மேலும் அறிய

குடிநீர் பற்றாக்குறை... காலி குடங்களை மரத்தில் தூக்கிலிடும் நூதன போராட்டம் - நெல்லையில் பரபரப்பு

மூன்று மாதங்கள் ஆகியும் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லையெனில் குடத்தை தூக்கிலிட்டத்து போல் நாங்களும் தூக்கில் தொங்கும் நிலை தான் ஏற்படும்.

நெல்லை மாவட்டம் பருத்திப்பாடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது ஆணைபுரம் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 120க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 15 நாள் முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வந்து கொண்டிருந்தது, தற்போது 3 மாதங்கள் ஆகியும் சீராக குடிநீர் விநியோகம் இல்லை, இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகிறோம் என்று குற்றம் சாட்டினர். மேலும் இது குறித்து இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திலும், யூனியன் அலுவலகத்திலும் அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர்.. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டிய அவர்கள் சமீபத்தில் இது தொடர்பாக ஊர் மக்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்..


குடிநீர் பற்றாக்குறை... காலி குடங்களை மரத்தில் தூக்கிலிடும் நூதன போராட்டம் - நெல்லையில் பரபரப்பு

அப்போதும் நாங்குநேரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் போலீசார் நேரில் சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சீராக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். இருப்பினும் 3 மாதங்கள் ஆகியும் இதுவரை  தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக குடிநீர் பற்றாக்குறை தீர்க்கக்கோரி காலி குடங்களை அங்குள்ள சாலையோர மரத்தில் கயிறு கட்டி தொங்கவிட்டு தூக்கிலிடும்  நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.


குடிநீர் பற்றாக்குறை... காலி குடங்களை மரத்தில் தூக்கிலிடும் நூதன போராட்டம் - நெல்லையில் பரபரப்பு

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கூறுகையில், "எங்கள் கிராமத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. ஆனாலும் இன்று வரை சுமார் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிதண்ணீர் வருகிறது. இதனால் நாங்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறோம். அதிலும் அதிகபட்சம் 15 குடங்கள் மட்டுமே தண்ணீர் கிடைக்கின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எங்கள் ஊரில் இருந்த ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் கிடைத்து வந்தது. தற்போது அதுவும் பழுது ஏற்பட்டு விட்டதால் அதை யாரும் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர். போர் வாட்டர் கூட கிடைப்பதில்லை. தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் வசதி இல்லை, இதனால் இக்கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மூன்று மாதங்கள் ஆகியும் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லையெனில் குடத்தை தூக்கிலிட்டத்து போல் நாங்களும் தூக்கில் தொங்கும் நிலை தான் ஏற்படும்" என்று தெரிவித்தார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Embed widget