மேலும் அறிய

பாளையங்கோட்டை சிறையில் ஜாதிய மோதலை தடுக்க சிறைவாசிகளுக்கு தனித்தனி அறைகள் - சிறைத்துறை டிஐஜி

பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் சிறைவாசிகளை கொண்டு இயற்கை முறையில் விவசாயம் செய்யும் பணிகள் விரைவில் மீண்டும் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.

நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் சிறைத்துறை டிஐஜி பழனி நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக  நன்னடத்தை சிறைவாசிகளை விடுதலை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் படிப்படியாக சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டு வருவது தொடர்பாகவும், சிறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அன்றாட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து நன்னடத்தை கைதிகளை கொண்டு சிறைகளில் செயல்பட்டு வரும் சிறை அங்காடி மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளிட்டவற்றில் ஆய்வு மேற்கொண்டார். நன்னடத்தை சிறைவாசிகளை கொண்டு இயக்கப்பட்டு வரும் பெட்ரோல் நிலையத்தில் பொதுமக்கள் சிறைவாசிகளுக்கான மருத்துவ முகாமை தொடக்கி வைத்தார். தொடர்ந்து முதலமைச்சரின் என் மஞ்சள் பைத்திட்டத்தையும் செயல்படுத்தி வைத்த சிறைத்துறை டிஐஜி பழனி செய்தியாளர்களை சந்தித்தார்.


பாளையங்கோட்டை  சிறையில்  ஜாதிய மோதலை தடுக்க சிறைவாசிகளுக்கு தனித்தனி அறைகள் -  சிறைத்துறை டிஐஜி


அப்போது பேசிய அவர், பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் சிறைவாசிகளை கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் கடந்த மூன்று வருடங்களில் மட்டும் ஐந்தரை கோடி வரை  லாபம் ஈட்டி உள்ளது, தமிழகத்தில் நன்னடத்தை சிறைவாசிகளை கொண்டு ஐந்து பெட்ரோல் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் 5 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் சிறைவாசிகளை கொண்டு இயற்கை முறையில் விவசாயம் செய்யும் பணிகள் விரைவில் மீண்டும் தொடங்கும் என்றும் தெரிவித்தார். பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையை பொருத்தவரையில் தடை செய்யப்பட்ட கஞ்சா, பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதை வஸ்துகள் நடமாட்டம் குறைந்திருப்பதாகவும், அந்த கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


பாளையங்கோட்டை  சிறையில்  ஜாதிய மோதலை தடுக்க சிறைவாசிகளுக்கு தனித்தனி அறைகள் -  சிறைத்துறை டிஐஜி

மேலும் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் இருந்து 63 நன்னடத்தை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திருந்த அதன் அடிப்படையில் முதல் கட்டமாக 8 பேர் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைகளுக்குள் கைதிகளுக்கு இடையே ஏற்படும் மோதலை தடுக்க தீவிரமான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த சிறைத்துறை டிஐஜி பழனி கடந்த காலங்களில் நடந்தது போன்று பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே ஜாதி ரீதியிலான மோதல் ஏற்படாமல் இருக்க சிறைவாசிகளுக்கு தனித்தனியே அறைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கண்காணிப்பை தீவிரப்படுத்த மேலும் அதிகமான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget