மேலும் அறிய

கன்னியாகுமரி: அலையாத்தி காடுகளை பெருக்க 2 ஆயிரம் மரக் கன்றுகள் நடப்பட்டன

கன்னியாகுமரி: இயற்கை பேரிடரில் இருந்து கடற்கரை பகுதி மக்களை காக்க இயற்கை தடுப்புச் சுவர் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி பகுதியில் அலையாத்தி காடுகளை பெருக்க தமிழக அரசு சார்பில் நேற்று  2 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. கடல் சீற்றம் உள்ளிட்ட இயற்கை பேரிடரில் இருந்து கடற்கரை பகுதி மக்களை காக்க இயற்கை தடுப்புச் சுவர் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
 
தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு அடுத்தப்படியாக கன்னியாகுமரி தான் அதிக அளவு வனப் பரப்பு கொண்ட மாவட்டம். வன பகுதிகளை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக கடல் அரிப்பைத் தடுத்து இயற்கை சூழலை உருவாக்கும் அலையாத்தி காடுகள் நாகர்கோவில் அருகே உள்ள மணக்குடி கழிமுகத்தில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதனால் இந்த பகுதிகளில் ஏராளமான நண்ணீர் பறவைகள் தங்கள் வாழ்விடங்களை அமைத்துள்ளது. மேலும் கடல் அரிப்பு என்பது தடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்த அலையாத்தி காடுகளை பெருக்க தமிழக அரசு சார்பில் இன்று 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மேயர் மகேஷ் மற்றும் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ஆகியோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த காடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ மாணவிகள் இந்த பகுதிக்கு அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு இந்த அலையாத்தி காடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மாணவ, மாணவிகளும் இந்த திட்டத்தில் பங்கேற்கும் வண்ணம் அவர்களும் மரக்கன்றுகள் நட்டனர்.
 

கன்னியாகுமரி: அலையாத்தி காடுகளை பெருக்க 2 ஆயிரம் மரக் கன்றுகள் நடப்பட்டன
 
இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், ”குமரி மாவட்டம் மணக்குடி பகுதியில் இயற்கையாகவே ஏராளமான சதுப்பு நிலக்காடுகள் உள்ளன. இதனை அதிகரிக்கும் நோக்கில் தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. குறிப்பாக இப்பகுதியில் சீமை கருவேல மரம் அதிக அளவில் இருந்தது. அதனை எடுத்துவிட்டு முழுவதுமாக சதுப்பு நில காடுகள் உருவாக்க திட்டமிட்டு அதனை தற்போது செயல்படுத்தி வருகிறோம்.
 
கன்னியாகுமரி: அலையாத்தி காடுகளை பெருக்க 2 ஆயிரம் மரக் கன்றுகள் நடப்பட்டன
 
 
சுமார் 70 ஏக்கர் கொண்ட சதுப்பு நிலத்தில் 40 சதவீதம் காடுகளை உருவாக்கி விட்டோம். எதிர்வரும் காலத்தில் சுமார் 10,000 கன்றுகள் நடுவதற்கு திட்டமிட்டுள்ளோம். அந்த பணிகள் தொடர்ந்து நடைபெறும். குமரி மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் இயற்கை தடுப்பு அரணாக செயல்படும் அலையாத்தி காடுகளை உருவாக்க முடியும் என ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறோம். அந்த வகையில் கடல் சீற்றம் உள்ளிட்ட இயற்கை பேரிடரில் இருந்து கடற்கரை பகுதி மக்களை காப்பாற்ற இயற்கை தடுப்புச் சுவர் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மணக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக படகு சவாரி உள்ளிட்ட சுற்றுலா பொழுதுபோக்கு மேம்பாட்டு பணிகளை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.

 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth : ”ஜெயலலிதா வீட்டிற்கு ரஜினி சென்றது ஏன்?” திமுகவிற்கு எதிராக பாஜக சதி?
Rajinikanth : ”ஜெயலலிதா வீட்டிற்கு ரஜினி சென்றது ஏன்?” திமுகவிற்கு எதிராக பாஜக சதி?
CUET UG 2025: என்னது, க்யூட் தேர்வில் இத்தனை மாற்றங்களா? மாணவர்களே மறக்காதீங்க- முழு விவரம்!
CUET UG 2025: என்னது, க்யூட் தேர்வில் இத்தனை மாற்றங்களா? மாணவர்களே மறக்காதீங்க- முழு விவரம்!
Modi on Kisan Scheme: அடேயப்பா..விவசாயிகளுக்கு இத்தனை லட்சம் கோடி கொடுத்துருக்காங்களா.? மோடி சொன்ன தகவல்...
அடேயப்பா..விவசாயிகளுக்கு இத்தனை லட்சம் கோடி கொடுத்துருக்காங்களா.? மோடி சொன்ன தகவல்...
CM Stalin: இந்தியையா திணிக்கிறீங்க? முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு - மார்ச் 5ம் தேதி சம்பவம்..!
CM Stalin: இந்தியையா திணிக்கிறீங்க? முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு - மார்ச் 5ம் தேதி சம்பவம்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்Kaliyammal: தவெக மேடையில் காளியம்மாள்? பதவியை அறிவிக்கும் விஜய்! வரிசை கட்டும் முக்கிய புள்ளிகள்!Delhi Assembly Fight: Kaliyammal Profile: நாதகவின் சிங்கப்பெண்! சீமானின் குலதெய்வம்! யார் இந்த காளியம்மாள்? | NTK |Seeman

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth : ”ஜெயலலிதா வீட்டிற்கு ரஜினி சென்றது ஏன்?” திமுகவிற்கு எதிராக பாஜக சதி?
Rajinikanth : ”ஜெயலலிதா வீட்டிற்கு ரஜினி சென்றது ஏன்?” திமுகவிற்கு எதிராக பாஜக சதி?
CUET UG 2025: என்னது, க்யூட் தேர்வில் இத்தனை மாற்றங்களா? மாணவர்களே மறக்காதீங்க- முழு விவரம்!
CUET UG 2025: என்னது, க்யூட் தேர்வில் இத்தனை மாற்றங்களா? மாணவர்களே மறக்காதீங்க- முழு விவரம்!
Modi on Kisan Scheme: அடேயப்பா..விவசாயிகளுக்கு இத்தனை லட்சம் கோடி கொடுத்துருக்காங்களா.? மோடி சொன்ன தகவல்...
அடேயப்பா..விவசாயிகளுக்கு இத்தனை லட்சம் கோடி கொடுத்துருக்காங்களா.? மோடி சொன்ன தகவல்...
CM Stalin: இந்தியையா திணிக்கிறீங்க? முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு - மார்ச் 5ம் தேதி சம்பவம்..!
CM Stalin: இந்தியையா திணிக்கிறீங்க? முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு - மார்ச் 5ம் தேதி சம்பவம்..!
Annamalai On CM Stalin: திமுககாரங்க ஸ்கூல்ல சேர்த்து விடனுமா? கருப்பு டப்பா? - முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி
Annamalai On CM Stalin: திமுககாரங்க ஸ்கூல்ல சேர்த்து விடனுமா? கருப்பு டப்பா? - முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி
Hindi Imposition: இந்திக்கு செம்மொழி அந்தஸ்து இல்லாதது ஏன்? என்ன குறை அந்த மொழியில்? தமிழுக்கு மட்டும் எப்படி?
Hindi Imposition: இந்திக்கு செம்மொழி அந்தஸ்து இல்லாதது ஏன்? என்ன குறை அந்த மொழியில்? தமிழுக்கு மட்டும் எப்படி?
MK Stalin Decision :
MK Stalin Decision : "மத்திய - மாநில அரசு உறவு” முக்கிய முடிவை அறிவிக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
ADMK: அதிமுகவை சுத்து போடும் மத்திய, மாநில அரசுகள் - எஸ்.பி. வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ., வீட்டில் ரெய்டு
ADMK: அதிமுகவை சுத்து போடும் மத்திய, மாநில அரசுகள் - எஸ்.பி. வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ., வீட்டில் ரெய்டு
Embed widget