மேலும் அறிய

Thiruvarur : கொட்டித் தீர்த்த கனமழை..! மழைநீரில் மூழ்கிய 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள்..! வேதனையில் விவசாயிகள்..

விவசாய நிலம் முழுவதும் தேங்கி இருந்தது இந்த மழை நீரை வடிய வைக்கும் படியில் தனி ஒரு ஆளாக கருப்பையன் என்கிற விவசாயி மழை நீரை முற்றிலுமாக வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தாளடி நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீரை வடிய வைக்கும் பணியில் தீவிரமாக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

காவேரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குழுவை சம்பா தாளடி என மூன்று கோபம் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாததன் காரணத்தினாலும் உரிய நேரத்தில் பருவமழை பொய்த்து போனதன் காரணத்தினாலும் மூன்று போகும் சாகுபடி என்பது ஒருபோதும் சம்பா சாகுபடி பணிகளை மட்டும் விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மீண்டும் மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி உரிய நேரத்தில் திறக்கப்பட்டதன் காரணத்தினால் கடந்த மூன்று ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் மூன்று போகம் சாகுபடி பணிகள் என்பது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வருடம் மேட்டூர் அணையிலிருந்து மே 24ம் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டதால் ஒரு லட்சத்து 57 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் ஈடுபட்டனர். தற்போது குறுவை சாகுபடி அறுவடை பணிகள் என்பது 95 சதவீதம் முடிவடைந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 517 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தாளடி நெற்பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.இதில் பெரும்பாலும் விவசாயிகள் நேரடி விதைப்பு முறையில் விதை விதைத்துள்ளனர். 


Thiruvarur : கொட்டித் தீர்த்த கனமழை..! மழைநீரில் மூழ்கிய 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள்..! வேதனையில் விவசாயிகள்..

இந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் திருவாரூர் மாவட்டத்தில் கடந்து நான்கு நாட்களாக கன மழை என்பது பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள தாளடி நெற்பயிர் 20000 ஏக்கர் பரப்பளவில் தெளித்து 20 நாட்களே ஆன பயிர்கள் வயலில் மழைநீர் தேங்கி உள்ளதால் அழுகி பாதிப்படைந்துள்ளது.

குறிப்பாக பேரளம் கூத்தாநல்லூர் விக்கிரபாண்டியம் கோட்டூர் இருள்நீக்கி திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தாளடி நெற்பயிர்கள் பாதிப்படைந்துள்ளன. மேலும் திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். சம்பா சாகுபடியில் சன்ன ரகம் விதைத்ததில் ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் கனமழையால் மழை நீரில் மூழ்கி நெற்பயிர்கள் பாதிப்படைந்துள்ளது மேலும் இரண்டு நாட்கள் மழை நீடித்தால் பாதிப்பு என்பது மேலும் அதிகரிக்க கூடும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Thiruvarur : கொட்டித் தீர்த்த கனமழை..! மழைநீரில் மூழ்கிய 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள்..! வேதனையில் விவசாயிகள்..

இந்த நிலையில் நேற்று காலை முதல் திருவாரூர் மாவட்டத்தில் மழை பெய்யாமல் இருந்து வரும் நிலையில் விவசாய நிலத்தில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே நாடாக்குடி கிராமத்தில் தாளடி நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாய நிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழை என்பது விவசாய நிலம் முழுவதும் தேங்கி இருந்தது இந்த மழை நீரை வடிய வைக்கும் படியில் தனி ஒரு ஆளாக கருப்பையன் என்கிற விவசாயி மழை நீரை முற்றிலுமாக வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இதேபோன்று மாவட்டம் முழுவதும் விவசாய நிலங்களில் தேங்கியுள்ள மழை நீரை அந்தந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தாமாக முன்வந்து வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடங்களில் நேரடியாக சென்று ஆய்வு செய்து சிறுகுறி வடிகால் வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரி மழைநீர் தேங்காாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jana Nayagan Audio Launch Live: கோட் சூட்டில் வந்த விஜய்...ஆர்பரித்த ரசிகர்கள்
Jana Nayagan Audio Launch Live: கோட் சூட்டில் வந்த விஜய்...ஆர்பரித்த ரசிகர்கள்
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
TVK Sengottaiyan: எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
ABP Premium

வீடியோ

Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jana Nayagan Audio Launch Live: கோட் சூட்டில் வந்த விஜய்...ஆர்பரித்த ரசிகர்கள்
Jana Nayagan Audio Launch Live: கோட் சூட்டில் வந்த விஜய்...ஆர்பரித்த ரசிகர்கள்
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
TVK Sengottaiyan: எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
ராணிப்பேட்டை: குரோமியம் கழிவுகள், கஞ்சா விற்பனை, உரிமைத் தொகை... சௌமியா அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டு!
ராணிப்பேட்டை: குரோமியம் கழிவுகள், கஞ்சா விற்பனை, உரிமைத் தொகை... சௌமியா அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டு!
ENG vs AUS: டி20-ஐ விட விறுவிறுப்பு.. இரண்டே நாளில் முடிந்த டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவை பழிவாங்கிய இங்கிலாந்து!
ENG vs AUS: டி20-ஐ விட விறுவிறுப்பு.. இரண்டே நாளில் முடிந்த டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவை பழிவாங்கிய இங்கிலாந்து!
Ration Shop: ரேஷன் கடையில் உணவு பொருட்கள்.! புதிய நடைமுறை அறிவிப்பு- ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு
ரேஷன் கடையில் உணவு பொருட்கள்.! புதிய நடைமுறை அறிவிப்பு- ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு
TTV Dhinakaran: ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியை டிக் செய்த டிடிவி தினகரன்.. உற்சாகத்தில் அமமுக!
TTV Dhinakaran: ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியை டிக் செய்த டிடிவி தினகரன்.. உற்சாகத்தில் அமமுக!
Embed widget