மேலும் அறிய

Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ

18-ம் படி வழியாக ஐயப்பனை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் பம்பையிலே மிகக் குறைந்த செலவில் 24 மணி நேரமும் இருமுடி கட்ட வசதி செய்யப்பட்டு இருக்கிறது.

உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு மற்றும் மண்டல பூஜையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் பம்பையிலேயே பக்தர்கள் 24 மணி நேரமும் குறைந்த செலவில் இருமுடி கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.


Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ

புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. அதேபோல ஒவ்வொரு தமிழ் மாதத்தின் (மலையாள மாதத்தின்) முதல் 5 நாட்களிலும், விஷூ, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவில் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. 

இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் இந்தாண்டு கடந்த நவம்பர் 16ஆம் தேதியான மண்டல பூஜை தொடங்கியது.  இதற்காக நவம்பர் 15ஆம் தேதி மாலையே சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தில் நடை திறக்கப்பட்டது. மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து தீபம் ஏற்றினர். தொடர்ந்து 18-ஆம் படி வழியாக சென்று ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்க்கப்பட்டது.


Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ

தொடர்ந்து நவம்பர் 16ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு புதிய மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து தந்திரி பிரம்மாதத்தன் ஐயப்பன் சிலைக்கு நெய்யாபிஷேகம் செய்து மண்டல பூஜையை தொடங்கி வைத்தார். இதற்காக இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். மேலும் ஏற்கனவே மாலை அணிந்தவர்கள் ஐயப்பனை காண சபரிமலைக்கு வந்து செல்கின்றனர்

பொதுவாக சபரிமலை யாத்திரையை துவங்கும் பக்தர்கள் தங்களது ஊர்களிலேயே உறவினர்கள் முன்னிலையில் இருமுடி கட்டி பம்பைக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் வெளியூரில் வசிப்பவர்கள் அவசரமாக சபரிமலை பயணம் மேற்கொள்பவர்கள் இருமுடி கட்டாமல் மலைக்கு செல்கின்றனர். அதே நேரத்தில் இருமுடி கட்டிய பக்தர்கள் மட்டுமே பதினெட்டாம் படியில் ஏற அனுமதிக்கப்படுவார்கள். எனவே 18-ம் படி வழியாக ஐயப்பனை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் பம்பையிலே மிகக் குறைந்த செலவில் 24 மணி நேரமும் இருமுடி கட்ட வசதி செய்யப்பட்டு இருக்கிறது. இருமுடி கட்டு எடுத்து வர முடியாத பக்தர்கள் பம்பையிலே படி ஏற்றத்திற்கு அருகே விநாயகர் கோவில் சன்னதியில் இருமுடி கட்டிக் கொள்ளலாம்.


Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ

இதற்காக 300 ரூபாய் கட்டி ரசீது பெற்றுக் கொண்டால் அங்கு இருக்கும் பூசாரிகள் இருமுடி கட்டி பக்தர்களின் தலையில் ஏற்றி அனுப்பி வைப்பார்கள். மேலும் இங்கு கட்டப்படும் இருமுடியில் பிளாஸ்டிக் பயன்பாடு இருக்காது. ஒரு நெய் தேங்காய் மட்டும் தரப்படும். கூடுதல் நெய் தேங்காய்க்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். மேலும் ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாத பக்தர்கள் பம்பையில் ஸ்பாட் புக்கிங் செய்து இருமுடி கட்டிக் கொள்ளலாம் எனவும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thiruparankundram Case: வழக்கு போட்டவரை வசைபாடிய நீதிபதிகள்...திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிமன்றம் சொன்னது என்ன.?
வழக்கு போட்டவரை வசைபாடிய நீதிபதிகள்...திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிமன்றம் சொன்னது என்ன.?
செங்கோட்டையன் பதவிக்கு ஆப்பு? சண்டைய இழுத்துவிடாதீங்க! – உளறிக்கொட்டிய ஓபிஎஸ்! அதிர்ச்சியில் அதிமுக
செங்கோட்டையன் பதவிக்கு ஆப்பு? சண்டைய இழுத்துவிடாதீங்க! – உளறிக்கொட்டிய ஓபிஎஸ்! அதிர்ச்சியில் அதிமுக
LIC Smart Pension Plan: ரூ.1 லட்சம் முதலீடு போட்டால் போதும்! ஒவ்வொரு மாதமும் உயரும்! இந்த எல்.ஐ.சி. பிளானை பாருங்க!
LIC Smart Pension Plan: ரூ.1 லட்சம் முதலீடு போட்டால் போதும்! ஒவ்வொரு மாதமும் உயரும்! இந்த எல்.ஐ.சி. பிளானை பாருங்க!
Trump & Musk Interview: இவர அவர் புகழ்றதும்.. அவர இவர் புகழ்றதும்.. என்னவோ போங்க.!! ட்ரம்ப், மஸ்க் என்ன சொன்னார்கள்.?
இவர அவர் புகழ்றதும்.. அவர இவர் புகழ்றதும்.. என்னவோ போங்க.!! ட்ரம்ப், மஸ்க் என்ன சொன்னார்கள்.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

K Pandiarajan : தவெக-வுக்கு தாவும் மாஃபா? திமுகவில் இணையும் OPS MLA? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்Tiruppur : ”துப்பாக்கி வச்சி மிரட்டுறாங்க” ஜெய் பீம் பட பாணியில் போலீஸ்! கதறி அழும் குறவர் பெண்கள்!Avadi Murder CCTV: பட்டப்பகலில் வெட்டிக்கொலை!பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!ஆவடியில் நடந்த பயங்கரம்Chengalpattu News: ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruparankundram Case: வழக்கு போட்டவரை வசைபாடிய நீதிபதிகள்...திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிமன்றம் சொன்னது என்ன.?
வழக்கு போட்டவரை வசைபாடிய நீதிபதிகள்...திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிமன்றம் சொன்னது என்ன.?
செங்கோட்டையன் பதவிக்கு ஆப்பு? சண்டைய இழுத்துவிடாதீங்க! – உளறிக்கொட்டிய ஓபிஎஸ்! அதிர்ச்சியில் அதிமுக
செங்கோட்டையன் பதவிக்கு ஆப்பு? சண்டைய இழுத்துவிடாதீங்க! – உளறிக்கொட்டிய ஓபிஎஸ்! அதிர்ச்சியில் அதிமுக
LIC Smart Pension Plan: ரூ.1 லட்சம் முதலீடு போட்டால் போதும்! ஒவ்வொரு மாதமும் உயரும்! இந்த எல்.ஐ.சி. பிளானை பாருங்க!
LIC Smart Pension Plan: ரூ.1 லட்சம் முதலீடு போட்டால் போதும்! ஒவ்வொரு மாதமும் உயரும்! இந்த எல்.ஐ.சி. பிளானை பாருங்க!
Trump & Musk Interview: இவர அவர் புகழ்றதும்.. அவர இவர் புகழ்றதும்.. என்னவோ போங்க.!! ட்ரம்ப், மஸ்க் என்ன சொன்னார்கள்.?
இவர அவர் புகழ்றதும்.. அவர இவர் புகழ்றதும்.. என்னவோ போங்க.!! ட்ரம்ப், மஸ்க் என்ன சொன்னார்கள்.?
IND Vs BAN CT 2025: நாகினி பாய்ஸை வீழ்த்துமா ரோகித் படை? இந்தியாவின் பலம், வங்கதேசத்தின் பலவீனம் - துபாய் மைதானம் எப்படி?
IND Vs BAN CT 2025: நாகினி பாய்ஸை வீழ்த்துமா ரோகித் படை? இந்தியாவின் பலம், வங்கதேசத்தின் பலவீனம் - துபாய் மைதானம் எப்படி?
Shanam shetty: 10 பேருடன் படுப்பேன்; தம் அடிப்பேன்! என்ன இதெல்லாம்? படுக்கத்தான் கூப்பிடுறாங்க! – கிழித்தெடுத்த பிரபல நடிகை
Shanam shetty: 10 பேருடன் படுப்பேன்; தம் அடிப்பேன்! என்ன இதெல்லாம்? படுக்கத்தான் கூப்பிடுறாங்க! – கிழித்தெடுத்த பிரபல நடிகை
"தோப்பு கொஞ்சம் பொறுங்க.. அதான் நான் பேசுறேன்ல" முன்னாள் அமைச்சரிடம் எகிறிய இந்நாள் அமைச்சர்!
Periyar University: பெரியார் பல்கலை. பதிவாளர் பணிக்கு நேர்காணல்; தடை விதிக்கக் கோரிக்கை- என்ன காரணம்?
Periyar University: பெரியார் பல்கலை. பதிவாளர் பணிக்கு நேர்காணல்; தடை விதிக்கக் கோரிக்கை- என்ன காரணம்?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.