மேலும் அறிய

சீமான் கைதாகிறாரா? பெரியார் விவகாரத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி

சீமான் மீது அவதூறு வழக்குகள் பலவும் தொடர்ந்துள்ள நிலையில் அவர் கைது செய்யப்படுவாரா? என்பதற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.

பெரியார் குறித்து சீமான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பேசியது தமிழ்நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர் மீது தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் தி.மு.க.வினர், திராவிட கழகத்தினர், பெரியார் ஆதரவாளர்கள் என பலரும் புகார் அளித்தனர். 

இந்த நிலையில், சீமான் மீது பல புகார்கள் இருப்பதால் சீமான் கைது செய்யப்படுவாரா? என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது, 

சீமான் கைதா?

அவதூறு வழக்குகள் பதிவு செய்துவிட்டு நீதிமன்றத்திற்குச் சென்று அங்கு வழக்கைத் தொடர்ந்து கொள்ளலாம். அதற்கு கைதுதான் செய்ய வேண்டும் என்று கட்டாயம் இல்லை. கைதும் செய்யலாம். விட்டாமலும் விட்டுவிடலாம். ஆனால், நீதிமன்றத்தில் அந்த நபர் ஆஜராகி தான் குற்றவாளி இல்லை, தான் அவதூறாக பேசவில்லை என்பதை நிரூபித்தாக வேண்டும். 

அவர் அவதூறாக பேசியுள்ளார் என்றுள்ள சூழலில், அவர் நீதிமன்றத்திற்கு வந்தாக வேண்டும். அதனால், கைது செய்ய வேண்டும் என்பதற்காக அவரை எத்தனை முறை கைது செய்ய முடியும். அனைத்து ஊர்களிலும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக அப்படியே உள்ளது.

அந்த புகார்கள் மீது விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். அந்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் வழக்கு நடத்தப்படும். அனைத்திற்கும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும். 

இவ்வாறு அவர் பேசினார். 

பெரியார் குறித்த சர்ச்சைப் பேச்சு:

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தி.மு.க.விற்கு எதிராக தொடர்ந்து அரசியல் செய்து வருகிறார். இந்த சூழலில் திராவிட கோட்பாடுகளின் கொள்கைத் தலைவராக திகழும் பெரியாரையும் மிக கடுமையாக விமர்சித்து வருகிறார். இதன் காரணமாக சீமானை திராவிட கட்சிகளின் ஆதரவாளர்களும், பெரியார் ஆதரவாளர்களும் மிக கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

இந்த சூழலில், சமீபத்தில் சீமான் பெரியார் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே தமிழ்நாட்டில் கடும் கொந்தளிப்பு நிலை கடந்த சில வாரங்களாக எழுந்தது. மேலும், சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள சீமானின் வீட்டை பெரியார் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

சீமான் திட்டவட்டம்:

மேலும், திருச்சியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த சீமான் உலகமே பெரியாரை ஏற்றுக் கொண்டாலும் தான் பெரியாரை ஏற்கவே மாட்டேன் என்று திட்டவட்டமாக பேசினார். பெரியார் விவகாரத்தில் சீமானின் கருத்துக்குப் பிறகு அவருக்கு திராவிட மற்றும் பெரியார் ஆதரவாளர்களிடம் இருந்து மிகக்கடுமையான எதிர்ப்பு அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்தாண்டு தமிழ்நாட்டில் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் சீமானின் பெரியார் குறித்த கருத்து நாம் தமிழர் வாக்கு சதவீதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே அரசியல் நிபுணர்களும் கணித்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
விஜய்க்கு முன் அரசியலில் வென்ற அமிதாப்.. 2 ஆண்டுகளில் ராஜினாமா செய்ய வைத்த சூழ்ச்சி!
விஜய்க்கு முன் அரசியலில் வென்ற அமிதாப்.. 2 ஆண்டுகளில் ராஜினாமா செய்ய வைத்த சூழ்ச்சி!
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
ஆஸ்திரேலியா முதல் ஜெர்மனி வரை.. முதலமைச்சர் விஜய் முன்பு அக்ரிமென்ட் போட்ட டாப் 10 கம்பெனி இதுதான்!
ஆஸ்திரேலியா முதல் ஜெர்மனி வரை.. முதலமைச்சர் விஜய் முன்பு அக்ரிமென்ட் போட்ட டாப் 10 கம்பெனி இதுதான்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget