மேலும் அறிய

வரதட்சணை கொடுமையால் 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை - கணவருக்கு 14 ஆண்டு சிறை

வரதட்சணை கொடுமை இளம்பெண் 2 குழந்தைகள் தற்கொலை : கணவர் மற்றும் அவரது தம்பிக்கு 14 ஆண்டு சிறை தண்டனை.

தேங்காய்பட்டணம் அருகே வரதட்சணை கொடுமையால் ரயில் முன்பு பாய்ந்து இரண்டு குழந்தைகளுடன் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் மற்றும் அவரது தம்பிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் மகிளா கோர்ட் தீர்பளித்தது.
 
தேங்காய்பட்டணத்தை அடுத்த வேட்டமங்கலத்தை சேர்ந்தவர் அஜிதா(30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெஸ்டின்சன் என்பவருக்கும் கடந்த 2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின்போது அஜிதாவுக்கு 38 பவுன் நகையும் ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொருட்களும் 7 பவுன் தங்கச்சங்கிலியும் மாப்பிள்ளை ஜெஸ்டின்சனுக்கு வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு  இரண்டு குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் அஜிதாவின் கணவரின் தம்பி நிக்சன் சாமுவேலுக்கு கல்லூரியில் பேராசியர் பணிக்காக 3 லட்சம் ரூபாய் தேவைபட்டது.
 

வரதட்சணை கொடுமையால் 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை - கணவருக்கு 14 ஆண்டு சிறை

இதற்காக அஜிதாவிடம் கூடுதல் பணம் கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர்.இதனால் மனவருத்தம் அடைந்த அஜிதா கடந்த 2012 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ம் தேதி கணவர் வீட்டில் இருந்து தனது இரு குழந்தைகளையும் அழைத்து கொண்டு மதியம் 12.30 மணியளவில் கன்னங்கோடு என்ற வழியாக செல்லும் ரயில்வே ட்ராக்கில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அஜிதாவின் பெற்றோர் புதுக்கடை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசாரும் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் மொத்தம் 33 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட அஜிதாவின் கணவர் ஜெஸ்டின்சன் மற்றும் அவரது தம்பி ஆகிய இருவருக்கும் தற்கொலைக்கு தூண்டியதாக பத்து ஆண்டு சிறை தண்டனையும், வரதட்சணை கேட்டதற்காக இரண்டு ஆண்டும், அதிக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதற்காக இரண்டு ஆண்டும் என மொத்தம் 14 ஆண்டு சிறைத்தண்டனையும்,15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்பளிக்கப்பட்டது.
 
 

 

கன்னியாகுமரி அருகே சுற்றுலா வாகனம் மீது தனியார் பள்ளி வாகனம் வேகமாக மோதிய பதைபதைக்கும் சிசி டிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பள்ளிக் குழந்தைகள் இல்லாத நிலையில் சுற்றுலா வாகனத்தில் வந்த 7 சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர்.
 

வரதட்சணை கொடுமையால் 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை - கணவருக்கு 14 ஆண்டு சிறை
 
 
கன்னியாகுமரி அருகே சுவாமிநாதபுரம் பகுதியில் புனித ஜோசப் கலாசன்ஸ் என்ற தனியார் பள்ளிக்கு சொந்தமான பள்ளி வாகனம் மாணவ, மாணவிகளை அவரவர் வீடுகளில் விட்டுவிட்டு பள்ளிக்கு அதி வேகமாக வந்த போது எதிரே வந்த சுற்றுலா வேன் மீது மோதியது. இதில் இரண்டு வேன்களின் முன்பகுதி பலத்த சேதமடைந்தன. இதில் மகாராஷ்டராவில் இருந்து கன்னியாகுமரி வந்த சுற்றுலா பயணிகள் 18 பேரில் 7 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
இதுகுறித்து கன்னியாகுமரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அதிர்ஷ்டவசமாக பள்ளி வேனில் மாணவ, மாணவிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. தற்போது விபத்திற்கான சிசிடிவி பதிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget