மேலும் அறிய

அம்மோனியா கசிவு ஏற்படவில்லை; மின் கசிவு காரணமாகவே தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்- அமைச்சர் சி.வி.கணேசன்

தொழிலக பாதுகாப்பு இயக்குனரகம் ஆலையில் ஆய்வு நடந்து வருவதாக குறிப்பிட்ட அவர் அதன் பின்பு எதனால் இந்த விபத்து ஏற்பட்டது என்பது தெரியவரும்.

தொழிலக பாதுகாப்பு இயக்குனரகம் ஆலையில் ஆய்வு நடந்து வருவதாகவும் அதன் பின்பு எதனால் தீ விபத்து ஏற்பட்டது என்பது தெரியவரும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி வி கணேசன் பேட்டி.


அம்மோனியா கசிவு ஏற்படவில்லை; மின் கசிவு காரணமாகவே தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்- அமைச்சர் சி.வி.கணேசன்

தூத்துக்குடி, எட்டயபுரம் சாலையில் உள்ள புதூர் பாண்டியாபுரம் பகுதி எதிரே மீன்களை பதப்படுத்தி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனமான நிலா சீ புட்ஸ் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதி மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.


அம்மோனியா கசிவு ஏற்படவில்லை; மின் கசிவு காரணமாகவே தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்- அமைச்சர் சி.வி.கணேசன்

இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் அந்த ஆலையில் மின் விபத்து ஏற்பட்டு அம்மோனியா வாயு கசிந்து விபத்துக்குள்ளானதாகவும் இதன் காரணமாக மீன் பதனிடும் நிறுவனம் முழுவதும் அமோனியா வாயு பரவி அங்கு பணியில் இருந்த 30 பேருக்கு மூச்சு திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு மயக்கம் அடைந்ததாகவும் கூறப்பட்டது.


அம்மோனியா கசிவு ஏற்படவில்லை; மின் கசிவு காரணமாகவே தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்- அமைச்சர் சி.வி.கணேசன்

பின்னர், உடனடியாக மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் மனோ பிரசன்னா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டு தீயை அணைத்தனர். இதைத்தொடர்ந்து, நிலா சீ புட்ஸ் நிறுவன வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடியில் உள்ள மூன்று தனியார் மருத்துவமனையான ஏவிஎம் மருத்துவமனை மற்றும் ராஜேஷ் திலக் மருத்துவமனை மற்றும் அருள்ராஜ் மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு சுவாச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சிப்காட் தீயணைப்பு துறையினர்  தொழிற்சாலையில் பாதிக்கப்பட்டபர்களை மீட்க சென்ற போது அதில் ஓர் தீயணைப்பு வீரர் வெங்கடசாமி என்பவரும் மயக்கமடைந்த நிலையில், ஆக மொத்தம் 31 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


அம்மோனியா கசிவு ஏற்படவில்லை; மின் கசிவு காரணமாகவே தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்- அமைச்சர் சி.வி.கணேசன்

இந்த சம்பவம் தொடர்பாக தாளமுத்து நகர் போலீசார்  விசாரணை நடத்திய நிலையில், மாசு கட்டுப்பாட்டு பொறியாளர் முரளி தலைமையிலான அதிகாரிகள், தடய அறிவியல் உதவி இயக்குனர் கலா லெட்சுமி, தலைமையிலான கைரேகை நிபுணர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஆய்வாளர் தேவ சுந்தரம், ஓட்டப்பிடாரம் தாசில்தார் சுரேஷ், ஆகியோர் இன்று காலை ஆய்வு மேற்கொண்டனர்.மேலும், நிலா சீ புட்ஸ் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டு ஆலையின் மெயின் கதவு மூடப்பட்டுள்ளது.


அம்மோனியா கசிவு ஏற்படவில்லை; மின் கசிவு காரணமாகவே தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்- அமைச்சர் சி.வி.கணேசன்

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை தூத்துக்குடி, மில்லர்புரம் பகுதியில் அமைந்துள்ள ராஜேஷ் திலக் மருத்துவமனையில் தொழிலாளர்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், சமூக நலன் மற்றும் மகளிர்த்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மற்றும் அதிகாரிகள் நலம் விசாரித்தனர்.


அம்மோனியா கசிவு ஏற்படவில்லை; மின் கசிவு காரணமாகவே தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்- அமைச்சர் சி.வி.கணேசன்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.வெ கணேசன், நிலா சீ புட்ஸ் நிறுவனத்தில் நேற்று இரவு 11 மணியளவில் மீன் கசிவு ஏற்பட்டு புகை மண்டலம் ஏற்பட்டது... இதில், தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர். அப்போது, அதிக புகை காரணமாக மயக்கம் ஏற்பட்டது. பின்னர் உடனடியாக மூன்று தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், 8 பேர் குணமடைந்து வீட்டிற்க்கு  சென்ற நிலையில் மீதம் 23 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களும் குணமடைந்து இன்று மாலை அல்லது நாளை காலை விடுவிக்கப்படுவார்கள்.


அம்மோனியா கசிவு ஏற்படவில்லை; மின் கசிவு காரணமாகவே தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்- அமைச்சர் சி.வி.கணேசன்

மேலும்,  ஆலையில் அமோனியா கசிவு ஏற்பட வாய்ப்பு இல்லை. தொழிலாளர் நலத்துறை சார்பில் முழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கப்படும். மேலும், முறையாக தொழிலாளர்களுக்கு ஆலையில் பாதுகாப்பு அளித்து இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.இதில், 16 பெண்கள் ஒரிசா மாநிலம், 2 பெண்கள் அசாம், மீதம் உள்ளவர்கள் தமிழ்நாட்டை சார்ந்தவர்கள் என்றார்.

இதனைத்தொடர்ந்து, விபத்து ஏற்பட்ட மீன் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமைச்சர்கள் கீதாஜீவன், C.V கணேசன், அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்..

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ather Rizta Record Sales: குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget