மேலும் அறிய

தூத்துக்குடி விமான நிலையத்தில் செட்டிநாடு அரண்மனை வடிவில் பயணிகள் முனையம்

ஏ-321 ரக விமானங்களை இயக்கும் வகையில் தற்போதுள்ள ஓடுபாதைகள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன.ஏ-321 ரக விமானங்களை பொறுத்தமட்டில் இதுபோன்ற 5 விமானங்களை நிறுத்தும் வகையில் தளங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன

தூத்துக்குடி விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தூத்துக்குடியில் இருந்து சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.  மேலும் விமான நிலையத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப விரிவாக்கம் செய்ய மத்திய விமான போக்குவரத்து ஆணையம் முடிவு செய்தது. இதற்காக மத்திய அரசு ரூ.388 கோடி நிதி ஒதுக்கி கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.


தூத்துக்குடி விமான நிலையத்தில் செட்டிநாடு அரண்மனை வடிவில் பயணிகள் முனையம்

இங்கு சிறிய வகை விமானங்கள் மட்டுமே வந்து செல்லும் ஓடுதளம் மட்டுமே இருந்து வரும் நிலையில் பெரிய விமானங்கள் வந்து செல்வதற்கு வசதியாக விமான ஓடுதளம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. ஏ-321 ரக விமானங்களை இயக்கும் வகையில் தற்போதுள்ள ஓடுபாதைகள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. ஏ-321 ரக விமானங்களை பொறுத்தமட்டில் இதுபோன்ற 5 விமானங்களை நிறுத்தும் வகையில் தளங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.


தூத்துக்குடி விமான நிலையத்தில் செட்டிநாடு அரண்மனை வடிவில் பயணிகள் முனையம்

 ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை மற்றும் கோபுரம், தொழில்நுட்ப கட்டிடம், தீயணைப்பு நிலையம் போன்ற பல்வேறு அத்தியாவசிய தேவைக்கான கட்டுமான பணிகளும் நடந்து வருகின்றன. கார் பார்க்கிங் வசதி, பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு பயன்படுத்தும் 2 ஏரோ பிரிட்ஜ், புதிய இணைப்பு சாலை உள்ளிட்ட நவீன வசதிகளுடன் பயணிகளுக்கு தேவையான அத்தனை வசதிகளுடன் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


தூத்துக்குடி விமான நிலையத்தில் செட்டிநாடு அரண்மனை வடிவில் பயணிகள் முனையம்

தூத்துக்குடி விமான நிலையத்தில் 13,500 சதுர மீட்டர் பரப்பளவில் 600 பயணிகளை கையாளும் வகையில் புதிய முனையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. புதிய பயணிகள் முனையத்தின் முகப்பு பகுதி தமிழகத்தின் பாரம்பரிய கட்டிடமான செட்டிநாடு அரண்மனை தோற்றத்தில் அமைக்கப்படுகிறது. மேலும், இந்த கட்டிடத்தின் உட்புற பகுதிகள் தூத்துக்குடியின் சிறப்புகள் மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்படுகின்றன. 


தூத்துக்குடி விமான நிலையத்தில் செட்டிநாடு அரண்மனை வடிவில் பயணிகள் முனையம்

மேலும், பெரிய விமானங்கள் தரையிறங்கும் வகையில் ஓடுதளம் விரிவாக்கம், ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை மற்றும் சிக்னல் கோபுரம், தொழில்நுட்ப கட்டிடம், தீயணைப்பு நிலையம், கார் பார்க்கிங் வசதி, பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு பயன்படுத்தும் 2 ஏரோ பிரிட்ஜ், புதிய இணைப்பு சாலை போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் அடுத்த ஆண்டு (2023) இறுதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தூத்துக்குடி விமான நிலையத்தில் செட்டிநாடு அரண்மனை வடிவில் பயணிகள் முனையம்

இந்நிலையில் விமான விமான நிலைய விரிவாக்க பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விமான நிலைய விரிவாக்க பணிகளின்போது மின்கம்பங்களை மாற்றி அமைப்பது குறித்தும், பொதுப்பாதை அமைப்பது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். தொடர்ந்து விமான நிலைய விரிவாக்க பணிகளின் தற்போதைய  நிலை குறித்து, விமான நிலைய அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின் போது விமான நிலைய இயக்குநர் சிவபிரசாத், மேலாளர் ஜெயராமன், தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
Zomato Search Trends: ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato!
Zomato Search Trends: ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato!
Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 3 சிங்கப்பெண்கள்:  துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது
Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 3 சிங்கப்பெண்கள்: துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது
அலறிய போலீஸ் ஸ்டேஷன்.. வெட்டிய தலையுடன் சென்றதால் பரபரப்பு.. தந்தை மகன் வெறிச்செயல்! 
அலறிய போலீஸ் ஸ்டேஷன்.. வெட்டிய தலையுடன் சென்றதால் பரபரப்பு.. தந்தை மகன் வெறிச்செயல்! 
Nimisha Priya: கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு
கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு
Embed widget