Minister Keerthana | "பஸ் அனுப்புங்க போதும்"வீடியோ வெளியிட்ட பெண்கள்!உடனே செய்து முடித்த அமைச்சர்
இலவச பேருந்துலாம் வேணாம், எங்க ஊருக்கு அரை மணி நேரத்துக்கு ஒரு பஸ் வந்தாலே போதும் என கோணம்பட்டி பகுதி பெண்கள் கோரிக்கை வைத்த நிலையில் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான சிவகாசி – கோணம்பட்டி அரசு பேருந்து சேவையை தொடங்கி வைத்துள்ளார் அமைச்சர் கீர்த்தனா. ஊர் கோரிக்கை வைத்த பெண்ணுடன் சேர்ந்து அதே பேருந்தில் பயணித்த அமைச்சருக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.
கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக கோணம்பட்டி பகுதி மக்கள் தங்கள் ஊருக்கு பேருந்து சேவையை தொடங்கி வைக்குமாறு கோரிக்கை வைத்து வந்தனர். போதிய போக்குவரத்து வசதி இல்லாததால் மாணவர்கள், தொழிலாளர்கள், முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர். சமீபத்தில் அந்த ஊர் பெண்கள் சிலர் இலவச பேருந்து சேவை கூட வேண்டாம், முறையாக பேருந்துகள் இயக்கப்பட்டாலே போதும் என பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்தநிலையில் மக்களின் நீண்டகால கோரிக்கையான சிவகாசி – கோணம்பட்டி அரசு பேருந்து சேவையை அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார். பேருந்து சேவை தொடக்க விழாவில் பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். புதிய பேருந்து சேவையை அமைச்சர் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, பொதுமக்களுடன் இணைந்து பேருந்தில் பயணம் செய்து அவர்களிடம் நேரடியாக கருத்துகளை கேட்டறிந்தார். கோரிக்கை வைத்து வீடியோ வெளியிட்ட பெண்ணுடன் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டே பேருந்தில் பயணித்த அமைச்சரின் செயல் பாராட்டுகளை பெற்று வருகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்






















