மேலும் அறிய

ஜாமினில் வெளிவந்த நபரை சரமாரியாக வெட்டிய கும்பல் - திருவாரூரில் பரபரப்பு!

சந்தோஷ்குமார் தனது வீட்டிலிருந்து கடைத்தெருவிற்கு நடந்து வந்து கொண்டிருந்த போது காரில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் சந்தோஷ் குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

நன்னிலம் அருகே சிறையில் இருந்து ஜாமினில் வந்து  ஒருவாரம் ஆன நிலையில் இளைஞர் வெட்டிப் படுகொலை. 

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள மணவாளநல்லூர் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் 28 வயதான சந்தோஷ் குமார் என்பவர் கொலை வழக்கில் 2 மாதம் சிறைவாசம் அனுபவித்து விட்டு ஒரு வாரத்திற்கு முன்பு பிணையில் வெளியில் வந்துள்ளார். இந்த நிலையில் சந்தோஷ்குமார் தனது வீட்டிலிருந்து கடைத்தெருவிற்கு செல்வதற்காக நடந்து வந்து கொண்டிருந்த போது காரில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் சந்தோஷ் குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் சந்தோஷ்குமாரின் தலையில் பலத்த வெட்டு விழுந்துள்ளது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சந்தோஷ் குமார் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மணவாளநல்லூர் திமுக ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் என்பவரை சந்தோஷ் உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல் படுகொலை செய்தது.இந்த கொலை வழக்கில் கணேசன் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் சிறையில் இருந்து வந்து ஒரு வாரத்திற்குள் சந்தோஷ்குமார் கூலிப் படையினரால் கொலை செய்யப்பட்டிருப்பது இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ஜாமினில் வெளிவந்த நபரை சரமாரியாக வெட்டிய கும்பல் - திருவாரூரில் பரபரப்பு!

ஊராட்சி மன்றத் தலைவர் கணேசன் கொலைக்கு பழிவாங்கும் விதமாக இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் என்கிற அடிப்படையில் எரவாஞ்சேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் சந்தோஷ் குமாரின் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். திருவாரூர் மாவட்டத்தில் சமீப காலமாக கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.குறிப்பாக பழிக்குப் பழி வாங்கும் விதமாக பல்வேறு கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நீடாமங்கலம் கடைத்தெருவில் பட்ட பகலில் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் முன் விரோதம் காரணமா வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கஞ்சா மற்றும் மது போதையின் காரணமாகவும் கொலை கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதே போன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு காட்டூர் பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவர் ஏற்கனவே நடைபெற்ற கொலைக்கு பழிவாங்கும் விதமாக கொலை செய்யப்பட்டார்.ஒரு கொலைக்கு பழிவாங்கும் விதமாக அடுத்தடுத்து கொலைகள் நடைபெறுவது திருவாரூர் மாவட்டத்தில் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 


ஜாமினில் வெளிவந்த நபரை சரமாரியாக வெட்டிய கும்பல் - திருவாரூரில் பரபரப்பு!

அதனை தடுக்கும் பொருட்டு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென திருவாரூர் மாவட்ட காவல்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக புதிதாக பொறுப்பேற்றுள்ள சுரேஷ்குமார் உரிய நடவடிக்கை எடுத்து தொடர்ந்து பழிக்கு பழிவாங்கும் வகையில் நடைபெறும் கொலைகளை தடுத்து நிறுத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

 

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் வெப்பம் தீவிரம்... மேகமூட்டம் நீடித்தாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை
தஞ்சாவூரில் வெப்பம் தீவிரம்... மேகமூட்டம் நீடித்தாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை
பாசன வாய்க்கால் கரையில் குவியும் குப்பைகள்... தஞ்சாவூர் அருகே தொற்றுநோய் அபாயம்!
பாசன வாய்க்கால் கரையில் குவியும் குப்பைகள்... தஞ்சாவூர் அருகே தொற்றுநோய் அபாயம்!
தஞ்சை மாவட்டத்தில் நிர்வாக அதிரடி! 7 தாசில்தார்களுக்கு பணியிட மாற்றம்... கலெக்டர் ரேவதி உத்தரவு
தஞ்சை மாவட்டத்தில் நிர்வாக அதிரடி! 7 தாசில்தார்களுக்கு பணியிட மாற்றம்... கலெக்டர் ரேவதி உத்தரவு
“தஞ்சையை தூய்மையான மாநகரமாக மாற்றுவோம்”... இணைந்து செயல்பட மேயர் பொறுப்பு அஞ்சுகம் பூபதி அறிவுறுத்தல்
“தஞ்சையை தூய்மையான மாநகரமாக மாற்றுவோம்”... இணைந்து செயல்பட மேயர் பொறுப்பு அஞ்சுகம் பூபதி அறிவுறுத்தல்

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் போட்ட ரகசிய திட்டம்.. பிளான் போட்டு சுக்கு நூறாக உடைத்த இபிஎஸ்.? ஆர்.பி.உதயகுமார் சொன்ன ஷாக் தகவல்
விஜய் போட்ட ரகசிய திட்டம்.. பிளான் போட்டு சுக்கு நூறாக உடைத்த இபிஎஸ்.? ஆர்.பி.உதயகுமார் சொன்ன ஷாக் தகவல்
Medical Admissions Reservation : மாணவர்களுக்கு குஷி.! மருத்துவ உள் இட ஒதுக்கீடு 10 % அதிகரிக்கப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மாணவர்களுக்கு குஷி.! மருத்துவ உள் இட ஒதுக்கீடு 10 % அதிகரிக்கப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
CM Vijay: லிஸ்ட் போட்ட யூட்யூபர்..! தூக்கி அடிக்கப்பட்ட IAS அதிகாரிகள் - திமுக அதிகாரிகளா? ஊழல் பேர்வழிகளா?
லிஸ்ட் போட்ட யூட்யூபர்..! தூக்கி அடிக்கப்பட்ட IAS அதிகாரிகள் - திமுக அதிகாரிகளா? ஊழல் பேர்வழிகளா?
சம்பவ இடத்திற்கு சென்ற கனிமொழி - ”சட்டசபையில பொய் சொல்லல, யாரையும் காப்பாற்ற துடிக்கல” TVK பதிலடி
சம்பவ இடத்திற்கு சென்ற கனிமொழி - ”சட்டசபையில பொய் சொல்லல, யாரையும் காப்பாற்ற துடிக்கல” TVK பதிலடி
Cheapest Strong Hybrid: நாட்டின் மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - 28KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்
நாட்டின் மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - 28KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்
CM Vijay: சொன்னதை செய்த விஜய்.. லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி அதிரடி கைது.. கட்சியில் இருந்து நீக்கம்!
CM Vijay: சொன்னதை செய்த விஜய்.. லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி அதிரடி கைது.. கட்சியில் இருந்து நீக்கம்!
J Radhakrishnan IAS : ஜெ., கருணாநிதி ஆட்சியில் கெத்து காட்டிய ராதாகிருஷ்ணன் IAS.! டம்மியாக்கிய விஜய்- இது தான் காரணமா.?
ஜெ., கருணாநிதி ஆட்சியில் கெத்து காட்டிய ராதாகிருஷ்ணன் IAS.! டம்மியாக்கிய விஜய்- இது தான் காரணமா.?
TN Weather Update: 19 மாவட்டங்களுக்கு வெப்ப அலை வார்னிங் - சென்னையில் மழை? தமிழக வானிலை அறிக்கை
19 மாவட்டங்களுக்கு வெப்ப அலை வார்னிங் - சென்னையில் மழை? தமிழக வானிலை அறிக்கை
Embed widget