மேலும் அறிய

‘We are not allowing’ இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் கமிஷனர் - யார் இந்த லோகநாதன் IPS?

'மிகமுக்கியமாக நேற்று திருப்பரங்குன்றத்தில் லோகநாதனின் சரியான திட்டமிடல் மற்றும் அணுகுமுறையால் பெரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது’

நேற்று மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபதூணில் தீபம் ஏற்ற வேண்டும் வந்த இந்து முன்னணியினரிடம் ‘We are not allowing’ என்று சொல்லி தடுத்து நிறுத்திவர்தான் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன்.

லோகநாதன் ஐபிஎஸ்
லோகநாதன் ஐபிஎஸ்

முன் கூட்டியே தக்க பாதுகாப்பை செய்த கமிஷனர்

திருப்பரங்குன்றம் மலை பிரச்னை ஏற்கனவே சர்ச்சையில் இருக்கும் நிலையில், அதைவைத்து கார்த்திகை தீப திருநாளன்று அசாம்பவிதம் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது ஏற்கனவே திட்டமிட்டு நூற்றக்கணக்கான போலீசாரை பாதுகாப்பிற்கு நிறுத்தியிருந்தார் காவல் ஆணையர் லோகநாதன். ஆனால், நீதிமன்றம் உத்தரவிட்டுவிட்டது என்று கூறி இந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம.ரவிகுமார் என்பவர் தன்னுடைய ஆதரவாளர்களுடன் திருப்பரங்குன்றம் மலையை ஏற முயற்சித்தார்.

ஆனால், அவர்களை மதுரை காவல் ஆணையர் லோகநாதன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், மலையில் ஏற அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து இந்து முன்னணியினர், இந்து தமிழர் கட்சியினர் அங்கிருந்த தடுப்புகளை எல்லாம் தூக்கி எறிந்து அசாதாரண சூழலை ஏற்படுத்த முயன்றனர்.

உடனடியாக உஷாரான காவல்துறையினர் அசாம்பவிதம் ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டவர்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தியது, சிலரை உடனுக்குடன் தடுப்புக் காவலில் கொண்டுச் சென்றது.

அனுமதிக்க மாட்டோம் ; விளைவுகளை சந்திக்கிறோம் – போலீஸ் கமிஷனர்

இந்நிலையில், அங்கிருந்த காவல் ஆணையர் லோகநாதனிடமும், ராம ரவிக்குமார் வழக்கறிஞர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கினர். மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவோடு வந்திருக்கிறோம். எங்களை ஏன் அனுமதிக்க மறுக்கின்றீர்கள் என்று அவர்கள் கேட்க, அதற்கு போலீஸ் கமிஷனர் லோகநாதன், இங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது. நீங்கள் இப்படி சென்று மலையில் தீபம் ஏற்றினால் சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்பட்டு அது கலவரமாக மாறவும் வாய்ப்பிருக்கிறது. அதனால் உங்களை மலையேற அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

‘We are not allowing’ ஒரே வார்த்தையில் சொன்ன கமிஷனர் லோகநாதன்

இந்நிலையில், ராம.ரவிக்குமாரின் வழக்கறிஞர்கள் நீதிமன்ற உத்தரவு இருக்கிறது. நீதிமன்ற உத்தரவை ஏற்று நடப்பீர்களா ? இல்லையா ? அதைச் சொல்லுங்கள் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார். அதற்கு பதிலளித்த கமிஷனர் லோகநாதன், உங்களுக்கு இங்கு இருக்கும் சூழல் புரிகிறதா ? இல்லையா ? உங்களை அனுமதிக்க முடியாது. ‘We are not allowing’ என்று சொன்னதோடு, நீதிமன்றத்தை உத்தரவை காட்டி பயமுறுத்திய வழக்கறிஞர்களிடம், உங்களை அனுமதிக்காததால் வரும் விளைவுகளையும் சந்திக்க நான் தயார் என்று அதிரடியாக கூறினார்.

யார் இந்த லோகநாதன் IPS..?

கடந்த ஆகஸ்ட் 2023ஆம் ஆண்டு மதுரை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டவர் லோகநாதன். 2002 பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியான லோகநாதன், திருநெல்வேலியில் உதவி காவல் கண்காணிப்பாளராக தமிழ்நாட்டில் தன்னுடைய பணியை தொடங்கியவர். தருமபுரி, புதுக்கோட்டை மற்றும் சிபிசிஐடியில் எஸ்.பியாக பணியாற்றிய லோகநாதன், சென்னையிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜியாக பணியாற்றிய லோகநாதன் பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகர காவல் ஆணையராகவும் பணியாற்றினார். அதோடு, சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் கூடுதல் காவல் ஆணையராகவும் பணியாற்றியவர்.

மதுரை மாநகரின் சட்ட ஒழுங்கை முறையாக கவனிக்க தமிழ்நாடு அரசால் தேர்வு செய்யப்பட்டு அங்கு 2023ல் அனுப்பி வைக்கப்பட்டார் லோகநாதன். சிறு தீப்பொறி விழுந்தாலே அது பெருங்காடு போல பற்றி எரியத்தொடங்கிடும் கந்தக பூமியான மதுரை மாநகரில் அவர் நியமிக்கப்பட்ட இந்த இரண்டு வருடத்தில் பெரிய குற்றச்சம்பவங்கள் நடைபெறாமலும், கலவரம் உள்ளிட்ட அசம்பாதவிதங்கள் நடைபெறாமலும் தடுத்து வந்தவர். மிகமுக்கியமாக நேற்று திருப்பரங்குன்றத்தில் அவருடைய சரியான திட்டமிடல் மற்றும் அணுகுமுறையால் பெரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது.

 

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read More

தலைப்பு செய்திகள்

பழனி மட நில மோசடி: வெள்ளத்துரை முன்ஜாமின் மனு தள்ளுபடி! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
பழனி மட நில மோசடி: வெள்ளத்துரை முன்ஜாமின் மனு தள்ளுபடி! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
நீட் போராட்டம்: மதுரையில் மாணவர்கள், பெண்கள் வலுக்கட்டாயமாக கைதால் பரபரப்பு !
நீட் போராட்டம்: மதுரையில் மாணவர்கள், பெண்கள் வலுக்கட்டாயமாக கைதால் பரபரப்பு !
அரசு வேலை கனவா? மதுரை இலவச பயிற்சி: SSC, RRB தேர்வுகளுக்கு அரிய வாய்ப்பு!
அரசு வேலை கனவா? மதுரை இலவச பயிற்சி: SSC, RRB தேர்வுகளுக்கு அரிய வாய்ப்பு!
ராமேஸ்வரத்தில் ரூ.4.70 கோடியில் பிரம்மாண்ட ஓடும் தொழிலாளர் ஓய்வறை: பாதுகாப்பான ரயில் பயணத்திற்கு அடித்தளம்!
ராமேஸ்வரத்தில் ரூ.4.70 கோடியில் பிரம்மாண்ட ஓடும் தொழிலாளர் ஓய்வறை: பாதுகாப்பான ரயில் பயணத்திற்கு அடித்தளம்!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JanaNayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
CM ஓவர்.. அடுத்த டார்கெட் PM.. காங்கிரசை அலற வைக்கும் விஜய்யின் மாஸ்டர் பிளான்- நடப்பது என்ன.?
CM ஓவர்.. அடுத்த டார்கெட் PM.. காங்கிரசை அலற வைக்கும் விஜய்யின் மாஸ்டர் பிளான்- நடப்பது என்ன.?
Skoda Mileage SUV: ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்
ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்
ஜனநாயகனை பார்த்து தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஷ்.! சோகத்தில் தியேட்டர்- இது தான் காரணமா.?
ஜனநாயகனை பார்த்து தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஷ்.! சோகத்தில் தியேட்டர்- இது தான் காரணமா.?
Embed widget