மேலும் அறிய

மிகப்பெரிய அங்கீகாரமாக எனது நூல்களை அரசுடமையாக்கிய தமிழக அரசுக்கு நன்றி - வரலாற்று ஆய்வாளர் திவான்

”நெல்லையில் மறைக்கப்பட்ட வரலாற்றை வெளியில் கொண்டுவர வேண்டும் என்பதே எனது நீண்ட கால ஆசை, அதனை நோக்கியே என் பயணம் இருக்கும்”

நெல்லை பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் வரலாற்று ஆய்வாளர் திவான். இவர் 1954 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நாள் செய்யது மசூது மற்றும் காசினம்மாள் பீவி தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். விவசாயக் குடும்பத்தை சேர்ந்த இவர் கல்லூரி மாணவராக இருக்கும் போது திராவிட இயக்க  அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். மேலும் இவர்  மறைக்கப்பட்ட, யாரும் அறியாத பல்வேறு வரலாறுகளை கண்டறிந்து  ஆய்வு செய்து  வெளி உலகிற்கு கொண்டு வந்துள்ளார். 68 வயதாகும் இவர் தற்போதும் புத்தங்கள் தொடர்ந்து எழுதி வருகிறார், தனது வீட்டையே நூலகமாக மாற்றி 2 லட்சத்திற்கும் மேற்பட்ட  அரிய புத்தகங்களை சேகரித்து வைத்துள்ளார்.


மிகப்பெரிய அங்கீகாரமாக எனது நூல்களை அரசுடமையாக்கிய தமிழக அரசுக்கு நன்றி - வரலாற்று ஆய்வாளர் திவான்

புத்தகங்கள் மீது தீரா காதல் கொண்ட இவர் இதுவரை விடுதலைப் போரில் தமிழக முஸ்லிம்கள் பங்கு, வ.உ.சியும் பாரதியும், திராவிட இயக்கம் வரலாற்றுக் குறிப்புகள், இந்து - முஸ்லீம் ஒற்றுமை என 150 புத்தகங்கள் எழுதியுள்ளார். வரலாறு, இலக்கியம், சுதந்திரப் போராட்டம், பக்தி இலக்கியம்  என பலதுறைகளில் நூல்கள் எழுதி சாதனை படைத்துள்ளார். வரலாற்று நூல்கள் மட்டுமின்றி ஸ்டெர்லைட், கூடங்குளம் அணு உலை, சேது சமுத்திர திட்டம், கச்சத்தீவு உள்ளிட்ட சமகால மக்கள் பிரச்சனைகள் குறித்தும் நூல்களை எழுதியுள்ளார். மேலும் உமறுப்புலவர் விருது, தமிழ்மாமணி, தமிழ் அறிஞர், வரலாற்றுப் பேரறிஞர், காய்தேமில்லத், பெரியார், வரலாற்றியல் அறிஞர் உள்பட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். 


மிகப்பெரிய அங்கீகாரமாக எனது நூல்களை அரசுடமையாக்கிய தமிழக அரசுக்கு நன்றி - வரலாற்று ஆய்வாளர் திவான்

தொடர்ந்து இலக்கிய உலகில் சாதித்து வரும் வரலாற்று ஆய்வாளர் திவான் எழுதிய 150 நூல்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுடமையாக்கி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து திவான் கூறுகையில்,  நான் சிறுவயது முதலே  திராவிட இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவன். எனது திருமணமே முத்தமிழ் அறிஞர் கலைஞர் தலைமையில் நடந்தது. திரவிட இயக்க தலைவர்கள் பற்றி அதாவது பட்டுக்கோட்டை அழகிரி சாமி, கேவிகே சாமி கட்டுரைகள், கேவிகே சாமி, அண்ணாவின் மறுபக்கம், அண்ணாவின் பொன்மொழிகள், திராவிட இயக்க வரலாற்று குறிப்புகள் என 10 க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளேன், அதே போல மத்திய கால இந்தியாவின் வரலாற்றில் துக்ளக், மாலிக்கபூர் போன்றோரை பற்றியும், பிரிட்டீஸ் ஆதிக்க காலத்தில் இந்திய சுதந்திர பெரும் போர் பற்றி 1072 பக்கம் எழுதியுள்ளேன். வ.உ.சி பற்றி மட்டும் 25 நூல்கள் எழுதியுள்ளேன். வ உசியின் உயிலை தேடி கண்டுபிடித்து தமிழ்நாட்டில் பதிப்பித்துள்ளேன்.

பாரதியை பற்றி 5 நூல்களும்  எழுதியுள்ளேன், சுப்பிரமணிய சிவா, வீரபாண்டிய கட்டபொம்மன் என  அனைத்து துறைகளையும் பற்றி எழுதியுள்ளேன். வரலாறு, இலக்கியம், பக்தி, என எல்லாத்துறைகளிலும் நூல்கள் எழுதியுள்ளேன். இதுவரை 150 புத்தகங்கள் எழுதியுள்ளேன், அதில் 143 புத்தகங்கள் வெளிவந்துள்ளது. மீதமுள்ள புத்தகங்கள் விரைவில் வெளிவரும் என கூறினார். மேலும் அவர் கூறுகையில், நெல்லையில் மறைக்கப்பட்ட வரலாற்றை வெளியில் கொண்டுவர வேண்டும் என்பதே எனது நீண்ட கால ஆசை, அதனை நோக்கியே என் பயணம் இருக்கும். தற்போது எனக்கு தமிழக அரசு மிகப்பெரிய அங்கீகாரமாக எனது நூல்களை அரசுடமையாக்கியுள்ளது.  இதற்காக தமிழக முதல்வருக்கும், இந்த அரசுக்கும் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN SIR Voter List LIVE: சென்னையில் இத்தனை பேர் நீக்கமா! SIR வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு:மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
TN SIR Voter List LIVE: சென்னையில் இத்தனை பேர் நீக்கமா! SIR வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு:மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN SIR Voter List LIVE: சென்னையில் இத்தனை பேர் நீக்கமா! SIR வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு:மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
TN SIR Voter List LIVE: சென்னையில் இத்தனை பேர் நீக்கமா! SIR வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு:மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
Embed widget