மேலும் அறிய

மிகப்பெரிய அங்கீகாரமாக எனது நூல்களை அரசுடமையாக்கிய தமிழக அரசுக்கு நன்றி - வரலாற்று ஆய்வாளர் திவான்

”நெல்லையில் மறைக்கப்பட்ட வரலாற்றை வெளியில் கொண்டுவர வேண்டும் என்பதே எனது நீண்ட கால ஆசை, அதனை நோக்கியே என் பயணம் இருக்கும்”

நெல்லை பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் வரலாற்று ஆய்வாளர் திவான். இவர் 1954 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நாள் செய்யது மசூது மற்றும் காசினம்மாள் பீவி தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். விவசாயக் குடும்பத்தை சேர்ந்த இவர் கல்லூரி மாணவராக இருக்கும் போது திராவிட இயக்க  அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். மேலும் இவர்  மறைக்கப்பட்ட, யாரும் அறியாத பல்வேறு வரலாறுகளை கண்டறிந்து  ஆய்வு செய்து  வெளி உலகிற்கு கொண்டு வந்துள்ளார். 68 வயதாகும் இவர் தற்போதும் புத்தங்கள் தொடர்ந்து எழுதி வருகிறார், தனது வீட்டையே நூலகமாக மாற்றி 2 லட்சத்திற்கும் மேற்பட்ட  அரிய புத்தகங்களை சேகரித்து வைத்துள்ளார்.


மிகப்பெரிய அங்கீகாரமாக எனது நூல்களை அரசுடமையாக்கிய தமிழக  அரசுக்கு  நன்றி - வரலாற்று ஆய்வாளர் திவான்

புத்தகங்கள் மீது தீரா காதல் கொண்ட இவர் இதுவரை விடுதலைப் போரில் தமிழக முஸ்லிம்கள் பங்கு, வ.உ.சியும் பாரதியும், திராவிட இயக்கம் வரலாற்றுக் குறிப்புகள், இந்து - முஸ்லீம் ஒற்றுமை என 150 புத்தகங்கள் எழுதியுள்ளார். வரலாறு, இலக்கியம், சுதந்திரப் போராட்டம், பக்தி இலக்கியம்  என பலதுறைகளில் நூல்கள் எழுதி சாதனை படைத்துள்ளார். வரலாற்று நூல்கள் மட்டுமின்றி ஸ்டெர்லைட், கூடங்குளம் அணு உலை, சேது சமுத்திர திட்டம், கச்சத்தீவு உள்ளிட்ட சமகால மக்கள் பிரச்சனைகள் குறித்தும் நூல்களை எழுதியுள்ளார். மேலும் உமறுப்புலவர் விருது, தமிழ்மாமணி, தமிழ் அறிஞர், வரலாற்றுப் பேரறிஞர், காய்தேமில்லத், பெரியார், வரலாற்றியல் அறிஞர் உள்பட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். 


மிகப்பெரிய அங்கீகாரமாக எனது நூல்களை அரசுடமையாக்கிய தமிழக  அரசுக்கு  நன்றி - வரலாற்று ஆய்வாளர் திவான்

தொடர்ந்து இலக்கிய உலகில் சாதித்து வரும் வரலாற்று ஆய்வாளர் திவான் எழுதிய 150 நூல்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுடமையாக்கி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து திவான் கூறுகையில்,  நான் சிறுவயது முதலே  திராவிட இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவன். எனது திருமணமே முத்தமிழ் அறிஞர் கலைஞர் தலைமையில் நடந்தது. திரவிட இயக்க தலைவர்கள் பற்றி அதாவது பட்டுக்கோட்டை அழகிரி சாமி, கேவிகே சாமி கட்டுரைகள், கேவிகே சாமி, அண்ணாவின் மறுபக்கம், அண்ணாவின் பொன்மொழிகள், திராவிட இயக்க வரலாற்று குறிப்புகள் என 10 க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளேன், அதே போல மத்திய கால இந்தியாவின் வரலாற்றில் துக்ளக், மாலிக்கபூர் போன்றோரை பற்றியும், பிரிட்டீஸ் ஆதிக்க காலத்தில் இந்திய சுதந்திர பெரும் போர் பற்றி 1072 பக்கம் எழுதியுள்ளேன். வ.உ.சி பற்றி மட்டும் 25 நூல்கள் எழுதியுள்ளேன். வ உசியின் உயிலை தேடி கண்டுபிடித்து தமிழ்நாட்டில் பதிப்பித்துள்ளேன்.

பாரதியை பற்றி 5 நூல்களும்  எழுதியுள்ளேன், சுப்பிரமணிய சிவா, வீரபாண்டிய கட்டபொம்மன் என  அனைத்து துறைகளையும் பற்றி எழுதியுள்ளேன். வரலாறு, இலக்கியம், பக்தி, என எல்லாத்துறைகளிலும் நூல்கள் எழுதியுள்ளேன். இதுவரை 150 புத்தகங்கள் எழுதியுள்ளேன், அதில் 143 புத்தகங்கள் வெளிவந்துள்ளது. மீதமுள்ள புத்தகங்கள் விரைவில் வெளிவரும் என கூறினார். மேலும் அவர் கூறுகையில், நெல்லையில் மறைக்கப்பட்ட வரலாற்றை வெளியில் கொண்டுவர வேண்டும் என்பதே எனது நீண்ட கால ஆசை, அதனை நோக்கியே என் பயணம் இருக்கும். தற்போது எனக்கு தமிழக அரசு மிகப்பெரிய அங்கீகாரமாக எனது நூல்களை அரசுடமையாக்கியுள்ளது.  இதற்காக தமிழக முதல்வருக்கும், இந்த அரசுக்கும் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi Video: பகவதி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்!
பகவதி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்!
Indian 2 Audio Launch: ரசிகர்களே ரெடியாகுங்க! இந்தியன் 2 ஆடியோ லாஞ்ச் - வெளியானது தேதி!
Indian 2 Audio Launch: ரசிகர்களே ரெடியாகுங்க! இந்தியன் 2 ஆடியோ லாஞ்ச் - வெளியானது தேதி!
Jammu Kashmir Accident: 150 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 21 பேர் பலி - ஜம்மு காஷ்மீரில் சோகம்
Jammu Kashmir Accident: 150 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 21 பேர் பலி - ஜம்மு காஷ்மீரில் சோகம்
TN Weather: திருத்தணியில் 109 டிகிரி வெயில் கொளுத்தியது: சிரமத்திற்குள்ளான மக்கள்
TN Weather: திருத்தணியில் 109 டிகிரி வெயில் கொளுத்தியது: சிரமத்திற்குள்ளான மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Modi at Bhagavathy amman temple | ”தாயே வெற்றியை கொடு” பகவதி அம்மனிடம் உருகிய மோடிNivetha Pethuraj | ’’டிக்கிலாம் திறக்க ,முடியாது’’ வழிமறித்த போலீஸ் வாக்குவாதம் செய்த நிவேதாModi in Kanyakumari : 30 முதலை வீரர்கள்... கடலுக்கு அடியிலும் பாதுகாப்பு  பரபரப்பில் கன்னியாகுமரிModi vs Nitin Gadkari : நிதின் கட்காரியை தோற்கடிக்க சதி? பின்னணியில் மோடி - அமித்ஷா? புகைச்சலில் பாஜக!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi Video: பகவதி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்!
பகவதி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்!
Indian 2 Audio Launch: ரசிகர்களே ரெடியாகுங்க! இந்தியன் 2 ஆடியோ லாஞ்ச் - வெளியானது தேதி!
Indian 2 Audio Launch: ரசிகர்களே ரெடியாகுங்க! இந்தியன் 2 ஆடியோ லாஞ்ச் - வெளியானது தேதி!
Jammu Kashmir Accident: 150 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 21 பேர் பலி - ஜம்மு காஷ்மீரில் சோகம்
Jammu Kashmir Accident: 150 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 21 பேர் பலி - ஜம்மு காஷ்மீரில் சோகம்
TN Weather: திருத்தணியில் 109 டிகிரி வெயில் கொளுத்தியது: சிரமத்திற்குள்ளான மக்கள்
TN Weather: திருத்தணியில் 109 டிகிரி வெயில் கொளுத்தியது: சிரமத்திற்குள்ளான மக்கள்
பிரதமரை வரவேற்க சென்ற முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்: அனுமதிக்க மறுத்த போலீஸ்! நடந்தது என்ன?
பிரதமரை வரவேற்க சென்ற முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்: அனுமதிக்க மறுத்த போலீஸ்! நடந்தது என்ன?
முஸ்லிம் சட்டத்தின் கீழ் இந்து, இஸ்லாமியர் இடையேயான திருமணம் செல்லாது: ம.பி. உயர் நீதிமன்றம் கருத்து!
இந்து, முஸ்லிம் இடையே நடக்கும் திருமணம் செல்லாது: மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் பரபர கருத்து!
Hit List Review: ஹிட் அடிக்குமா ஹிட் லிஸ்ட்? மகனை நல்ல ஹீரோவாக செதுக்கினாரா இயக்குநர் விக்ரமன்? முழு திரைவிமர்சனம்
Hit List Review: ஹிட் அடிக்குமா ஹிட் லிஸ்ட்? மகனை நல்ல ஹீரோவாக செதுக்கினாரா இயக்குநர் விக்ரமன்? முழு திரைவிமர்சனம்
Breaking News LIVE: இரவு 10 மணிவரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
Breaking News LIVE: இரவு 10 மணிவரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
Embed widget