மேலும் அறிய

முந்திரி இறக்குமதியில் ஆப்ரிக்கா தொழிலதிபரிடம் ரூ.5.40 கோடி மோசடி- போலி ஆவணங்கள் மூலம் அபேஸ் செய்த கேரள வியாபாரி

வஉசி துறைமுகத்தில் இருந்த 19 கண்டெய்னர்களையும், உரிய அசல் ஆவணங்கள் இல்லாமல் திறந்து உள்ளனர். இதனால் எங்களுக்கு ரூ.5 கோடியே 40 லட்சம் வரை இழப்பு.

வெளிநாட்டில் இருந்து முந்திரி கொட்டை இறக்குமதி செய்து ரூ.5¼ கோடி மோசடி செய்ததாக கேரளாவை சேர்ந்த நிறுவனத்தின் மீது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பாலாஜி சரவணனிடம் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


முந்திரி இறக்குமதியில் ஆப்ரிக்கா தொழிலதிபரிடம் ரூ.5.40 கோடி மோசடி- போலி ஆவணங்கள் மூலம் அபேஸ் செய்த கேரள வியாபாரி

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சமீபகாலமாக ஏற்றுமதி, இறக்குமதியில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. இந்நிலையில், ஆப்ரிக்கா நாட்டில் இருந்து முந்திரி கொட்டை இறக்குமதி செய்ததில், கேரளா வியாபாரி ஒருவர் போலி ஆவணங்கள் மூலம் 6 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, மேற்கு ஆப்ரிக்கா கினியா பிசாவு பகுதியை சேர்ந்த தொழிலதிபர் அர்மண்டோ சில்வா தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அந்த புகார் மனுவில், கேரளாவை சேர்ந்த பெஜில் சுகுமார் என்பவர் முந்திரி கொட்டை இறக்குமதி தொடர்பாக கடந்த ஆண்டு என்னை தொடர்பு கொண்டார். இதையெடுத்து, 32 கன்டெய்னர்களில் தூத்துக்குடி துறைமுகம் வழியாக முந்திரி கொட்டை இறக்குமதி செய்வதற்கு பெஜில் சுகுமார் ஒப்பந்தம் செய்தார். வங்கி மூலம் பணத்தை கட்டியதும், அதற்கான ஆவணம் முறையாக வந்த பிறகு துறைமுகத்தில் இருந்து கண்டெய்னர் பெட்டிகளை வெளியே கொண்டு செல்ல வேண்டும் என இருவரும் ஒப்பந்தம் செய்து கொண்டோம்.


முந்திரி இறக்குமதியில் ஆப்ரிக்கா தொழிலதிபரிடம் ரூ.5.40 கோடி மோசடி- போலி ஆவணங்கள் மூலம் அபேஸ் செய்த கேரள வியாபாரி

ஆனால், இரண்டு கன்டெய்னர்களுக்கு மட்டும் முறையாக பணத்தை பெஜில் சுகுமார் அனுப்பினார். அதற்கான முறையான ஆவணங்களை காண்பித்து துறைமுகத்தில் இருந்து கன்டெய்னர் பெட்டிகளை எடுத்துச் சென்றார். பின்னர், 11 கன்டெய்னர்களுக்கு 90 நாட்களுக்குள் பணத்தை கட்டி விடுகிறேன் என உறுதியளித்த பெஜில் சுகுமார், அதற்கான ஆவணங்களை காண்பித்து எடுத்துச் சென்று விற்பனை செய்து விட்டார். ஆனால், அதற்குரிய பணத்தை இன்னும் தராமல் ஏமாற்றி வருகிறார்.


முந்திரி இறக்குமதியில் ஆப்ரிக்கா தொழிலதிபரிடம் ரூ.5.40 கோடி மோசடி- போலி ஆவணங்கள் மூலம் அபேஸ் செய்த கேரள வியாபாரி

இதுதவிர, தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்த 19 கன்டெய்னர்களை மோசடியாக போலி ஆவணங்கள் தயாரித்துள்ளார். எனது நிறுவனத்திற்கு பணத்தை செலுத்திவிட்டதாக ஆவணங்களை தயாரித்து, சுங்க இலாகா அதிகாரிகளிடம் காண்பித்துள்ளார். பின்னர், 19 கன்டெய்னர்களையும் உடைத்து அதில் இருந்த முந்திரி கொட்டைகளை லாரிகள் மூலம் ஏற்றிச் சென்றுள்ளார்.

இதற்கு உரிய சுமார் 5.40 கோடி ரூபாய் வரை தராமல் பெஜில் சுகுமார் ஏமாற்றி உள்ளார். இதுதொடர்பாக, அவரை தொடர்பு கொண்டால், உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று மிரட்டுகிறார். இந்த மோசடி தொடர்பாக 45 நாட்களாக தூத்துக்குடியில் தவித்து வருகிறேன். மாவட்ட எஸ்.பி., உடனடியாக வழக்கு பதிவு செய்து பெஜில் சுகுமாரை கைது செய்து எனக்கு சேர வேண்டிய பணத்தைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்து உள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ather Rizta Record Sales: குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget