மேலும் அறிய

திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

மதுரையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் உயர்நீதிமன்ற உத்தரவுபடி தீபம் ஏற்றாததை கண்டித்து இந்து முண்ணனியினர் கோவில் மற்றும் மலையை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்திய போது தடுப்புகளை தள்ளிவிட்டு முற்றுகையிட முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் எனவும், அதற்கான பாதுகாப்பை காவல்துறையினர் வழங்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி சி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் ஆண்டுதோறும் தீபம் ஏற்றும் பகுதியான திருப்பரங்குன்றம் கோவில் மலை மேல் உள்ள உச்சி பிள்ளையார் கோவில் அருகே உள்ள பகுதியில் தீபம் ஏற்றப்பட்டது.

ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மலை உச்சியில் தீப தூணில் தீபம் ஏற்றவில்லை இதையடுத்து தீபத்தூணில் தீபம் ஏற்றாததை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் கோவில் மற்றும் திருப்பரங்குன்றம் மலையை நோக்கி சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட தடுப்புகளை உடைத்து உள்ளே வந்ததால் காவல்துறையினருடன் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பாதுகாப்பு பணியில் இருந்த இரண்டு காவலர்களுக்கு காயம் ஏற்பட்டது.

இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தீபத்தூணில் மனுதாரர் 6 நபர்களுடன் சென்று தீபம் ஏற்றலாம் எனவும் அதற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் பகுதியில் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.

இதனிடையே உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மனுதாரர்களுடன் தீபத்தூணிற்கு சென்று தீபம் ஏற்றுவதற்கு பாதுகாப்பிற்காக 62 CISF படையினர் மலைப்பாதை பகுதிக்கு வருகை தந்தனர் அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மாநகர காவல் ஆணையர் லோகநாதன்  CISF படையினர் மலை மேல் செல்வதற்கு அனுமதி இல்லை என கூறியதால் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது 

பின்னர் சென்னை உயர் நீதிமன்ற அமர்வு நிர்வாக நீதிபதியிடம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு முறையீடு செய்யப்பட்டதால் நாளை காலை முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கூறியதையடுத்து தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்காக பாதுகாப்பு பணிக்காக வந்த CISF படையினர் மீண்டும் திரும்பிச் சென்றனர். இதையடுத்து திருப்பரங்குன்றம் மலைப்பாதை முன்பாக அமர்ந்து இந்து முன்னணி  மற்றும் பாஜகவினர் தீபத்தூணில் தீபம் ஏற்ற கூறி போராட்டம் நடத்தினர்

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Ramesh: கோயில் நிலம் ஆக்கிரமிப்பா? நடவடிக்கை எடுக்க நாங்க ரெடி - அமைச்சர் ரமேஷ் அசத்தல் அறிவிப்பு
TVK Ramesh: கோயில் நிலம் ஆக்கிரமிப்பா? நடவடிக்கை எடுக்க நாங்க ரெடி - அமைச்சர் ரமேஷ் அசத்தல் அறிவிப்பு
பெண்ணிடம் இருந்து 6 கிராம் தாலியை பறித்துச் சென்ற மர்மநபர்... பேராவூரணியில் பரபரப்பு
பெண்ணிடம் இருந்து 6 கிராம் தாலியை பறித்துச் சென்ற மர்மநபர்... பேராவூரணியில் பரபரப்பு
பாம்பு கடித்தால் பதற வேண்டாம்... உரிய சிகிச்சை பெற்றால் உயிரிழப்பை தவிர்க்கலாம்!
பாம்பு கடித்தால் பதற வேண்டாம்... உரிய சிகிச்சை பெற்றால் உயிரிழப்பை தவிர்க்கலாம்!
சென்னையில் மெட்ரோவின் புதிய சாதனை! இயங்கும் ‘ப்ளூ லைன்’ கீழே முடிந்தது பிரம்மாண்ட சுரங்கப் பணி!
சென்னையில் மெட்ரோவின் புதிய சாதனை! இயங்கும் ‘ப்ளூ லைன்’ கீழே முடிந்தது பிரம்மாண்ட சுரங்கப் பணி!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“வேங்கைவயல் விவகாரத்தில் தி.மு.க. மன்னிப்பு கேட்க வேண்டும்” - வன்னியரசு அதிரடி!
“வேங்கைவயல் விவகாரத்தில் தி.மு.க. மன்னிப்பு கேட்க வேண்டும்” - வன்னியரசு அதிரடி!
PM மோடிக்கு CM விஜய் கடிதம்.! சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்க திட்டம் - கொதித்தெழுந்த CPI
PM மோடிக்கு CM விஜய் கடிதம்.! சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்க திட்டம் - கொதித்தெழுந்த CPI
Gudalur Tiger : கூடலூர் டைகர் ஆபரேஷன்! புலியை சிக்க வைத்த வனத்துறையின் மாஸ்டர் பிளான்- நடந்தது என்ன?
கூடலூர் டைகர் ஆபரேஷன்! புலியை சிக்க வைத்த வனத்துறையின் மாஸ்டர் பிளான்- நடந்தது என்ன?
Ajith Kumar: பத்திக்கிச்சு ஒரு ராட்சச திரி.. Dare Devil படத்தின் புதிய அப்டேட்டை தந்த அஜித்குமார்!
Ajith Kumar: பத்திக்கிச்சு ஒரு ராட்சச திரி.. Dare Devil படத்தின் புதிய அப்டேட்டை தந்த அஜித்குமார்!
Vijay Sethupathi: பிக்பாஸ் வீட்டைத்தான் பேசுனேன்.. வேற யாரையும் பேசல.. விளக்கம் அளித்த விஜய் சேதுபதி
Vijay Sethupathi: பிக்பாஸ் வீட்டைத்தான் பேசுனேன்.. வேற யாரையும் பேசல.. விளக்கம் அளித்த விஜய் சேதுபதி
சேலத்தை இன அழிப்பு முகாமாக மாற்றத் துடிப்பதா? புற்றுநோய், ஆஸ்துமா ஆபத்து: அன்புமணி பகீர்!
சேலத்தை இன அழிப்பு முகாமாக மாற்றத் துடிப்பதா? புற்றுநோய், ஆஸ்துமா ஆபத்து: அன்புமணி பகீர்!
Kolathur MLA V S Babu : வி.எஸ்.பாபு உடல் நிலையில் நம்பிக்கையூட்டும் வகையில் முன்னேற்றம்.! மருத்துவமனை வெளியிட்ட முக்கிய அறிக்கை
வி.எஸ்.பாபு உடல் நிலையில் நம்பிக்கையூட்டும் வகையில் முன்னேற்றம்.! மருத்துவமனை வெளியிட்ட முக்கிய அறிக்கை
இடைத்தேர்தல் ஆதரவு இல்லை.. கைவிரித்த அன்புமணி.. அப்செட்டில் எடப்பாடி பழனிசாமி.. கூட்டணி விரிசலா?
இடைத்தேர்தல் ஆதரவு இல்லை.. கைவிரித்த அன்புமணி.. அப்செட்டில் எடப்பாடி பழனிசாமி.. கூட்டணி விரிசலா?
Embed widget