மேலும் அறிய

திருவாரூர் : 100 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடியதற்கு விவசாயிகள் எதிர்ப்பு.

தற்பொழுது நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிக அளவில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகளின் நெல் மூட்டைகளை விற்பனை செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் 100 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடியதற்கு விவசாயிகள் எதிர்ப்பு. அனைத்து இடங்களிலும் நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்.
 
காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 12 லட்சம் ஏக்கருக்கு மேல் சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசின் உத்தரவின் அடிப்படையில் டெல்டா மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 3 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டு பருவம் தப்பி பெய்த மழையின் காரணமாக சாகுபடி பணிகள் தொடங்கிய நாட்களிலிருந்து விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வந்தார்கள்.

திருவாரூர் : 100 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடியதற்கு விவசாயிகள் எதிர்ப்பு.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாகத்திற்கு சொந்தமான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் 500 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்த ஆண்டு பருவம் தப்பி பெய்த மழையின் காரணமாக அறுவடை பணிகள் என்பது கால தாமதமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் திடீரென்று எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் 100 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூடியுள்ளது. இந்த செயலுக்கு விவசாயிகள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் : 100 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடியதற்கு விவசாயிகள் எதிர்ப்பு.
தற்பொழுது நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிக அளவில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது. மேலும் அறுவடை பணிகள் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகளின் நெல் மூட்டைகளை விற்பனை செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்த நேரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடியுள்ளது விவசாயிகளுக்கு எதிரான செயலாகும். ஆகையால் இந்த அறிவிப்பை திரும்பப் பெற்று விட்டு அனைத்து இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மீண்டும் திறந்து விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் இல்லை என்றால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் உடனடியாக மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை மீண்டும் திறந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாங்குநேரி: லாரி மீது பைக் மோதி விபத்து: தூக்கிவீசப்பட்ட காதல் ஜோடி சம்பவ இடத்திலேயே பலி
நாங்குநேரி: லாரி மீது பைக் மோதி விபத்து: தூக்கிவீசப்பட்ட காதல் ஜோடி சம்பவ இடத்திலேயே பலி
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Coolie Shooting starts: கூலி பராக்! அடுத்த ஆட்டத்துக்கு தயாரான தலைவர்... இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!
Coolie Shooting starts: கூலி பராக்! அடுத்த ஆட்டத்துக்கு தயாரான தலைவர்... இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!
Embed widget