மேலும் அறிய

Thiruchendhur : திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

முருகன் அரக்கனை அழிக்கிறார். முருகன் இங்கு எழுந்தருள வேண்டும் என வியாழபகவான் வேண்டி கேட்க முருகன் திருச்செந்தூரில் எழுந்தருள்கிறார் என்கிறது புராண வரலாறு

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி சுவாமி கோயிலில் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா' பக்தி கோஷம் விண்ணத்திர மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 


Thiruchendhur : திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

முருகனின் அறுபடை வீடுகளில் 5 வீடுகள் மலைகளில் இருக்க இது மட்டும்தான் கடற்கரையில் அமைந்திருக்கிறது. எனவே இந்த ஸ்தலம் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றிருக்கிறது. இக்கோயிலில் ஆண்டு தோறும் மாசித்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.


Thiruchendhur : திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முக்கிய திருவிழாவான மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதை முன்னிட்டு அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டு. 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை. அதிகாலை 2:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம். அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அதிகாலை 3:00 மணிக்கு வெள்ளி பல்லக்கில் யானை மீது அமர்ந்து கொடிப்பட்டம் வீதி உலா வந்து கோயிலைச் சேர்ந்தது. அதிகாலை 5:00 மணிக்கு கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்தில் கும்பலக்கனத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி துவங்கியது. சரியாக அதிகாலை 5:20 மணிக்கு மேளதாளங்கள் பஞ்சவாத்தியங்கள் முழங்க கோமதி சங்கர் சிவச்சாரியார் கொடியேற்றினார்.


Thiruchendhur : திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் 'வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா' என பக்தி கோஷம் எழுப்பினர். தொடர்ந்து கொடி மரத்திற்கு தர்ப்பைப் புல் வைத்து கட்டப்பட்டது.‌ பின்னர் 16 வகையான அபிஷேகம் நடந்தது. பின்னர் கொடி மரம். வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டடு வேதபராயணம். தேவாரம் திருப்புகழ் பாடப்பட்டு மகாதீபராதனை நடந்தது. 


Thiruchendhur : திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

இந்நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீ மத் திருச்சிற்றம்பலம் தம்பிரான் சுவாமிகள். சப் கோர்ட் நீதிபதி வஷித்குமார். அறங்காவலர் குழு உறுப்பினர் கணேசன். கோயில் இணை ஆணையர் கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர். டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் முரளிதரன். பாலமுருகன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர் மாலை 4:30 மணிக்கு அப்பர் சுவாமிகள் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலாவும்,தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு ஸ்ரீ பாலவிநாயகர் அஸ்திர தேவருடன் தந்தப்பல்லக்கில் கோயிலிலிருந்து புறப்பட்டு ஒன்பது சந்திகளில் வலம் வந்து கோயிலைச் சேர்வர்.


Thiruchendhur : திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

இத்திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சிவன் கோயிலிருந்து சுவாமி குமரவிடங்க பெருமான். தெய்வானை அம்மன் தனித்தனியே சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 5-ம் திருவிழாவான 1-ம் தேதி இரவு 7:30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை. 7-ம் திருவிழாவான 3-ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு உருகு சட்டசேவையும். மாலையில் சுவாமி சண்முகர் தங்கசப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. 8-ம் திருவிழாவான 4- ம் தேதி அதிகாலை சுவாமி சண்முகர் வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளை சாத்திகோலத்திலும். பகல் 11:30 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை சாந்தி கோலத்திலும் வீதி உலா நடக்கிறது.


Thiruchendhur : திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 10-ம் திருவிழா 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. 11-ம் திருவிழாவான 7-ம் தேதி இரவு தெப்ப உற்சவம். 12-ம் திருவிழாவான 8-ம் தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன்.  இணை ஆணையர் கார்த்திக் மற்றும் அறங்காவலர்கள் செய்து உள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget