மேலும் அறிய

கடவுள் இல்லேன்னு சொல்லல; இருந்தா நல்லா இருக்குமுனுதான் சொல்றன் - தொ.பரமசிவனின் முதலாம் ஆண்டு நினைவு தினம்

பெரியாரின் நினைவு நாளான இன்றே தொ.ப வின் நினைவு நாளும் அனுசரிக்கப்படுகிறது

தொ.ப" என்று அனைவராலும் அழைக்கப்பட்ட தொ. பரமசிவன் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 1950 ஆம் ஆண்டு பிறந்தவர். ஓட்டுநராக இருந்த தந்தை இளம் வயதிலேயே இறந்து விட, தாயின் அரவணைப்பில் தொ. பரமசிவன் வளர்ந்தார். தொ.பரமசிவனுக்கு மனைவி இசக்கியம்மாள் என்ற மனைவியும், மாசானமணி என்ற மகனும், விஜயலெட்சுமி என்ற மகளும் உள்ளனர்.


கடவுள் இல்லேன்னு சொல்லல; இருந்தா நல்லா இருக்குமுனுதான் சொல்றன் - தொ.பரமசிவனின் முதலாம் ஆண்டு நினைவு தினம்

மதுரை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பொருளாதாரம்,  காரைக்குடி அழகப்பா கல்லூரியில் முதுகலைத் தமிழும் கற்றார், பின்னர் ஆறு ஆண்டுகள் கல்லூரி ஆசிரியராக பணியாற்றிய இவர் 1976ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவராக சேர்ந்தார், முனைவர் பட்ட ஆய்வுக்காக புதுமைப்பித்தன் குறித்து ஆய்வு செய்ய விரும்பினார், ஆனால் இவருடைய ஆய்வு நெறியாளர் மு.சண்முகம்பிள்ளை, கோவில் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் படி கூற மதுரையில் உள்ள "அழகர்கோவிலை"  தனது ஆய்வுப் பொருளாக எடுத்துக் கொண்டார், இந்த கோவில் குறித்து அவர் மேற்கொண்ட ஆய்வு, கோவில் குறித்த ஆய்வின் எல்லைகளை விரிவடையச் செய்தது, இவரது ஆய்வுக்கட்டுரையினை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அழகர் கோவில் என புத்தகமாக வெளியிட்டது,  தமிழ் மொழியின் மீது பெரும் பற்றும், ஆர்வமும் கொண்டவராக இருந்த இவரது ஆய்வினை செம்மைப்படுத்தும் நோக்கில் சமஸ்கிருதமும் கற்றார், தொடர்ந்து இவர் இளையான்குடி ஜாகிர் உசேன் கல்லூரி, மதுரை தியாகராசர் கல்லூரி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்லூரிகளில் பணியாற்றி 2008 ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார். 


கடவுள் இல்லேன்னு சொல்லல; இருந்தா நல்லா இருக்குமுனுதான் சொல்றன் - தொ.பரமசிவனின் முதலாம் ஆண்டு நினைவு தினம்

இவர் எழுதிய நூல்கள்: "அறியப்படாத தமிழகம்" "பண்பாட்டு அசைவுகள்" "அழகர் கோவில்" "தெய்வம் என்பதோர்" "வழித்தடங்கள்" பரண்" "சமயம்" "சமயங்களின் அரசியல்" "தொ.பரமசிவன் நேர்காணல்கள்" "விடுபூக்கள்" "உரைகல்" "இந்து தேசியம்" "நாள்மலர்கள்" "வாசிப்பு" "பாளையங்கோட்டை ஒரு மூதூரின் வரலாறு" "மஞ்சள் மகிமை" "மரபும் புதுமையும்" "இதுவே சனநாயகம்" "செவ்வி" என பல நூல்களை எழுதியுள்ளார் 

'அழகர் கோயில்' நூலுக்குப் பிறகு வெளிவந்த அவரது "அறியப்படாத தமிழகம்" நூல், அவரை தமிழ் பேசும் பகுதிகள் என்றும் அறியப்பட்டவராக்கியது. நாட்டார் தெய்வங்கள், பெருந்தெய்வங்கள், சம்பிரதாயங்கள், வழிபாட்டு முறைகள், சடங்குகள், கலை, சாதி ஆகியவை குறித்து தொ. பரமசிவன் முன்வைத்த பார்வை தற்கால தமிழ் உரையாடல்களில் மிக முக்கியமானதாக அமைந்தது. தமிழர்களின் பண்பாடு எத்தகைய தனித்துவமானது என்பதையும், குறிப்பாக நாட்டார் வழக்காற்றியல் குறித்தும் பல கட்டுரைகளையும், பேட்டிகளையும் வழங்கியுள்ள தொ.பரமசிவன் அவர்கள், திராவிட இயக்கமும் பெரியாரும் இந்த மண்ணில் ஏற்படுத்தியுள்ள அரசியல் - சமூக - பண்பாட்டுத் தாக்கங்களை மிகச் சிறப்பாக எடுத்துரைத்தவர்.  கடந்த ஆண்டு இதே நாளில் (2020 டிசம்பர் 24 ஆம் தேதி) நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் அவர்கள் பாளையம்கோட்டை அரசு மருத்துவமனையில் காலமானார். 

கடவுள் இல்லேன்னு சொல்லல; இருந்தா நல்லா இருக்குமுனுதான் சொல்றன் - தொ.பரமசிவனின் முதலாம் ஆண்டு நினைவு தினம்

நடிகரும், அரசியல்வாதியுமான கமல் தசாவதாரம் படத்தில் பேசும் போது ''கடவுள் இல்லைனு சொல்லல. இருந்தா நல்லாயிருக்கும்னு சொல்றேன்'' என்ற வாக்கியம் இன்று உயிரிழந்த பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவனுக்கு சொந்தமானதுதான் என்று கமலே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியுள்ளார். மேலும் இவரின் அழகர் கோவில்  புத்தகத்தை  பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியதோடு அவரை வீட்டில் இருந்த படியே திரை மூலம் பங்கேற்க செய்தார். இதுவே அவர் பங்கேற்ற கடைசி நிகழ்ச்சியுமாகும், 


கடவுள் இல்லேன்னு சொல்லல; இருந்தா நல்லா இருக்குமுனுதான் சொல்றன் - தொ.பரமசிவனின் முதலாம் ஆண்டு நினைவு தினம்

மக்களின் மனதில் தொ.ப என்ற பெயரில் நிலைத்து நிற்கும் மனோன்மணியம் பல்கலைக்கழத்தின் முன்னாள் தமிழ் துறைத் தலைவரும், பண்பாட்டு ஆய்வாளரும், எழுத்தாளருமான தொ.பரமசிவனின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது. பெரியாரின் நினைவு நாளான இன்றே தொ.ப வின் நினைவு நாளையும் தமிழ் சமூகம் அனுசரித்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

நெல்லை, நாகர்கோவில் செல்லும் பயணிகள் கவனத்திற்கு.. ரயில்கள் பாதியிலேயே நிறுத்தம் – முழு விவரம் இதோ
நெல்லை, நாகர்கோவில் செல்லும் பயணிகள் கவனத்திற்கு.. ரயில்கள் பாதியிலேயே நிறுத்தம் – முழு விவரம் இதோ
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆனிப்பெருந்திருவிழா தொடக்கம்! முக்கிய நிகழ்ச்சிகள் என்ன?
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆனிப்பெருந்திருவிழா தொடக்கம்! முக்கிய நிகழ்ச்சிகள் என்ன?
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்: கைபேசி வைத்திருந்தால் பறிமுதல் – புதிய அறிவிப்பு
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்: கைபேசி வைத்திருந்தால் பறிமுதல் – புதிய அறிவிப்பு
ரயில்வே அதிரடி அறிவிப்பு: அந்தியோதயா மற்றும் நெல்லை எக்ஸ்பிரஸ் பகுதி ரத்து!
ரயில்வே அதிரடி அறிவிப்பு: அந்தியோதயா மற்றும் நெல்லை எக்ஸ்பிரஸ் பகுதி ரத்து!

வீடியோ

Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
என்எல்சி பங்குகள் விவகாரம்; பிரதமர் மோடிக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் - விஜய் சொன்னது என்ன?
என்எல்சி பங்குகள் விவகாரம்; பிரதமர் மோடிக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் - விஜய் சொன்னது என்ன?
EV Velu: எவ வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கிடைத்தது என்னென்ன தெரியுமா?
EV Velu: எவ வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கிடைத்தது என்னென்ன தெரியுமா?
ADMK:
ADMK: "வெயிட் பண்ணுங்க.. முதலமைச்சர் ரீல்ஸ் எடுக்கனும்.." விஜய்யை விளாசிய அதிமுக!
KTM-க்கு டஃப் ஃபைட்! மிரட்டலான 457cc ட்வின் சிலிண்டர் எஞ்சினுடன் Aprilia Tuono 457! என்னென்ன புதுசு தெரியுமா?
KTM-க்கு டஃப் ஃபைட்! மிரட்டலான 457cc ட்வின் சிலிண்டர் எஞ்சினுடன் Aprilia Tuono 457! என்னென்ன புதுசு தெரியுமா?
தங்க மோதிரமா? தாயின் உயிரா? தவெக அரசு மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
தங்க மோதிரமா? தாயின் உயிரா? தவெக அரசு மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
புலிகள் காப்பகங்களில் திடக்கழிவு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
புலிகள் காப்பகங்களில் திடக்கழிவு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
பட்ஜெட் விலை.. சீனியர் சிட்டிசன்களுக்கு பெஸ்ட் இ ஸ்கூட்டர்! Yo Drift, Yo Edge விலை எவ்ளோ?
பட்ஜெட் விலை.. சீனியர் சிட்டிசன்களுக்கு பெஸ்ட் இ ஸ்கூட்டர்! Yo Drift, Yo Edge விலை எவ்ளோ?
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு! படிப்புகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு! படிப்புகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!
Embed widget