மேலும் அறிய

Kovilpatti Govt Hospital: சிகிச்சையில் 120 பேர்; இருப்பதோ 60 படுக்கை - கோவில்பட்டி அரசு மருத்துவமனையின் அவலம்

படுக்கை வசதி குறைவு குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கேட்ட போது விசாரணை நடத்தி, போதிய படுக்கை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என்று தெரிவித்தார்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லை என்பதால் சிகிச்சை பெறுபவர்கள் தரையில் படுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பாய் கூட வழங்கவில்லை என்பதால் மிகுந்த சிரமத்துடன் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். போதிய படுக்கை வசதி இருந்தும், அதனை செயல்படுத்த மருத்துவமனை நிர்வாகம் சுணக்கம் காட்டி வருவதாக பொது மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


Kovilpatti Govt Hospital: சிகிச்சையில் 120 பேர்; இருப்பதோ 60 படுக்கை - கோவில்பட்டி அரசு மருத்துவமனையின் அவலம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் பிரிவிலும். 500க்கும் மேற்ப்பட்டோர் உள் நோயாளிகள் பிரிவிலும் தங்கிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்குநாள் சிகிச்சைக்காக வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவில் போதி படுக்கை வசதி இல்லாத நிலை உள்ளது. குறிப்பாக ஆண்கள் மற்றும் பெண்கள் வார்டில் 60 படுக்கை வசதி தான் உள்ளது.


Kovilpatti Govt Hospital: சிகிச்சையில் 120 பேர்; இருப்பதோ 60 படுக்கை - கோவில்பட்டி அரசு மருத்துவமனையின் அவலம்

ஆனால் 120 பேருக்கு மேலாக சிகிச்சைக்க வரும் நிலை உள்ளதால் அனைவருக்கும் படுக்கை வசதி செய்து கொடுக்க முடியாத நிலை இருப்பதால் 50க்கும் மேற்பட்டவர்கள் படுக்கை வசதி கிடைக்காமல் தரையில் படுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதிலும் பெரும்பாலனவர்கள் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. படுக்கை கிடைக்கவில்லை என்பதால் சிகிச்சை பெற வரும் நோயாளிகள் தரையிலும், மேலும் ஆண்கள் மற்றும் பெண்கள் வார்டு அருகே இருக்கும் செட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் வெயில், மழை என மாறி மாறி இயற்கை போக்குகாட்டி வருவதால் சிகிச்சை பெற வந்தவர்கள் பெட் கிடைக்கமால் அவதிப்பட்டு வருகின்றனர்


Kovilpatti Govt Hospital: சிகிச்சையில் 120 பேர்; இருப்பதோ 60 படுக்கை - கோவில்பட்டி அரசு மருத்துவமனையின் அவலம்

மழை பெய்தால் ஓரத்தில் நிற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஏற்கனவே மருத்துவமனை உள்ளே செயல்பட்டு வந்த மகப்பேறு பிரிவு தற்போது புதியதாக கட்டப்பட்டு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பயன்படுத்திய கட்டிடங்கள் காலியாக உள்ளது. பெட் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அறுவை சிகிச்சைக்காக வருபவர்களுக்கு காலியாக உள்ள கட்டித்தினை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் அங்கு போதிய வசதி செய்து தர வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். போதிய படுக்கை வசதி இல்லை என்பதால் சிகிச்சை பெறுபவர்கள் தரையில் படுத்து அவதிப்பட்டு வருகின்றனர். அது மட்டுமல்லாது தரையில் படுத்து இருக்கும் நோயாளிகளுக்கு பாய் கூட வழங்கவில்லை என்பதால், தாங்கள் வீட்டில் இருந்து கொண்டு வந்த துணிகளை விரித்து படுத்து தூங்கும் நிலை உள்ளது.


Kovilpatti Govt Hospital: சிகிச்சையில் 120 பேர்; இருப்பதோ 60 படுக்கை - கோவில்பட்டி அரசு மருத்துவமனையின் அவலம்

இதுகுறித்து அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது, காலியாக இருக்கும் பழைய மகப்பேரு பிரிவு கட்டிடத்தில் சில பணிகள் செய்ய வேண்டியது இருப்பதால், விரைந்து செய்து அதில் உள்ள படுக்கைகள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். கடந்த 5நாள்களுக்கு மேலாக போதிய படுக்கை வசதி இல்லமால் சிகிச்சை பெறுபவர்கள் அவதிப்பட்டு வருவதால் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.


Kovilpatti Govt Hospital: சிகிச்சையில் 120 பேர்; இருப்பதோ 60 படுக்கை - கோவில்பட்டி அரசு மருத்துவமனையின் அவலம்

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget