TVK Vijay: காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
TVK Vijay Rajyasabha: மாநிலங்களவை உறுப்பினர் பதவி மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழையும் முதல் வாய்ப்பை, காங்கிரசுக்கு தவெக தலைவர் விஜய் விட்டுக்கொடுத்ததற்கு பின்னாள் பல அரசியல் காரணங்கள் நிலவுகிறதாம்.

TVK Vijay Rajyasabha: மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரசுக்கு ஏன் தவெக விட்டுக் கொடுத்தது என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் மீது குவியும் விமர்சனங்கள்:
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுக கூட்டணியில் நீடித்து, வெறும் 18 எம்.எல்.ஏக்களை மட்டுமே வைத்து இருந்தாலும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் வசமாக்கியது. தேர்தலுக்கு பிறகு கூட்டணியில் இருந்து விலகி தவெக உடன் சேர்ந்து ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற்றது. அதாவது 60 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு சார்பில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பெறும் வாய்ப்பு ஆளுங்கட்சியான தவெகவிற்கு கிடைத்தது. ஆனால், அந்தனை வெறும் 5 எம்.எல்.ஏக்களை மட்டுமே கொண்டுள்ள காங்கிரஸ் கட்சிக்கு விஜய் விட்டுக் கொடுத்துள்ளார். இதன் மூலம், பெரிய உழைப்பு எதுவுமே இன்றி 3 மாதங்களில் 2 மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் 2 அமைச்சர் பதவியை பெற்று காங்கிரஸ் சுகம் காண்பதாக கடும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
திமுக நெருக்கத்தை விரும்பாத தவெக?
தவெக தலைவர் விஜயை நேற்று தமிழ்நாட்டிற்கான காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் க்ரிஷ் சோடங்கர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பிறகு செய்தியாளர்களை சந்திக்கையில், மாநிலங்களவை உறுப்பினர் பதவி தொடர்பாக முதலமைச்சர் உரிய முடிவெடுப்பார் என பதிலளித்தார். இந்தியா கூட்டணியில் திமுக தொடர்கிறதா? என்ற கேள்விக்கு, “தேசிய அளவிலான அந்த கூட்டணியில் இப்போதும் திமுக தொடர்கிறது. ஏதேனும் மாற்றம் இருந்தால் முறைப்படி அறிவிக்கப்படும்”என பதிலளித்தார். ஆனால், இதனை தவெக தலைமை விரும்பவில்லையாம். இந்தியா கூட்டணியில் தங்களுக்கான இடத்தை உறுதி செய்யவே மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஆளுங்கட்சி விட்டுக்கொடுத்துள்ளதாம்.
தீவிர ஆலோசனைக்குப் பிறகே முடிவு
மாநிலங்களவைக்குள் நுழையும் முதல் வாய்ப்பையே ஏன் காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும், லொயோலா மணி மற்றும் சம்பத் போன்ற பட்டியல் சமூத்தை சேர்ந்தவர்களை டெல்லிக்கு அனுப்பலாமே என்பது குறித்தும் பனையூரில் தீவிர ஆலோசனைகளும், விவாதங்களும் முன்னெடுக்கப்பட்டனவாம். இதனிடையே, தமிழ்நாட்டில் இல்லாத காங்கிரசுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்து தவெக சார்பில் வளர்த்து விடுவதை பாஜக மேலிடம் விரும்பவில்லையாம். இதன் காரணமாகவே அமித் ஷா உள்ளிட்டோர் விஜயை சந்திக்கவும் நேரம் ஒதுக்கவில்லையாம். இதனால் காங்கிரசுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவியை வழங்கலாமா? வேண்டாமா? எனவும் விவாதித்துள்ளனர்.
தவெகவின் டார்கெட் 2029
இதனிடையே, 2029 நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற வேண்டும் எனவும், அதற்கு இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்க வேண்டியது அவசியம் என்றும் தவெக விரும்புகிறதாம். ஆனால், அந்த கூட்டணியில் திமுக தொடர்ந்தால் தங்களுக்கான முக்கியத்துவம் குறையும் எனவும் கருதுகிறதாம். இதற்காகவே காங்கிரசுக்கு அந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கொடுத்து, எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் தங்களுக்கான இடத்தை உறுதி செய்யும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாம். அதோடு, தற்போதைய சூழலில் தங்களுக்காக டெல்லியில் குரல் கொடுக்க காங்கிரஸின் ஆதரவு தேவை எனவும் கருதுகிறதாம்.
அதோடு, பா. சிதம்பரம், தர்மர், கிரிராஜன், கல்யாண சுந்தரம், ராஜேஷ்குமார் மற்றும் புதியதாக நியமிக்கப்பட உள்ள காங்கிரஸ் எம்.பி., ஆகியோரின் பதவிக்காலம் வரும் 2028ம் ஆண்டுடன் முடிவடைய உள்ளது. அப்போது குறைந்தபட்சம் 3 எம்.பிக்கள் பதவியை தவெகவால் பெற முடியும். அதன் மூலம் 2029ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்னதாகவே, நாடாளுமன்றத்திற்குள் நுழையலாம் என தவெக திட்டமிட்டுள்ளதாம்.
Before You Go
Raghava Lawrence | TARGET விஜய்!TEAM அண்ணாமலை?லாரன்ஸ் மெகா ட்விஸ்ட்
ட்ரெண்டிங் செய்திகள்






















