று விடும். பவளப்பாறையை விற்பனை செய்தால் 3 முதல் 7 ஆண்டுகள் வரையிலும சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் முதல் அபராதமும் விதிக்கப்படும்" என்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL CSK vs RR: திக்.. திக்..த்ரில்..! போராடி தோற்ற சென்னை.. முதல் வெற்றி பெற்ற ராஜஸ்தான்
IPL CSK vs RR: திக்.. திக்..த்ரில்..! போராடி தோற்ற சென்னை.. முதல் வெற்றி பெற்ற ராஜஸ்தான்
ரம்ஜான் நாளில் வங்கி திறந்திருக்குமா? வெளியான அறிவிப்பு என்ன?
ரம்ஜான் நாளில் வங்கி திறந்திருக்குமா? வெளியான அறிவிப்பு என்ன?
TN Weather: தமிழ்நாட்டில் 6 இடங்களில் வெயில் சதம்! ஆனால், நாளை மறுநாள் இங்கு கனமழை ஸ்டார்ட்!
TN Weather: தமிழ்நாட்டில் 6 இடங்களில் வெயில் சதம்! ஆனால், நாளை மறுநாள் இங்கு கனமழை ஸ்டார்ட்!
பிறை தென்பட்டது..” தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்”- தலைமை காஜி அறிவிப்பு..டாப் 7 வாழ்த்து படங்கள்!
பிறை தென்பட்டது..” தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்”- தலைமை காஜி அறிவிப்பு..டாப் 7 வாழ்த்து படங்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shruthi Narayanan Video | ”ஆண்கள் LUST-க்கு ஏங்குறாங்க சுக்குநூறா உடைச்சிட்டீங்க” ஸ்ருதி நாராயணன் ஆவேசம் | Siragadikka AasaiWheel Chair Cricket | சக்கர நாற்காலி கிரிக்கெட் தேசிய கோப்பை வென்ற தமிழகம் சாதித்து காட்டிய மாற்றுத்திறனாளிகள்Sengottaiyan:  தமிழ்நாட்டின் ஏக்நாத் ஷிண்டே!செங்கோட்டையனுக்கு பாஜக Sketch! டெல்லி விசிட் பின்னணிVeera Dheera Sooran : ”திரையரங்க கண்ணாடி உடைப்பு” தொல்லை செய்த ரசிகர்கள்! கடுப்பில் கத்திய விக்ரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL CSK vs RR: திக்.. திக்..த்ரில்..! போராடி தோற்ற சென்னை.. முதல் வெற்றி பெற்ற ராஜஸ்தான்
IPL CSK vs RR: திக்.. திக்..த்ரில்..! போராடி தோற்ற சென்னை.. முதல் வெற்றி பெற்ற ராஜஸ்தான்
ரம்ஜான் நாளில் வங்கி திறந்திருக்குமா? வெளியான அறிவிப்பு என்ன?
ரம்ஜான் நாளில் வங்கி திறந்திருக்குமா? வெளியான அறிவிப்பு என்ன?
TN Weather: தமிழ்நாட்டில் 6 இடங்களில் வெயில் சதம்! ஆனால், நாளை மறுநாள் இங்கு கனமழை ஸ்டார்ட்!
TN Weather: தமிழ்நாட்டில் 6 இடங்களில் வெயில் சதம்! ஆனால், நாளை மறுநாள் இங்கு கனமழை ஸ்டார்ட்!
பிறை தென்பட்டது..” தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்”- தலைமை காஜி அறிவிப்பு..டாப் 7 வாழ்த்து படங்கள்!
பிறை தென்பட்டது..” தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்”- தலைமை காஜி அறிவிப்பு..டாப் 7 வாழ்த்து படங்கள்!
Vijay Shankar: வீறு கொண்டு எழுவாரா விஜய் சங்கர்? சிஎஸ்கே சிங்கமாக கர்ஜிப்பாரா?
Vijay Shankar: வீறு கொண்டு எழுவாரா விஜய் சங்கர்? சிஎஸ்கே சிங்கமாக கர்ஜிப்பாரா?
IPL 2025 CSK vs RR: செஞ்சு விட்ட ராணா! அடி வாங்கினாலும் அவுட்டாக்கிய அஸ்வின்!
IPL 2025 CSK vs RR: செஞ்சு விட்ட ராணா! அடி வாங்கினாலும் அவுட்டாக்கிய அஸ்வின்!
மீண்டும் ரயில் விபத்தா.. பெங்களூருவில் இருந்து கிளம்பிய ட்ரைனின் நிலை என்ன? பரபரப்பு
மீண்டும் ரயில் விபத்தா.. பெங்களூருவில் இருந்து கிளம்பிய ட்ரைனின் நிலை என்ன? பரபரப்பு
Shruthi Narayanan: ஆண்கள் காமத்திற்காக ஏங்குபவர்கள்.. ப்ளீஸ் நிறுத்துங்கள் - ஸ்ருதி நாராயணன் ஆவேசம்
Shruthi Narayanan: ஆண்கள் காமத்திற்காக ஏங்குபவர்கள்.. ப்ளீஸ் நிறுத்துங்கள் - ஸ்ருதி நாராயணன் ஆவேசம்
Embed widget