மேலும் அறிய

இயற்கை மருத்துவ முறைக்கு ஆதரவு.... மயிலாடுதுறை ஆட்சியரிடம் இயற்கை விவசாயிகள் வாக்குவாதம்.!

இயற்கை மருத்துவ முறைக்கு ஆதரவு தெரிவித்து வாயில் கருப்பு துணி கட்டி மனு கொடுக்க வந்த விவசாயிகளுக்கும், ஆட்சியருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் விவசாயிகள் போலீசார் மூலம் வெளியேற்றப்பட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா எருக்கூர் கிராமத்தில் கடந்த 5 -ஆம் தேதி பெலுசியா என்ற பெண் தனது கணவர் ஜான் கிறிஸ்டோபர் உதவியுடன் வீட்டில் மருத்துவர்கள் உதவி இன்றி சுயமாக  குழந்தை பெற்றெடுத்தார். அதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த சுகாதாரத்துறையினர் காவல்துறையினர் உதவியுடன் பெலுசியா மற்றும் அவரது குழந்தையை மருத்துவ பரிசோதனைக்கு  அழைக்க முற்பட்டபோது அவர் செல்ல மறுத்துவிட்டார். 


இயற்கை மருத்துவ முறைக்கு ஆதரவு.... மயிலாடுதுறை ஆட்சியரிடம் இயற்கை விவசாயிகள் வாக்குவாதம்.!

மேலும், இதுகுறித்து சுகாதார துறையினர் காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் பெலுசியா, கணவர் ஜான் கிறிஸ்டோபர் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த நிம்மேலி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயும் நலம் பாரம்பரிய அறக்கட்டளை செயலாளர் சுதாகர் ஆகிய மூன்று பேர் மீது ஆணைக்காரன் சத்திரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். 




இயற்கை மருத்துவ முறைக்கு ஆதரவு.... மயிலாடுதுறை ஆட்சியரிடம் இயற்கை விவசாயிகள் வாக்குவாதம்.!

இந்நிலையில் காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை மனித உரிமை மீறலில் ஈடுபடுவதாகவும், தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சீர்காழி மற்றும் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த இயற்கை விவசாயிகள் வாயில் கருப்பு துணி கட்டி, கைகளை கயிற்றால் கட்டிக்கொண்டு  தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். அதனை மாவட்ட ஆட்சியர் வாங்க மறுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பாரம்பரிய மருத்துவத்தை அரசு சீரழிக்க நினைப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இதனால் மாவட்ட ஆட்சியருக்கும், விவசாயிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள் காவல்துறையினர் வெளியேற்றப்பட்டனர்.

மழைக்காலம் தொடங்கும் முன்பே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து 2 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் இரயில் மூலம் திருவண்ணாமலைக்கு அனுப்பி வைப்பு!

முன்பு எப்போதும் இல்லாத நிகழ்வாக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதிக்கு முன்னதாக டெல்டா மாவட்ட விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்து டெல்டா மாவட்டங்களில் குருவை சாகுபடி அதிக பரப்பளவில் செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம்  சீர்காழி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 25 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விசாயிகளிடம் இருந்து  கொள்முதல் செய்யப்பட்ட  நெல் மூட்டைகள் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக அரவைக்காக இரயில் மூலம் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. 


இயற்கை மருத்துவ முறைக்கு ஆதரவு.... மயிலாடுதுறை ஆட்சியரிடம் இயற்கை விவசாயிகள் வாக்குவாதம்.!

அதன்படி  2 ஆயிரம் மெட்ரிக்டன் கொண்ட 50 ஆயிரம் நெல் மூட்டைகள் 110 லாரிகள் மூலம் சீர்காழி ரயில் நிலையம் எடுத்துவரப்பட்டு 42 இரயில்பெட்டிகள் மூலம் நாகை முதுநிலை மண்டல மேலாளர் ஆணைக்கிணங்க  அரவைக்காக திருவண்ணாமலைக்கு ரயில் மூலம் அனுப்பப்பட்டடுள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை மழை காலம் தூங்குவதற்கு முன்னதாக அரவைக்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட விவசாயிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Kakkan Grand Daughter : ”தாத்தா என் அம்மாவோட நகையெல்லாம் இவங்களுக்காக கொடுத்தாரு “ - கக்கன் பேத்தி சொன்ன சீக்ரெட்

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Embed widget