![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Bus Strike: வேலை நிறுத்த அறிவிப்பு - நெல்லையில் பேருந்து போக்குவரத்தின் நிலை என்ன?
சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் இயங்கவில்லை.
![Bus Strike: வேலை நிறுத்த அறிவிப்பு - நெல்லையில் பேருந்து போக்குவரத்தின் நிலை என்ன? Bus Strik What is the status of bus transport in Nellai? - TNN Bus Strike: வேலை நிறுத்த அறிவிப்பு - நெல்லையில் பேருந்து போக்குவரத்தின் நிலை என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/09/fd48fe89045114675d087390d09f8fd21704774392294571_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு, ஓய்வூதிய பலன்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த சில தொழிற்சங்கத்தினர் இன்று (9- ந்தேதி) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். முன்னதாக கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அடுத்தடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து இந்த போராட்டமானது அறிவிக்கப்பட்டது
அதன்படி 9 ஆம் தேதி முதல் பேருந்துகள் இயங்காது எனவும் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் அரசு தரப்பில் இது தொடர்பாக கூறும் பொழுது, அனைத்துப் பேருந்துகளும் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை அனைத்து பேருந்துகளும் அதிகாலை முதல் வழக்கம்போல் இயங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தற்காலிக பேருந்து ஓட்டுநர்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அரசு போக்குவரத்து நெல்லை மண்டலத்தில் நெல்லை மாவட்டத்தில் 7 பணி மனைகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 7 பணிமனைகளும் தென்காசி மாவட்டத்தில் 4 பணி மனைகளும் அடங்கும். இங்கு மொத்தம் 898 பேருந்துகள் உள்ளன. அனைத்து பேருந்துகளும் பணிமனைகளில் இருந்து வெளியேறி அதிகாலை முதலே நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருச்செந்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளுக்கு வழக்கம்போல் பேருந்துகள் இயங்கி வருகின்றன.
நெல்லை மாநகர் பகுதியிலும் வண்ணார்பேட்டை புறவழிச்சாலை பணிமனை, தாமிரபரணி பணிமனையில் உள்ள 122 பேருந்துகளும் இயங்கி வருகின்றன. கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பேருந்து நிலையத்தில் இருந்து அவர்கள் அனைத்து பேருந்துகளையும் நேர அட்டவணைப்படி இயக்கும் பணியை கண்காணித்து வருகின்றனர். மேலும் அனைத்து பணி மனைகள் பேருந்து நிலையங்களிலும் பாதுகாப்புக்காக போலீஸ் நிறுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் ஒரு சில கிராமப்புற பகுதிகளில் பேருந்துகள் இயங்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதே போல சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் இயங்கவில்லை, எனவே நெல்லை மாவட்டத்தில் அனைத்து பேருந்துகளும் வழக்கம் போல் இயங்கும் நிலையில் பெரிதளவில் பொதுமக்களுக்கு எந்த வித எந்தவித பாதிப்பும் இல்லை என்று தெரிகிறது. மேலும் ஒரு சில இடங்களுக்கு மட்டும் பேருந்துகள் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)