மேலும் அறிய

Watch video | நாங்க கை வச்சா... மண்ணெல்லாம் பொன்னு தான்.. விவசாயத்தை அடையாளமாக்கிய கிராம பெண்கள்!

நெல்லை மாநகரில் தென்பத்து கிராமத்தில் படித்த & படிக்காத என ஒட்டுமொத்த பெண்களும் விவசாயத்தில் களமிறங்கி தங்கள் கிராமத்தை விதை கிராமமாகவும், முன்மாதிரி கிராமமாகவும் அடையாளப்படுத்தியுள்ளனர்”

நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை பிரதான தொழில் விவசாயம். கடந்த சில ஆண்டுகளாக வறட்சி காரணமாகவும், போதிய மகசூல் இன்றியும், விலை இன்றியும்  லாபம் பெற முடியாமலும் என பல்வேறு காரணங்களால் விவசாயத்தை விட்டு விட்டு பலர் வேறு வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். ஆனால் இதற்கு மாற்றாக நெல்லை மாநகராட்சி மானூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட தென்பத்து கிராமத்தில் விவசாயம் செய்வதன் நுணுக்கங்களை முறையாக கற்று கிராமத்தில் உள்ள ஒட்டுமொத்த பெண்களுமே விவசாயத்தில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஆணுக்கு பெண் சளைத்தவள் அல்ல என நாற்று நடுதல், உரமிடுதல், அறுவடை செய்தல் என அனைத்து வேலைகளையும் பெண்களே தன்னம்பிக்கையுடன் செய்து வருகின்றனர். 

Watch video | நாங்க கை வச்சா... மண்ணெல்லாம் பொன்னு தான்.. விவசாயத்தை அடையாளமாக்கிய கிராம பெண்கள்!

மாநகரத்தின் நடுவே தென்பத்து கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு 700 ஏக்கர் விவசாய நிலங்களில் நெல் பயிரிடப்பட்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. கிராமத்தில் எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என காட்சியளிக்கும் விவசாய நிலத்திற்கு அருகே சிறிதளவு வீடுகள் காணப்படும், இங்கு ஆரம்பத்தில் வீட்டில் உள்ள ஆண்களுடன் சேர்ந்து ஒரு சில பெண்கள் மட்டுமே விவசாயம் பார்த்து வந்தனர். தற்போது வேளாண்மைத் துறை மூலம் விவசாயம் செய்வது, அதிக மகசூல் பெறுவது, இயற்கை முறையில் விவசாயம் செய்வது போன்ற பயிற்சிகளை முறையாக கற்று பயனடைந்ததன் மூலம் கிராமத்தில் உள்ள பெண்கள் அனைவருமே விவசாயத்தில் இறங்கி உள்ளனர்.. 


Watch video | நாங்க கை வச்சா... மண்ணெல்லாம் பொன்னு தான்.. விவசாயத்தை அடையாளமாக்கிய கிராம பெண்கள்!

விதை நிவர்த்தி செய்து தான் விவசாயம் செய்து வருகிறோம், எங்களது கூட்டுப் பண்ணை மூலம் உரக் கம்பெனி ஆரம்பித்து உள்ளோம், விவசாயியாக இருந்த நாங்கள் தற்போது முதலாளியாக மாறிவிட்டோம், இதில் படிக்காதவர்கள் மட்டுமின்றி படித்த பெண்களும் விரும்பி விவசாயம் செய்து வருகின்றனர்.. படித்து ஒரு வேலைக்கு செல்லும் இடத்தில் அடுத்தவர்களுக்கு வேலை செய்வதை விட நாமே முதலாளியாக இருந்து கொண்டு வேலை செய்வதே பெருமை எனவும்  நல்ல ஒரு வேலையில் உள்ள அதிகாரியின் மகள் என கூறுவதை விட விவசாயியின் மகள் என கூறுவது கூடுதல் பெருமை என கூறுகிறார் பட்டதாரி விவசாயி கலா செல்வி


Watch video | நாங்க கை வச்சா... மண்ணெல்லாம் பொன்னு தான்.. விவசாயத்தை அடையாளமாக்கிய கிராம பெண்கள்!

தென்பத்து கிராமத்தை முன்மாதிரி கிராமமாக மாற்றியதில் முக்கிய பங்கு இயற்கை விவசாயி மனோன்மணியை சேரும், இவர் எடுத்த முயற்சியினால் இக்கிராமமே விவசாயத்திற்கு முன்மாதிரியாக திகழ்கிறது. ஆரம்பத்தில்  விவரம் தெரியாமல் தன் நடுவையாக நட்டதன் பேரில் லாபம் என்பது சொல்ல முடியாத அளவில் தான் இருந்தது. ஆனால் தற்போது கற்றுக் கொண்டது போல கயிறு பிடித்து நடுவது, இயற்கை முறையில் உரம் தயாரித்து பயன்படுத்துவது போன்றவற்றை கடைபிடித்து வருவதால் நல்ல பலன் கிடைக்கின்றது.. ஏக்கருக்கு 30 மூட்டை வரை கிடைத்த நிலையில் தற்போது 30 மூட்டையையும் தாண்டி நல்ல மகசூல் கிடைப்பதாகவும், வேளாண்மைத்துறையுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாலே இது சாத்தியமானது என  தெரிவிக்கிறார் இயற்கை பெண் விவசாயி மனோன்மணி.

அதே போல் புது ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அதனையும் விளைவித்து பார்க்கலாம் என முற்போக்கு சிந்தனையில் செயல்பட்டு வருபவர் மனோன்மணி, தற்போது அம்பை 21 என்ற வெளிவர உள்ள புதிய ரகத்தை பயிரிட்டு உள்ளார். அம்பை 16 க்கு மாற்று ரகமாக கண்டுபிடிக்கப்பட்டு சந்தைக்கு வராத இந்த ரகம் கொடுக்கும் மகசூலை பொறுத்து அடுத்த பருவத்தில் முழுமையாக பயிரிட உள்ளோம் என தெரிவிக்கிறார்.


Watch video | நாங்க கை வச்சா... மண்ணெல்லாம் பொன்னு தான்.. விவசாயத்தை அடையாளமாக்கிய கிராம பெண்கள்!

தங்களுக்கு தேவையான உரங்களை தாங்களே தயாரித்து வருகிறோம், விரிடி என்ற இந்த ரகத்தை கொரோனாவால் தயாரிக்க முடியாத நிலை ஏற்பட்டது, தொடர்ந்து அதனை ஊர்மக்களுடன் இணைந்து விரைவில் தயார் செய்வோம், பி எஸ் இ, பி எட் வரை படித்து உள்ளேன், இந்த படிப்பிற்கு வெளியில் சென்று வேலை பார்த்தால் மன அழுத்தம் பிரசர், சுகர் போன்ற பல்வேறு வியாதிகள் தான் வரும், ஆனால் விவசாயம் பார்ப்பதால் நானே ராஜா நானே மந்திரியாக வாழ்ந்து வருகிறேன், அத்தோடு மன நிம்மதியும், உடல் ஆரோக்கியமும் கிடைக்கிறது என்கிறார் பட்டதாரி  விவசாயி மஞ்சு.


Watch video | நாங்க கை வச்சா... மண்ணெல்லாம் பொன்னு தான்.. விவசாயத்தை அடையாளமாக்கிய கிராம பெண்கள்!

இவ்வாறு தொழில் நுட்பத்தை படித்ததன் பேரில் கிராமத்தில் உள்ள பெண்கள் அனைவருமே ஆர்வமுடனும் தன்னம்பிக்கை உடனும் இயற்கை விவசாயம் செய்து வருவதால் தென்பத்து கிராமத்தை விதை கிராமமாக வேளாண்மைத்துறை தேர்வு செய்து உள்ளது. இவ்வளவு திட்டங்கள் அரசு கொடுப்பதன் மூலம் பெண்களாக சேர்ந்து விவசாயத்தை முன்னெடுத்து செல்கின்றனர். பெண்களால் வீடும், சமூகமும், நாடும், உலகும் முன்னேறி வரும் இன்றைய சூழலில் அரசின் முழு ஒத்துழைப்பு கிடைத்தால் எந்த சவாலையும் எதிர்கொள்ளவும், வெற்றிபெறவும் முடியும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் இக்கிராம பெண்கள்!!!!!


Watch video | நாங்க கை வச்சா... மண்ணெல்லாம் பொன்னு தான்.. விவசாயத்தை அடையாளமாக்கிய கிராம பெண்கள்!

சுந்தரம் பாட்டியின் பாட்டுகளே இக்கிராம விவசாயிகளின் களைப்பு நீங்க பூஸ்டர் - நீங்களும் கேட்டு மகிழுங்கள், 3 வீடியோக்களும் இதோ

https://twitter.com/RevathiM92/status/1484817176783917061?t=r0cBndCSHJQlYkDIX6FAKg&s=08

https://twitter.com/RevathiM92/status/1484814343984144384?t=jIhGDKD5EDO9UromneWjhg&s=08

https://twitter.com/RevathiM92/status/1484813214512648192?t=J3pI35S-u8KP6XtTv9H3Cg&s=08

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர்,  வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர், வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமாAmala supports Samantha : ’’அமைச்சர் மாதிரி பேசு..அரக்கி மாதிரி பேசாத’’வெளுத்து வாங்கிய அமலா!Ponmudi Angry : வாக்குவாதம் செய்த திமுககாரர்! கடுப்பான பொன்முடி!’’மைக்க குடு முதல்ல’’Anbil Mahesh Phone Call : ’’ IDEA இருந்தா சொல்லுப்பா’’அன்பில் மகேஷ் PHONE CALL!  இளம் விஞ்ஞானி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர்,  வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர், வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
"பிராமின்தான்.. ஆனா பீப் சாப்பிட்டாரு" சாவர்க்கர் குறித்து புயலை கிளப்பிய கர்நாடக அமைச்சர்!
"இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது" தேர்தல் பரப்புரையில் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Government School Student Innovation: அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
Salem Suitcase Murder: சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்...  விசாரணையில் அதிர்ச்சி தகவல்
சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்
Embed widget