மேலும் அறிய

நெல்லை மாநகரம் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவிலேயே பாதுகாப்பு மிக்க நகரமாக மாற்றப்படும் - ஆட்சியர் விஷ்ணு

”தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்ற புகழ் பெற்ற பாளையங்கோட்டை தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவிலேயே ஒரு சிறந்த இடத்தை பெற வேண்டும்”

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் மாநகர சபை, நகர சபை நடத்த வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி , ஊராட்சி என 601 இடங்களில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை அன்பு நகர் 40- வது வார்டு பகுதியில் வார்டு கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. இதில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் கலந்து கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டனர்.
 

அப்போது நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசுகையில், ”தமிழகம் முழுவதும் இன்று முக்கியமான நாளாகும். வருடத்திற்கு ஐந்து முறை மட்டுமே கிராம சபை கூட்டம் நடக்கும். ஆனால் தமிழக முதல்வர் மாநகரப் பகுதி மக்களும் தங்கள் குறை நிறைகளை தெரிவிக்கும் வகையில் கூட்டம் நடத்த உத்தரவிட்டதை தொடர்ந்து தற்போது வரலாற்றிலேயே முதல் முறையாக மாநகரப் பகுதியில் கூட்டம் நடத்தப்படுகிறது. 2030 க்குள் இந்தியாவிலேயே அதிக அளவு மக்கள் தொகை மாநகராட்சி பகுதியில் இருக்கக்கூடியது என்றால் தமிழகம் தான் முதலிடம் பெறக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் இருக்கக்கூடிய மக்களுக்கு தொலை நோக்கு பார்வையோடு திட்டங்கள் தீட்டப்படும்.  தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்ற புகழ் பெற்ற பாளையங்கோட்டை தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவிலேயே ஒரு சிறந்த இடத்தை பெற வேண்டும் என்பது எல்லோரும் எதிர்பார்க்கக்கூடிய ஒரு விசயம்.  அதன்படி பார்க்கும் பொழுது அடுத்த 30 ஆண்டு காலத்திற்குள் இந்த நகரம் எப்படி வளர வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும்..

 


நெல்லை மாநகரம் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவிலேயே பாதுகாப்பு மிக்க நகரமாக மாற்றப்படும் - ஆட்சியர் விஷ்ணு

தாமிரபரணி ஆற்றங்கரையை ஒட்டியுள்ள  நெல்லை, பாளையங்கோட்டை மாநகரப் பகுதிக்கு 24 மணிநேரமும் குடி தண்ணீர் கிடைக்க வேண்டும். அதற்கான திட்டமிடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதோடு திருநெல்வேலி, பாளையங்கோட்டை மாநகர பகுதி கண்டிப்பாக இந்தியாவிலேயே தூய்மையான நகரமாக மாறவேண்டும். இதற்காகவும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக 5 வார்டுகள் தேர்வு செய்து பரிசோதனை அடிப்படையில் ஆய்வு செய்ய உள்ளோம்.  நிலத்தடி நீரை பொறுத்தவரை மாநகர பகுதியில் மட்டும் 40க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் உள்ளது. இதனை படிப்படியாக  சீரமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.  உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் பாளையங்கால்வாய், நெல்லை மற்றும் கோடகன் கால்வாய்கள் தூர்வாரி பராமரித்து குப்பைகள் போடாத வண்ணம் உலகத்தரம் வாய்ந்ததாக உருவாக்குவதற்கும் இத்திட்டத்தின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியில் பல இடங்களில் சாலைகள், நெடுஞ்சாலை துறை மற்றும் மாநகராட்சிக்கு இணைந்து வருகிறது. இதில் பணிகள் மேற்கொள்வதில் சிரமம் உள்ளதால் மாநகர் பகுதிக்குள் வரும் சாலை அனைத்தும் மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிசிடிவியை பொறுத்தவரையில் விரைவில் நெல்லை மாநகரம் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவிலேயே பாதுகாப்பு மிக்க நகரமாக மாற்றப்படும். அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. நகர் பகுதி முழுவதும் சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து குற்றம் நடைபெறும் இடமே இல்லாத பகுதியாக மாற்றப்படும், மேலும் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுக்கும் வகையில் ஆன்லைன் மூலம் அளிக்கும் வகையில் செயலி ஒன்று தொடங்கப்படும்”என தெரிவித்தார்.

முன்னதாக பேசிய சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் கூறுகையில், “இந்த கூட்டத்தில் பொதுமக்கள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குடிதண்ணீர் பிரச்சனையை தீர்க்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் இருந்து குடித்தண்ணீர் கொண்டு வரும் திட்டம் மாவட்ட நிர்வாகம், மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த திட்டம் வந்தால் பாளையங்கோட்டை பகுதியில் பல வார்டுகள் பயன்பெறும். பாதாளசாக்கடை திட்டம் பகுதி-3,  512 கோடியில் விரைவில் வருகிறது. மக்களின் அடிப்படை பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்படும்”என தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ather Rizta Record Sales: குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget