மேலும் அறிய

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்ட கடலோர கிராமங்கள்..!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துவருகிறது.

சீர்காழி தாலுக்கா சுற்றுவட்டார பகுதியில் நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, கடலோர கிராமங்களில் வெளியாட்கள் வருவதற்கு தடைவிதித்து, கிராம சாலைகளை மூடி தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் கடலோர கிராம மக்கள். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துவருகிறது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலை கண்டு மக்கள் அஞ்சிய நிலையில், தற்போதைய இராண்டாவது அலையில் பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகரித்திருப்பது இப்பகுதி பொதுமக்கள் இடையை மிகுந்த அச்சத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்ட கடலோர கிராமங்கள்..!

ஒருங்கிணைந்த நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 20,505 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரேநாளில் மட்டும் 652 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில் ஒருங்கிணைந்த நாகை, மயிலாடுதுறை  மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 241-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்நாள் வரை 16 ஆயிரத்து 783 பேர் குணமாகி விடு திரும்பியுள்ளனர். 3,483 பேர் தற்போது மயிலாடுதுறை, சீர்காழி, நாகை, வேதாரண்யம், உள்ளிட்ட பகுதிகளில் அரசு மருத்துவமனை, கொரோனா சிகிச்சை மையம், வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக மாவட்டத்தில் சீர்காழி  தாலுகாவில் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு பலி எண்ணிக்கையும் அதிகரித்தது வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்ட கடலோர கிராமங்கள்..!

இந்நிலையில் அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ள சூழலில், கிராம பகுதிகளில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கே அஞ்சுகின்றனர். தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு சீர்காழி நகர் பகுதியை மட்டுமே சார்ந்துள்ள 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நகர் பகுதிக்கு வந்து செல்வதை நிறுத்தியுள்ளனர். சீர்காழியை சுற்றியுள்ள மீனவ கிராமங்களான தொடுவாய், கூழையார், பழையார், மடவமேடு, கொட்டாய் மேடு, வேட்டங்குடி உள்ளிட்ட  கடலோர கிராமங்கள் மற்றும் உள்கிராமங்களை சேர்ந்த மக்கள் தாங்களே முழுமையாக தங்கள் கிராமத்தை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்ட கடலோர கிராமங்கள்..!

கிராமங்களுக்குள் நுழையும் பிரதான சாலைகளில் உள்ளூர் இளைஞர்களைக் கொண்டு சோதனை சாவடி அமைப்பை ஏற்படுத்தியும், தங்கள் கிராமத்தில் வெளிநபர்கள் அனுமதியில்லை என அறிப்பு பதாகைகள் வைத்தும், கிராம சாலைகளை தடுப்புகளால் மூடியும்  பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கொரோனா தொற்று அதிகம் உள்ள நகர் பகுதியிலேயே மக்கள் அலட்சியமாக சுற்றித்திரியும் இந்த வேளையில் தாங்களாகவே கடலோர மீனவ கிராமங்கள் மற்றும் உள்கிராம மக்களில் சுயகட்டுப்பாடு மற்றவர்களுக்கு பேரிடர் காலத்தில் ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது

தலைப்பு செய்திகள்

தஞ்சை மாவட்டத்தில் நீர்நிலைகளில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி குறித்து ஓய்வு நீதிபதி ஆய்வு
தஞ்சை மாவட்டத்தில் நீர்நிலைகளில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி குறித்து ஓய்வு நீதிபதி ஆய்வு
நடுவழியில் அதிகரித்த பிரசவ வலி...  தஞ்சாவூர் அருகே 108 ஆம்புலன்சிலேயே குவா...குவா!!!
நடுவழியில் அதிகரித்த பிரசவ வலி...  தஞ்சாவூர் அருகே 108 ஆம்புலன்சிலேயே குவா...குவா!!!
சர்வர் கோளாறு... ரேஷன் கடை எந்திரங்களை ஒப்படைத்து பணியாளர்கள் போராட்டம்: கும்பகோணத்தில் பெரும் பரபரப்பு
சர்வர் கோளாறு... ரேஷன் கடை எந்திரங்களை ஒப்படைத்து பணியாளர்கள் போராட்டம்: கும்பகோணத்தில் பெரும் பரபரப்பு
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
Embed widget