மேலும் அறிய

திருவாரூரில் தொடர் கனமழை... விவசாயிகள் மகிழ்ச்சி...வியாபாரிகள் வேதனை

மாவட்டத்தில் மொத்தமாக 22.8 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இந்தத் தொடர் மழை காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ விடுமுறை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர் கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மாவட்ட ஆட்சியர் விடுமுறை  அறிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளின் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் பல்வேறு இடங்களில் கனமழை என்பது பெய்து வந்தது. குறிப்பாக திருவாரூர், நன்னிலம், பேரளம், கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி நீடாமங்கலம், குடவாசல் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை மிதமானது முதல் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக நன்னிலத்தில் 6.6 சென்டிமீட்டர் மழை, நீடாமங்கலத்தில் 5.4 சென்டிமீட்டர் மழை, திருவாரூரில் 3.3 சென்டிமீட்டர் மழை, குடவாசலில் 2.3 சென்டிமீட்டர் மழை, மாவட்டத்தில் மொத்தமாக 22.8 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இந்தத் தொடர் மழை காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ விடுமுறை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவாரூரில் தொடர் கனமழை... விவசாயிகள் மகிழ்ச்சி...வியாபாரிகள் வேதனை
 
குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் 40 நாட்களில் இருந்து 50 நாட்கள் ஆன நெல் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் உரம் அடிக்க முடியாத சூழ்நிலையில் விவசாயிகள் இருந்து வந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் பெய்து வரும் மழையின் காரணமாக தற்பொழுது உரம் அடிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆகவே இந்த மழை என்பது விவசாயிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது எனவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். மேலும் மழை நீரை முழுவதுமாக சேமித்து வைப்பதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் வைத்துள்ளனர்.

திருவாரூரில் தொடர் கனமழை... விவசாயிகள் மகிழ்ச்சி...வியாபாரிகள் வேதனை
 
மேலும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக சாலையோர வியாபாரிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஓரிரு தினங்களே உள்ள நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக சாலையோர வியாபாரிகளின் தொழில் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். வட்டிக்கு கடன் வாங்கி தற்போது ஆடை வியாபாரம் மற்றும் பழங்கள் வியாபாரம் உள்ளிட்ட தொழில்களை நடத்திவரும் நிலையில் கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை நாங்கள் சந்தித்து வருகிறோம் வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்பது தெரியாமல் தவித்து வருகிறோம் தொடர்ந்து இந்த மழை பெய்தால் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை எங்களுக்கு மிகப்பெரிய வேதனையை தரக்கூடிய ஒரு பண்டிகையாக அமைந்து விடும் எனவும் சாலையோர வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் இறுதி கட்ட விற்பனை தான் எங்களுக்கு மிகப்பெரிய லாபத்தை தரக்கூடிய சூழ்நிலை இருந்து வரும் நிலையில் தற்போது பெய்து வரும் மலை நீடித்தால் மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும் எனவும் சாலையோர வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Embed widget