மேலும் அறிய

’திருவாரூரில் கந்துவட்டி வசூலித்தால் குண்டர் சட்டத்தில் கைது’ - எஸ்.பி. விஜயகுமார் ’ஏபிபி நாடு’வுக்கு தகவல்

கந்து வட்டிக்கு பணம் கொடுப்பது குறித்து புகார் வந்தால் அவர்கள் மீது குண்டர் பாயும் என திருவாரூர் மாவட்ட எஸ்பி விஜயகுமார் ஏபிபி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்

திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள விஜயகுமார் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். திருவாரூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்டு வரும் சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து ஏபிபி செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், 
 
திருவாரூர் மாவட்டத்தில் கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்கள் அதிகமாக உள்ளனர், அதனால் அவர்களிடம் கந்துவட்டி வாங்கி பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கவும் தயங்குகின்றனர். பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு அதிக வட்டிக்கு பணம் வாங்கும் நிலையில் ஏழை, எளிய மக்கள் அதிக வட்டி தொகையை திருப்பி கொடுக்க முடியாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனை தடுக்க திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணனின் வழிகாட்டுதலின் படியும் தஞ்சாவூர் டி.ஐ.ஜி பிரவேஷ்குமார் அறிவுரையின் படியும் கந்துவட்டி வசூலிக்கும் நபர்கள் மீது கடுமையான சட்டப்படி நடவடிக்கை எடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
 
கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட நபர்கள் தாமாக முன்வந்து புகார் அளிக்கலாம், கந்துவட்டி வசூலித்த நபர் மீது உரிய விசாரணை மேற்கொண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் குண்டர் தடுப்பு சட்ட கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், புகார் அளிக்கும் நபர்களின்  பெயர் மற்றும் விலாசம் ரகசியமாக பாதுகாக்கப்படும் எனவும் கூறினார். 

’திருவாரூரில் கந்துவட்டி வசூலித்தால் குண்டர் சட்டத்தில் கைது’ - எஸ்.பி. விஜயகுமார் ’ஏபிபி நாடு’வுக்கு தகவல்
 
மாவட்டத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை பொறுத்தவரை, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக வன்கொடுமை செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்படுவார்கள். இதில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர் மற்றும் அவரை சார்ந்த விவரங்கள் முழுவதுமாக யாருக்கும் தெரியாத வகையில் பாதுகாக்கப்படும்.
 
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர் பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கிராமப்புறங்களில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் 43 இருசக்கர வாகனங்கள் மூலம் ரோந்து பணிகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
 
காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் மன உளைச்சல், மற்றும் மன அழுத்தம் வராமல் இருப்பதற்காக தமிழக காவல்துறை தலைவர் வாரத்திற்கு ஒரு நாள் காவலர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளதால் திருவாரூர் மாவட்டத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை என்பதை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் காவலர்களின் திருமணநாள், பிறந்த நாள் கொண்டாடும் காவல்துறையினர் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்காக விடுமுறை அளிப்பது நடைமுறையில் பின்பற்றப்பட்டு வருகிறது. 
 
கொரோனா தொற்று தமிழகத்தில் தற்போது அதிகரித்து வரும் நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் முகக் கவசம் மற்றும் தனிமனித இடைவெளி ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும். மேலும் அரசின் உத்தரவை மீறி முக கவசம் அணியாமல் இருப்பவர்கள் மீதும் ஒரே இடத்தில் அதிக அளவில் கூட்டம் கூறினால் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

காரைக்குடி மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு அதிரடி: ஜி-பே மூலம் ரூ.15 லட்சம் பரிமாற்றம் அம்பலம்!
காரைக்குடி மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு அதிரடி: ஜி-பே மூலம் ரூ.15 லட்சம் பரிமாற்றம் அம்பலம்!
காதலிக்கு ஐபோன் - தங்கச் சங்கிலி பறிப்பு !! வரிக்குதிரை படத்தால் சிக்கிய நபர்
காதலிக்கு ஐபோன் - தங்கச் சங்கிலி பறிப்பு !! வரிக்குதிரை படத்தால் சிக்கிய நபர்
கால்நடைகளால் விபத்து: உரிமையாளர்களுக்கு உயர் நீதிமன்றம் கடும் உத்தரவு!
கால்நடைகளால் விபத்து: உரிமையாளர்களுக்கு உயர் நீதிமன்றம் கடும் உத்தரவு!
திருப்பரங்குன்றம் மலை: ப்ரைவி கவுன்சில் உத்தரவுக்குப் பிந்தைய விரிவாக்கப் பணிகள் குறித்து அறிக்கை கோரிய உயர் நீதிமன்றம்!
திருப்பரங்குன்றம் மலை: ப்ரைவி கவுன்சில் உத்தரவுக்குப் பிந்தைய விரிவாக்கப் பணிகள் குறித்து அறிக்கை கோரிய உயர் நீதிமன்றம்!

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anitha Radhakrishnan : ‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா ராதாகிருஷ்ணன் கைதின் பரபரப்பு பின்னணி..!
‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா கைதின் பரபரப்பு பின்னணி..!
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
Ayatollah Ali Khamenei Funeral: இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
Vaigai Selvan quits AIADMK : அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
How Car Airbags Work: இவ்ளோ நாள் கார் ஓட்டுறீங்களே, ஏர்பேக்குல என்ன இருக்கு, அது உயிர எப்படி காப்பாத்துதுன்னு தெரியுமா.?
இவ்ளோ நாள் கார் ஓட்டுறீங்களே, ஏர்பேக்குல என்ன இருக்கு, அது உயிர எப்படி காப்பாத்துதுன்னு தெரியுமா.?
EPFO Auto Settlement: PF Claim-க்கு மாறிய விதிகள்; இனி 3 நாட்கள் தான்; 'தாமதமானால் அதிகாரிக்கு..' EPFO அதிரடி அறிவிப்பு
PF Claim-க்கு மாறிய விதிகள்; இனி 3 நாட்கள் தான்; 'தாமதமானால் அதிகாரிக்கு..' EPFO அதிரடி அறிவிப்பு
Revolt RVX: ஒரு சார்ஜில் 160 கிமீ பயணம்; அதிவேக சார்ஜிங்; நவீன அம்சங்கள்; அசர வைக்கும் ரிவோல்ட் RVX; விலை என்ன.?
ஒரு சார்ஜில் 160 கிமீ பயணம்; அதிவேக சார்ஜிங்; நவீன அம்சங்கள்; அசர வைக்கும் ரிவோல்ட் RVX; விலை என்ன.?
Embed widget