மேலும் அறிய

திருவாரூர் : 100 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடியதற்கு விவசாயிகள் எதிர்ப்பு.

தற்பொழுது நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிக அளவில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகளின் நெல் மூட்டைகளை விற்பனை செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் 100 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடியதற்கு விவசாயிகள் எதிர்ப்பு. அனைத்து இடங்களிலும் நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்.
 
காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 12 லட்சம் ஏக்கருக்கு மேல் சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசின் உத்தரவின் அடிப்படையில் டெல்டா மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 3 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டு பருவம் தப்பி பெய்த மழையின் காரணமாக சாகுபடி பணிகள் தொடங்கிய நாட்களிலிருந்து விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வந்தார்கள்.

திருவாரூர் : 100 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடியதற்கு விவசாயிகள் எதிர்ப்பு.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாகத்திற்கு சொந்தமான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் 500 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்த ஆண்டு பருவம் தப்பி பெய்த மழையின் காரணமாக அறுவடை பணிகள் என்பது கால தாமதமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் திடீரென்று எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் 100 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூடியுள்ளது. இந்த செயலுக்கு விவசாயிகள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் : 100 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடியதற்கு விவசாயிகள் எதிர்ப்பு.
தற்பொழுது நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிக அளவில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது. மேலும் அறுவடை பணிகள் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகளின் நெல் மூட்டைகளை விற்பனை செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்த நேரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடியுள்ளது விவசாயிகளுக்கு எதிரான செயலாகும். ஆகையால் இந்த அறிவிப்பை திரும்பப் பெற்று விட்டு அனைத்து இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மீண்டும் திறந்து விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் இல்லை என்றால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் உடனடியாக மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை மீண்டும் திறந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

தொழில்நுட்ப ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கணும்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு எதற்காக? 
தொழில்நுட்ப ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கணும்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு எதற்காக? 
விதிமீறி வண்டல் மண் அள்ளியவர்கள் மீது அரியலூர் கலெக்டர் அதிரடி:11 டிராக்டர்கள், 3 ஜேசிபி பறிமுதல்
விதிமீறி வண்டல் மண் அள்ளியவர்கள் மீது அரியலூர் கலெக்டர் அதிரடி:11 டிராக்டர்கள், 3 ஜேசிபி பறிமுதல்
தஞ்சாவூரில் வெப்பம் தீவிரம்... மேகமூட்டம் நீடித்தாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை
தஞ்சாவூரில் வெப்பம் தீவிரம்... மேகமூட்டம் நீடித்தாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை
பாசன வாய்க்கால் கரையில் குவியும் குப்பைகள்... தஞ்சாவூர் அருகே தொற்றுநோய் அபாயம்!
பாசன வாய்க்கால் கரையில் குவியும் குப்பைகள்... தஞ்சாவூர் அருகே தொற்றுநோய் அபாயம்!

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
CM Vijay warning : தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
DMK:
DMK: "தேர்தல் வாக்குறுதி vs தவெக-வின் பாசிஸ்ட் ஆட்சி" - விஜய் ஆட்சியை விமர்சிக்கும் திமுக - என்ன காரணம்?
TASMAC: குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்
குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் உணவகத்துடன் கூடிய Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்
US Iran Tensions: “உலகில் எந்த சக்தியாலும் ஹார்முஸை எங்களிடமிருந்து பறிக்க முடியாது“; ட்ரம்ப்புக்கு ஈரான் நேரடி வார்னிங்
“உலகில் எந்த சக்தியாலும் ஹார்முஸை எங்களிடமிருந்து பறிக்க முடியாது“; ட்ரம்ப்புக்கு ஈரான் நேரடி வார்னிங்
"அப்பா செய்த மிகப்பெரிய தியாகம் இதுதான்... செந்திலின் மகன் பேட்டி!"
125 சிசியா 350 சிசியா? தினசரி ஓட்டுவோருக்கு எந்த பைக் பெஸ்ட், எதில் மைலேஜ் அதிகம்? ஒப்பீடு
125 சிசியா 350 சிசியா? தினசரி ஓட்டுவோருக்கு எந்த பைக் பெஸ்ட், எதில் மைலேஜ் அதிகம்? ஒப்பீடு
Embed widget