மேலும் அறிய

கணவரை இழந்த பெண்ணை ஏமாற்றி, 3 முறை கர்ப்பமாக்கிய இளைஞர் : நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் தர்ணா

தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சசிகலா கூறி வரும் நிலையில் அதனை முத்து ஏற்க மறுத்து வருவதோடு கருவை கலைத்து விடுமாறு கூறி வருகிறார்

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள முருகேஷபுரத்தை சேர்ந்தவர் சசிகலா, இவருக்கு கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது, சசிகலாவின் கணவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் கைக் குழந்தையுடன் வசித்து வந்து உள்ளார். இந்நிலையில் சசிகலா திசையன்விளை மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஒரு தனியார் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்பொழுது அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முத்து என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இது நாளடைவில் காதலாக மாறி உள்ளது, சசிகலா ஏற்கனவே திருமணமான விதவை பெண் என தெரிந்தும் மறுவாழ்வு கொடுப்பதாக முத்து பழகி வந்து உள்ளார்.  மேலும்  சசிகலாவை தான் திருமணம் செய்வதாக கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார், இதனால் சசிகலா இரண்டு முறை கர்ப்பமாகி அதனை யாருக்கும் தெரியாமல்  அழித்து உள்ளார்.  


கணவரை இழந்த பெண்ணை ஏமாற்றி, 3 முறை கர்ப்பமாக்கிய இளைஞர் : நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் தர்ணா

இந்நிலையில் தற்போது மூன்றாவது முறையாக முத்து கர்ப்பமாகி உள்ளார். கர்ப்பமாகி மூன்று மாதம் ஆகியும்  திருமணம் செய்வதாக கூறி பலமுறை ஏமாற்றி வந்துள்ளார், மேலும் தற்போது தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சசிகலா கூறி வரும் நிலையில் அதனை முத்து ஏற்க மறுத்து வருவதோடு கருவை கலைத்து விடுமாறு கூறி வருகிறார். இது தொடர்பாக முத்துவும், சசிகலாவும் பேசிய ஆடியோவில் கருவை கலைத்து விடு இல்லையெனில் என்னை உயிரோடு பார்க்க முடியாது என முத்து மிரட்டுவதோடு நான் செத்தாலும்  உங்க எல்லோரையும் அழ வைத்து தான் விட்டு தான் சாவுவேன் என்று தெரிவிக்கிறார். எனது உடல் குறித்து எந்த கவலையும் இன்றி அடிக்கடி மாத்திரை கொடுத்து கலைக்க சொல்வது நியாயமா? என்னை பற்றி எந்த ஒரு கவலையும் உனக்கு இல்லை, உன்னையும் உனது குடும்பத்தை மட்டுமே பார்க்கிறாய் என சசிகலா கூறுகிறார். சரி உனக்காக கர்ப்ப பையில் கட்டி இருப்பதாக கூறி நாளை மருத்துவமனையில் சென்று கலைக்க முயற்சி செய்கிறேன் எனவும் கூறுகிறார், இப்படி உரையாடல்கள் ஒரு புறம் வெளிவர சசிகலா கடந்த சில தினங்களுக்கு முன்பு திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.


கணவரை இழந்த பெண்ணை ஏமாற்றி, 3 முறை கர்ப்பமாக்கிய இளைஞர் : நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் தர்ணா

அவர் அளித்த புகாரின் அடிப்படையில்  திசையன்விளை போலீசார் முத்துவை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர் சசிகலாவை திருமணம் செய்து கொள்வதாக ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் சமாதானமாகப் பேசி அனுப்பி வைத்து உள்ளனர்.  ஆனால் இன்றுவரை சசிகலாவை முத்து திருமணம் செய்யவில்லை என்றும்  சசிகலாவை ஏமாற்றி அவரிடமிருந்து பல லட்ச ரூபாய் மற்றும் நகை வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது, மேலும் காவல் நிலையத்தில் ஒப்புக் கொண்ட முத்து பின்னர் தலைமறைவாகி விட்டதாகவும் தன்னை ஏமாற்றியது தொடர்பான ஆடியோ மற்றும் வங்கி கணக்கு ஆதாரங்களையும் சசிகலா வெளியிட்டு தனக்கு நியாயம் வேண்டும் என நேற்று காலை முத்துவின் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை இன்ஸ்பெக்டர் ஜமால் சசிகலாவிடம் பேச்சுவார்த்தை நடந்தி நாளை அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் அடிப்படையில் போராட்டத்தை கைவிட்டு வீட்டிற்கு திரும்பி சென்றார்,  கணவனை இழந்து குழந்தையுடன் வசித்து வந்த பெண்ணை ஆசைவார்த்தை கூறி காதல் வலையில் சிக்க வைத்ததோடு மூன்று முறை கர்ப்பமாக்கி ஏமாற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


கணவரை இழந்த பெண்ணை ஏமாற்றி, 3 முறை கர்ப்பமாக்கிய இளைஞர் : நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் தர்ணா

இதேபோன்று ஒரு சம்பவம் திசையன்விளை அருகே முத்துபேச்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த நர்சிங் மாணவி பிரியங்கா என்பவர் வீட்டின் அருகே உள்ள  அஜித் குமாரை கடந்த 4 வருடமாக காதலித்து வந்த நிலையில்  பிரியங்காவை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அவருடன் உல்லாசமாக இருந்து 5 லட்சம் வரை ஏமாற்றி ஆந்திராவில் வேறொரு பெண்ணை திருமணம் செய்ததாக, அஜீத்குமார் மீது நடவடிக்கை  எடுக்கக்கோரி  திசையன்விளை காவல் நிலையத்தில் நிலையத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Annamalai:
Annamalai: "பக்தர்கள் உயிரிழப்புக்கு சேகர்பாபுதான் பொறுப்பு" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு
IPL 2025 Coach:
IPL 2025 Coach: "பாண்டிங் முதல் பதானி வரை" 10 அணிக்கும் பயிற்சியாளர்கள் யார்? யார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMDK Alliance DMK | Sunita williams Return | நேரலை செய்யும் NASA ஆளே மாறிப்போன சுனிதா மாணவர்கள் நெகிழ்ச்சி சம்பவம்Nagpur Violence | பற்றி எரியும் மகாராஷ்டிரா இந்துக்கள் இஸ்லாமியர்கள் மோதல் படத்தால் வந்த பஞ்சாயத்துADMK Sengottaiyan: சுத்துப்போட்ட எம்எல்ஏ-க்கள்..! செங்கோட்டையனுக்கு செக்! எடப்பாடி பக்கா ஸ்கெட்ச்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Annamalai:
Annamalai: "பக்தர்கள் உயிரிழப்புக்கு சேகர்பாபுதான் பொறுப்பு" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு
IPL 2025 Coach:
IPL 2025 Coach: "பாண்டிங் முதல் பதானி வரை" 10 அணிக்கும் பயிற்சியாளர்கள் யார்? யார்?
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
NEET PG 2025: இனி 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு; தேதி அறிவிப்பு- வலுக்கும் எதிர்ப்புகள்!
NEET PG 2025: இனி 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு; தேதி அறிவிப்பு- வலுக்கும் எதிர்ப்புகள்!
India Post GDS Result: இந்திய அஞ்சல் துறையில் 21,413 பணியிடங்கள்; ஜிடிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
India Post GDS Result: இந்திய அஞ்சல் துறையில் 21,413 பணியிடங்கள்; ஜிடிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
Fact Check: அரசுப்பள்ளி விழாவில் கட்டிப்பிடித்து நடனமாடும் மாணவ- மாணவி?- வைரல் வீடியோ- நடந்தது என்ன?
Fact Check: அரசுப்பள்ளி விழாவில் கட்டிப்பிடித்து நடனமாடும் மாணவ- மாணவி?- வைரல் வீடியோ- நடந்தது என்ன?
Embed widget