மேலும் அறிய

திருச்செந்தூர் முருகன் கோயிலில் 250, 20 ரூபாய் கட்டண தரிசனம் ரத்து - 100 ரூபாய் கட்டண தரிசனம் அமல்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 100 ரூபாய் கட்டண தரிசனம், மற்றும் பொது தரிசனங்களில் மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்

அறுபடை வீடுகளுள் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் 250 ரூபாய் மற்றும் 20 ரூபாய் சிறப்பு தரிசன கட்டணம் ரத்த்டு செய்யப்படுவதாகவும் 100 ரூபாய் கட்டணம் மற்றும் பொது தரிசனம் வாயிலாக மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிகப்படுவார்கள் எனவும், இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாகவும்  கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை தெரிவித்துள்ளார்.  


திருச்செந்தூர் முருகன் கோயிலில் 250, 20 ரூபாய் கட்டண தரிசனம் ரத்து - 100 ரூபாய் கட்டண தரிசனம் அமல்

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் ரூ.250 சிறப்பு கட்டணம் தரிசனம், ரூ.100, ரூ.20 ஆகிய கட்டண தரிசனமும், பொதுதரிசனம் என நான்கு வரிசைகளில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதில் ரூ.250 மற்றும் 100 கட்டண தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும், இதனால் பல்வேறு வகையில் பக்தர்கள் சிரமப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவின் அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்தில் சில மாற்றங்களை கோயில் நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. 


திருச்செந்தூர் முருகன் கோயிலில் 250, 20 ரூபாய் கட்டண தரிசனம் ரத்து - 100 ரூபாய் கட்டண தரிசனம் அமல்

இதுகுறித்து கோயில் இணை ஆணையர் சி.குமரதுரை செய்தியாளர்களிடம் கூறும்போது, திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய உயர் நீதிமன்ற உத்தரவுபடியும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சில நடைமுறைகளை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி  இக்கோயிலில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள 250 ரூபாய் கட்டணம்,  20 ரூபாய் கட்டணம் ஆகிய இரு கட்டண தரிசன முறை ரத்து செய்யப்படுகிறது.  100 ரூபாய் கட்டணம் மற்றும் பொது தரிசனம் மட்டுமே இனி நடைமுறையில் இருக்கும். இந்த தரிசன முறையிலும் மூலவரை இரு வரிசையில் வருபவர்களும் சமமாக தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தரிசன முறை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.


திருச்செந்தூர் முருகன் கோயிலில் 250, 20 ரூபாய் கட்டண தரிசனம் ரத்து - 100 ரூபாய் கட்டண தரிசனம் அமல்


கோயிலில் திரிசுதந்திரர்களுக்கு நிபந்தனைகளுடன் கூடிய உரிமைகளை வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். அதே போல் கோயில் பாதுகாப்பு பணியில் 125 ஆயுதபடை போலீசார் ஈடுப்படுத்தப்பட உள்ளனர். இதில் முதற்கட்டமாக 60 பேர் இன்று முதல் ஈடுப்பட உள்ளனர். ரூ.100 கட்டணம் தரிசனம் மற்றும பொது தரிசன முறையில் வரும் பக்தர்கள் மகா மண்டபத்தில் ஒரே வழியில் அனைத்து பக்தர்களும் சமமமாக சென்று மூலவரை தரிசனம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் எவ்வித சிரமமின்றி தரிசனம் செய்ய பல்வேறு மாற்றங்கள் இன்னும் பரிசீலனையில் உள்ளது.


திருச்செந்தூர் முருகன் கோயிலில் 250, 20 ரூபாய் கட்டண தரிசனம் ரத்து - 100 ரூபாய் கட்டண தரிசனம் அமல்

விஐபி தரிசனத்துக்கு தனிநேரம் ஒதுக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன. கோயிலில் கைங்கரியம் செய்யும் திரிசுதந்திரர்கள் தங்கள் பெயர்களை கோயிலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். திரிசுதந்திரர்கள் பக்தர்களை தரிசனத்துக்கு அழைத்து செல்ல கூடாது என்ற நிபந்தனை அடிப்படையில் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி முறைப்படுத்தப்பட உள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் 15 நாட்கள் சோதனை அடிப்படையில் நடைமுறையில் இருக்கும் என்றார்.

தலைப்பு செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்! தேனி - எருமேலி இடையே புதிய ரயில் பாதை: மத்திய அரசு அதிரடி உத்தரவு!
சபரிமலை பக்தர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்! தேனி - எருமேலி இடையே புதிய ரயில் பாதை: அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும்? - சென்னை வானிலை மையத்தின் எச்சரிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும்? - சென்னை வானிலை மையத்தின் எச்சரிக்கை இதோ
Chennai Power Cut: சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப் போகிறது தெரியுமா.? இதோ லிஸ்ட்
சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப் போகிறது தெரியுமா.? இதோ லிஸ்ட்
Vegavathi Encroachments Relocation: தூக்கமிழந்த 1,400 குடும்பங்கள்! காஞ்சிபுரம் மக்களுக்கு நற்செய்தி! வேகவதி ஆற்றுக்கு வரப்போகும் மிகப்பெரிய விடிவு!
தூக்கமிழந்த 1,400 குடும்பங்கள்! காஞ்சிபுரம் மக்களுக்கு நற்செய்தி! வரப்போகும் மிகப்பெரிய விடிவு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Chennai Power Cut: சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப் போகிறது தெரியுமா.? இதோ லிஸ்ட்
சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப் போகிறது தெரியுமா.? இதோ லிஸ்ட்
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
Embed widget