மேலும் அறிய

சபாநாயகர் ஊருக்கு குமரியில் இருந்து தண்ணீரா..? - எதிர்க்கும் அமைச்சர்

தோவாளை கால்வாய் மடைகளை அடைத்து அரசாணை மீறி ராதாபுரம் தண்ணீர் கொண்டு செல்லப்படுவதை தடுத்து குமரி மாவட்ட விவசாயிகள் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் கால்வாய் பாசனத்துக்கு குமரி அணைகளில் இருந்து அரசாணை மீறி தொடர்ச்சியாக தண்ணீர் வழங்கப்படுவதால் தோவாளை, தெங்கம் புதூர் பகுதியில் நெற்பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக குமரி பாசனத்துறையினர் புகார் தெரிவித்துள்ளனர்.


சபாநாயகர் ஊருக்கு குமரியில் இருந்து தண்ணீரா..? - எதிர்க்கும்  அமைச்சர்

கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு பாசன திட்ட அணையில் இருந்து கடந்த ஆண்டு ஜூன் 15ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை நெல்லை மாவட்டம் ராதாபுரம் கால்வாய் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் நீர்வரத்து மற்றும் நீர் இருப்பை பொறுத்து தேவைக்கேற்ப நீர் திறந்து விட அரசு உத்தரவிட்டு இருந்தது.அதனைத் தொடர்ந்து தோவாளை கால்வாய்-திருமூலர் கால்வாயில் இருந்து ராதாபுரம் கால்வாயில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தண்ணீர் திறந்து வைத்தார், இதன் மூலம் 52 குளங்கள் தண்ணீர் நிரம்பி 15987 ஏக்கர் பாசன வசதி பெரும் வகையில் வினாடிக்கு 150 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.இதன் மூலம் நெல்லை மாவட்டத்தில் சுமார் நேரடியாக 15987 ஏக்கரும் 52 குளங்கள் மூலம் மறைமுகமாக 1013 ஏக்கரும் பாசன வசதி பெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்து இருந்தார்.


சபாநாயகர் ஊருக்கு குமரியில் இருந்து தண்ணீரா..? - எதிர்க்கும்  அமைச்சர்

இந்த நிலையில் தற்போது கோதையாறு அணையில் இருந்து தற்போதும் ராதாபுரம் பாசன விவசாய பகுதிக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு குமரி மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


சபாநாயகர் ஊருக்கு குமரியில் இருந்து தண்ணீரா..? - எதிர்க்கும்  அமைச்சர்

குமரி மாவட்டம் கோதையாறு பாசன திட்டத்திற்குட்பட்ட குமரி பாசன துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் விவசாயிகள் தமிழக அரசுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில், கோதையாறு பாசறை திட்ட நீர்நிலைகள் மூலம் சுமார் 85 ஆயிரம் நிலங்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் கால்வாய் பாசனத்தில் உள்ள சுமார் 15,000 ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் வழங்குவதற்காக கடந்த காலங்களில் ஆண்டுக்கு ஜூன் 20 முதல் 25 நாட்கள் ஜூன் ஜூலை மாதங்கள் பாசன நீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட சுமார் மூன்றரை மாதம் அதாவது அக்டோபர் 30ஆம் தேதி வரை தண்ணீர் வழங்கும் விதமாக அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை நடைமுறைப்படுத்துவது சாத்தியம் இல்லை என்பதால் அப்போதே குமரி மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அக்டோபர் மாதத்தை கடந்து தற்போது வரையிலும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தோவாளை கால்வாய் பாசன மடைகளை அடைத்து இங்குள்ள விவசாயத்துக்கு தண்ணீர் வழங்காமல் அரசாணை மீறி பொதுப்பணித்துறை நீராதார அதிகாரிகள் ராதாபுரம் கால்வாய்க்கு தண்ணீர் வழங்கி வருகின்றனர்.


சபாநாயகர் ஊருக்கு குமரியில் இருந்து தண்ணீரா..? - எதிர்க்கும்  அமைச்சர்

இதனால் தோவாளை தெங்கம் புதூர், பறக்கை பகுதி விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் நெற் பயிர்கள் கருகி வருகின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகள் பேரிழப்பு சந்தித்து வருகின்றனர். குமரி மாவட்ட விவசாயிகள் ராதாபுரம் கால்வாய் பாசன விவசாயத்திற்கு எதிரானவர்கள் அல்ல. தற்போது கடும் வெயில் அடித்து வரும் நிலையில் ராதாபுரம் கால்வாய் கடைமடை வரை தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது. இதுபோல் தோவாளை சுற்றுப்பகுதிகளுக்கும் தண்ணீர் கிடைக்காமல் இருதரப்பு விவசாயிகள் தவிப்புக்கு உள்ளாகி உள்ளனர். தோவாளை கால்வாய் மடைகளை அடைத்து அரசாணை மீறி ராதாபுரம் தண்ணீர் கொண்டு செல்லப்படுவதை தடுத்து குமரி மாவட்ட விவசாயிகள் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Embed widget