மேலும் அறிய

Cyber Crime: பகுதி நேர வேலை...வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி ரூ.34 லட்சம் பணம் மோசடி

பணத்தை மீட்டு நடவடிக்கை மேற்கொண்ட தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டினார்

தூத்துக்குடியைச் சேர்ந்த கண்ணன் (41) என்பவரது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு இணையதளத்தில் பகுதி நேர வேலை வாய்ப்பு என்று செய்தி வந்துள்ளது. இதனையடுத்து கண்ணன் மேற்படி வாட்ஸ் ஆப் எண்ணை தொடர்பு கொண்டு அவர்களிடம் பேசிய போது ரேட்டிங்ஸ் கொடுப்பதன் மூலம் பணம் கிடைக்கும் என்று கண்ணனிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து கண்ணன் அனுப்பிய லிங்க் மூலம் ரேட்டிங் செய்து முதலில் சிறிய தொகை பெற்றுள்ளார். பின்னர் மேற்படி மர்ம நபர்கள் நாங்கள் சொல்லும் கம்பெனிக்கு முதலீடு செய்து ரேட்டிங்ஸ் கொடுத்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி கண்ணனின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு லிங்க் அனுப்பி உள்ளனர். அதனை நம்பி கண்ணன் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது 2 வங்கி கணக்குகளில் இருந்து பல்வேறு தவணைகளாக கூறிய 11 வங்கி கணக்குகளுக்கு மொத்தம் ரூபாய் 34,07,570/- பணத்தை அனுப்பி உள்ளார்.


Cyber Crime: பகுதி நேர வேலை...வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி ரூ.34 லட்சம் பணம் மோசடி

 

பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதையறிந்த கண்ணன் இதுகுறித்து NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார். கண்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள் செல்வி தலைமையில் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து மோசடி செய்த எதிரிகளை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டதில் கண்ணனின் வங்கி கணக்குகளில் இருந்து கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த 7 வங்கி கணக்குகளுக்கு சுமார் 22,32,990/- பணம் மற்றும் மேலும் 3 வங்கி கணக்குகளுக்கு ரூபாய் 11 லட்சம் பணம் பெறப்பட்டிருந்ததும், அந்த வங்கி கணக்குகளின் உரிமையாளர்களான கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர்களான அப்புன்னி மகன் வினித் (33), மனோஜ் குமார் மகன் நிகில் குமார் (30), குஞ்சாலி மகன் அலாவி (39) ஆகியோர் என்பதும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த மலப்புரம் பகுதியைச் சேர்ந்த மொய்தீன்குட்டி மகன் ரியாஸ் (32) ஆகிய 4 பேரும் மேற்படி கண்ணனிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.


Cyber Crime: பகுதி நேர வேலை...வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி ரூ.34 லட்சம் பணம் மோசடி

 

இதனையடுத்து மேற்படி தனிப்படை போலீசார் கேரள மாநிலம் மலப்புரம் பகுதிக்குச் சென்று மேற்படி எதிரிகள் 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு தூத்துக்குடி அழைத்து வரப்பட்டு தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். IVல் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையிலடைத்தனர். மேலும் இவ்வழக்கில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் மேற்படி எதிரிகளின் வங்கி கணக்குகளில் இருந்த ரூபாய் 9,17,785/- மோசடி பணத்தை Freeze செய்து நீதிமன்ற உத்தரவுப்படி மேற்படி Freeze செய்த பணத்தில் ரூபாய் 4,78,000/- பணத்தை கண்ணனின் வங்கி கணக்குக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மீதி பணத்தை மீட்க சைபர் குற்றப்பிரிவு போலீசார் சட்டரீதியாக தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில் தனிப்படை போலீசார் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு எதிரிகளை கண்டுபிடித்து கைது செய்து அவர்களிடமிருந்து பணத்தை மீட்டு நடவடிக்கை மேற்கொண்ட தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டினார்

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Embed widget