மேலும் அறிய

உள்ளாட்சித் தேர்தல்: நெல்லை மாவட்டத்தில் 2,069 பதவிகளுக்கு 6,871 பேர் வேட்பு மனு

’’நேற்றுடன் வேட்புமனுத்தாக்கல் முடிந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள 2,069 பதவிக்கு 6,871 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்’’

நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 6, 9 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முடிவடைந்தது. அம்பாசமுத்திரம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 114 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 373 பேர் மனு தாக்கல் செய்தனர். வேட்புமனுத்தாக்கலுக்கு இறுதி நாளான நேற்று மட்டும் 144 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். 


உள்ளாட்சித் தேர்தல்: நெல்லை மாவட்டத்தில் 2,069 பதவிகளுக்கு 6,871 பேர் வேட்பு மனு
 
13 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு 32 பேர் நேற்று மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இவர்களுடன் சேர்த்து 85 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர். 9 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 32 பேர் மனுதாக்கல் செய்தனர். இதுவரை 59 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர். ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு நேற்று 5 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை 6 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். பாளையங்கோட்டை பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 237 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 262 பேர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுவரை 689 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர். 30 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு 55 பேர் மனு தாக்கல் செய்தனர். இதுவரை 200 பேர் தாக்கல் செய்து உள்ளனர். 14 யூனியன் கவுன்சிலர் பதவிகளுக்கு  நேற்றுடன் 72 பேருடன் சேர்த்து இதுவரை 122 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 6 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

உள்ளாட்சித் தேர்தல்: நெல்லை மாவட்டத்தில் 2,069 பதவிகளுக்கு 6,871 பேர் வேட்பு மனு
 
சேரன்மாதேவி பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 99 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 76 பேர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுவரை 218 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர். 12 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு 11 பேர் மனு தாக்கல் செய்தனர். இதுவரை 51 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர். 5 யூனியன் கவுன்சிலர் பதவிகளுக்கு 22 பேருடன் சேர்த்து இதுவரை 34 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 5 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
 
களக்காடு பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 141 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 129 பேர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை 327 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். 17 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு 24 பேர் மனு தாக்கல் செய்தனர். இதுவரை 94 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். 9 யூனியன் கவுன்சிலர் பதவிகளுக்கு 39 பேர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை 65 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு நேற்று 2 பேர் உள்பட இதுவரை 7 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

உள்ளாட்சித் தேர்தல்: நெல்லை மாவட்டத்தில் 2,069 பதவிகளுக்கு 6,871 பேர் வேட்பு மனு
 
பாப்பாக்குடி பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 132 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 102 பேர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். இவர்களுடன் சேர்த்து இதுவரை 316 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி 17-க்கு 17 பேர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை 86 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். யூனியன் கவுன்சிலர் பதவி 9-க்கு 72 பேர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை 112 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு நேற்று 5 பேருடன் சேர்த்து 6 பேர் மனு தாக்கல் செய்தனர்.
 
ராதாபுரம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 240 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 208 பேர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை 696 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி 27-க்கு 42 பேர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். இது வரை 148 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர். யூனியன் கவுன்சிலர் பதவி 18-க்கு நேற்று 66 பேரை சேர்த்து  இதுவரை 105 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். 2 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 11 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
 
வள்ளியூர் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 180 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 177 பேர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை 523 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி 18-க்கு நேற்று 25 பேருடன் சேர்த்து இதுவரை 109 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர். 17 யூனியன் கவுன்சிலர் பதவிக்கு 56 பேர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். மொத்தம் 109 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர். 2 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 9 பேர் மனு தாக்கல் செய்தனர்.

உள்ளாட்சித் தேர்தல்: நெல்லை மாவட்டத்தில் 2,069 பதவிகளுக்கு 6,871 பேர் வேட்பு மனு
 
மானூர் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 348 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 316 பேர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை 1,005 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி 43&க்கு 101 பேர் நேற்று மனு தாக்கல் செய்தனர். இவர்களுடன் சேர்த்து 315 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.
25 யூனியன் கவுன்சிலர் பதவிக்கு நேற்று 139 பேருடன் சேர்த்து 208 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர். 2 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 22 பேர் மனு தாக்கல் செய்தனர்.
 
நாங்குநேரி பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 240 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு நேற்று 139 பேருடன் சேர்த்து 588 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி 27-க்கு 44 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை 156 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர். யூனியன் கவுன்சிலர் பதவி 16-க்கு 61 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை 103 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 6 பேர் மனு தாக்கல் செய்தனர்.
 
நெல்லை மாவட்டத்தில் உள்ள 204 பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 1,244 பேரும், 1,731 வார்டு உறுப்பினர் பதவிக்கு 4,713 பேரும், 122 யூனியன் கவுன்சிலர் பதவிக்கு 836 பேரும், 12 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 78 பேரும் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். மொத்தம் உள்ள 2,069 பதவிக்கு 6,871 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

தலைப்பு செய்திகள்

Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget