மேலும் அறிய

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!

கேரளாவில் ஒன்றரை வயது குழந்தையின் மரணம் மாநிலத்தையே உலுக்கியிருக்கிறது. குழந்தையின் தாய் தனது காதலனுடன் சேர்ந்து கொடுஞ்சித்ரவதைகள் செய்து குழந்தையைக் கொன்றது பிரேதப் பரிசோதனை மூலம் தெரியவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரள மாநிலம் நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த தம்பதி அகிலா மற்றும் அகில். இவர்களுக்கு அர்ஷித் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்த நிலையில் குழந்தையின் தந்தை 2024-ல் உயிரிழந்தார். அதேவேளையில், அகிலாவுக்கு அஷ்கர் (31) என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது லிவ்-இன் உறவாக மாறியது.

அகிலா தனது குழந்தையுடன் அஷ்கரோடு ஒன்றாக வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தான், மே 29-ம் தேதி வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது குழைந்தை திடீரென மயங்கி விழுந்திருக்கிறது.

குழந்தையை அஷ்கர் உடனே திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு குழந்தைக்கு என்ன ஆனது என்று மருத்துவர்கள் கேட்டபோது, குழந்தை சாப்பிடும்போது தொண்டையில் உணவு சிக்கிக் கொண்டதாக அஷ்கர் கூறியிருக்கிறார்.

ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே குழைந்தை இறந்துவிட்டதால் மருத்துவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

அதனால் மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக திருவனந்தபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தது.

புகாரின்பேரில் வழக்கு பதிவுசெய்த போலீஸார், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

தற்போது பிரேத பரிசோதனையில் வந்திருக்கும் முடிவுகள் தான் கேரளாவையே அதிர்ச்சிக்குள்ளக்கியிருக்கிறது.

அதில், குழந்தையின் தலையை சுவரிலோ அல்லது தரையிலோ அடித்தது போன்ற காயங்கள், சிகரெட் சூடு என குழந்தையின் உடலில் 51 காயங்கள் இருப்பது பிரேத பரிசோதனை தெரியவந்திருக்கிறது.

இதுமட்டுமல்லாமல், இரண்டு Vlogger எடுத்த வீடியோவில் அகிலா தனது குழந்தையுடன் தோன்றினார்.

அந்த வீடியோவில் குழந்தையின் இரு கைகளிலும் கட்டு போடப்பட்டிருந்தது. அந்த விடியோவிலேயே குழந்தைக்கு என்ன ஆனது என்று கேட்கும்போது, குழந்தை சைக்கிளில் இருந்து கீழே விழுந்துவிட்டதாக அகிலா கூறியிருக்கிறார்.

ஆனால், தற்போது பிரேத பரிசோதனை முடிவுகளுடன் தொடர்புபடுத்தி பார்க்கும்போது, அகிலாவும் அஷ்கரும் சேர்ந்து சித்ரவதை செய்து குழந்தையின் கைகளை உடைத்ததாகத் தெரிகிறது.

இதனால், போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியபோதுதான், தங்களின் உறவுக்கு குழந்தை இடையூறாக இருந்ததால் இருவரும் சேர்ந்தே குழந்தையை கொன்றது தெரியவந்திருக்கிறது.

அதைத்தொடர்ந்து அகிலா, அஷ்கர் இருவரையும் போலீசார் கைதுசெய்தனர். தற்போது, இந்த வழக்கு நெடுமங்காடு DSP தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், குழந்தையின் உடல் தந்தையின் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

கைதுசெய்யப்பட்ட இருவருக்கும் கடும் தண்டனை விதிக்க வேண்டும் எனக் கொந்தளிக்கும் மக்கள், குழந்தை பாதுகாப்பில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்தியா வீடியோக்கள்

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai: புதிய கட்சி தொடங்குவது உறுதி.! 2 நாட்களில் அறிவிப்பு.? அண்ணாமலை டெல்லி சென்றதன் பின்னணி.!
புதிய கட்சி தொடங்குவது உறுதி.! 2 நாட்களில் அறிவிப்பு.? அண்ணாமலை டெல்லி சென்றதன் பின்னணி.!
சென்னை மக்களே கவனம் !! ஜூன் 2, 3 -ம் தேதிகளில் மின்தடை அறிவிப்பு – உங்கள் பகுதி உள்ளதா ?
சென்னை மக்களே கவனம் !! ஜூன் 2, 3 -ம் தேதிகளில் மின்தடை அறிவிப்பு – உங்கள் பகுதி உள்ளதா ?
CM Vijay's Plan: திருச்சி கிழக்கில் ராகவா லாரன்ஸ் போட்டி.? தவெகவின் மாஸ்டர் பிளான்; விஜய் போடும் கணக்கு என்ன.?
திருச்சி கிழக்கில் ராகவா லாரன்ஸ் போட்டி.? தவெகவின் மாஸ்டர் பிளான்; விஜய் போடும் கணக்கு என்ன.?
CM Vijay:
CM Vijay: "ஸ்கிரிப்ட் படிச்சா எப்படி வரலாறு தெரியும்?" - முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு திமுக பதிலடி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: புதிய கட்சி தொடங்குவது உறுதி.! 2 நாட்களில் அறிவிப்பு.? அண்ணாமலை டெல்லி சென்றதன் பின்னணி.!
புதிய கட்சி தொடங்குவது உறுதி.! 2 நாட்களில் அறிவிப்பு.? அண்ணாமலை டெல்லி சென்றதன் பின்னணி.!
CM Vijay's Plan: திருச்சி கிழக்கில் ராகவா லாரன்ஸ் போட்டி.? தவெகவின் மாஸ்டர் பிளான்; விஜய் போடும் கணக்கு என்ன.?
திருச்சி கிழக்கில் ராகவா லாரன்ஸ் போட்டி.? தவெகவின் மாஸ்டர் பிளான்; விஜய் போடும் கணக்கு என்ன.?
Annamalai: பாஜக கொடியை கழற்றிய அண்ணாமலை; புதிய கட்சி தொடக்கமா.? டெல்லி செல்லும் முன் பரபரப்பு பேட்டி
பாஜக கொடியை கழற்றிய அண்ணாமலை; புதிய கட்சி தொடக்கமா.? டெல்லி செல்லும் முன் பரபரப்பு பேட்டி
CM Vijay: முதல்வர் விஜய் அணியும் கோட் சூட் ரகசியம் தெரியுமா.? திருச்சியில் அவரே கொடுத்த விளக்கத்த பாருங்க
முதல்வர் விஜய் அணியும் கோட் சூட் ரகசியம் தெரியுமா.? திருச்சியில் அவரே கொடுத்த விளக்கத்த பாருங்க
Delimitation Bill: மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல்- மத்திய அரசு மும்முரம்!
Delimitation Bill: மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல்- மத்திய அரசு மும்முரம்!
US Iran Attacks: போட்டு சாத்திய அமெரிக்கா; பதிலுக்கு அடித்த ஈரான்; மத்திய கிழக்கில் மீண்டும் போரா.? நடப்பது என்ன.?
போட்டு சாத்திய அமெரிக்கா; பதிலுக்கு அடித்த ஈரான்; மத்திய கிழக்கில் மீண்டும் போரா.? நடப்பது என்ன.?
”பேப்பர் லீக், பசங்க வாழ்க்கை நாசமாகுது.. இவரு மாங்கா தோட்டம் பத்தி பேசிட்டு இருக்கார்” - மோடியை சாடும் காங்.,
”பேப்பர் லீக், பசங்க வாழ்க்கை நாசமாகுது.. இவரு மாங்கா தோட்டம் பத்தி பேசிட்டு இருக்கார்” - மோடியை சாடும் காங்.,
’’1800 அரசு பள்ளிகளில் HM இல்லை; 20 DEO காலியிடங்கள்- அவலத்துக்கு முடிவு எப்போ?’’அன்புமணி ஆதங்கம்!
’’1800 அரசு பள்ளிகளில் HM இல்லை; 20 DEO காலியிடங்கள்- அவலத்துக்கு முடிவு எப்போ?’’அன்புமணி ஆதங்கம்!
Embed widget