மேலும் அறிய

கணவருக்கு தெரியாமல் அதிக வட்டிக்கு கடன்: பெண்ணை மிரட்டி, மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்த 2 பேர் கைது 

இருப்பினும் மேலும் பணம் கொடுக்க வேண்டும் என்று பாக்கியலட்சுமியும், சுரேசும் மிரட்டி உள்ளனர். இதனால் ஒன்றரை பவுன் நகையையும் ஷீலா கொடுத்துள்ளார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே கணவருக்கு தெரியாமல் அதிக வட்டிக்கு பணம் வாங்கிய பெண்ணிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் மற்றும் ஒன்றரை பவுன் நகையை மிரட்டி வாங்கிய பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அதிக வட்டிக்கு பணம்

தஞ்சாவூர் அருகே சிங்கப்பெருமாள் குளம் தென்கரை பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி ஷீலா (41). இவர் தனது கணவருக்கு தெரியாமல் தஞ்சாவூர் திருநகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி பாக்கியலட்சுமி (37), சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகள் சுரேஷ் (37) ஆகியோரிடம் இருந்து ரூ.40 ஆயிரத்தை தனக்கு தெரிந்தவருக்கு கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் கடனாக வாங்கி தந்துள்ளார். அதிக வட்டிக்கு இந்த பணத்தை வாங்கியதாக கூறப்படுகிறது.

நெருக்கடி கொடுத்ததால் பயம்

தொடர்ந்து வட்டிப்பணத்தை கேட்டு ஷீலாவிடம் பாக்கியலட்சுமியும், சுரேசும் நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் ஷீலா ஆன்லைன் வாயிலாக ரூ.2,50 லட்சம் மற்றும் நேரடியாக 6 லட்சம் ரூபாயை கடந்த ஜூலை 30ம் தேதி வரை கொடுத்தாக கூறப்படுகிறது. இருப்பினும் மேலும் பணம் கொடுக்க வேண்டும் என்று பாக்கியலட்சுமியும், சுரேசும் மிரட்டி உள்ளனர். இதனால் ஒன்றரை பவுன் நகையையும் ஷீலா கொடுத்துள்ளார். இது போதாது மேலும் பணம் கொடுக்க வேண்டும் என்று இருவரும் சேர்ந்து ஷீலாவை தொடர்ந்து மிரட்டி உள்ளனர். இதனால் அச்சமடைந்த ஷீலா நடந்த விஷயங்களை தனது கணவர் குமாரிடம் தெரிவித்துள்ளார்.

கள்ளப்பெரம்பூர் போலீசில் புகார் 

தொடர்ந்து இதுகுறித்து கள்ளப்பெரம்பூர் போலீசில் ஷீலா புகார் செய்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாக்கியலட்சுமி மற்றும் சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மளிகை கடையில் கடனை வைத்ததால் தகராறு

தஞ்சாவூர் மாவட்டம் சூரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சிராஜுதீன் (34). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.‌ 

இதேபோல் கீழவஸ்தாசாவடி பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (29). இவர் சிராஜுதீன் கடையில் கடனுக்கு பொருட்கள் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் கடன் தொகையை திருப்பி தரவில்லையாம். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி நெய்வாய்க்கால் பகுதியில் பிரதீப் தனது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். 

அப்போது அந்த வழியாக வந்த சிராஜுதீன், பிரதீபை பார்த்து தனக்கு கொடுக்க வேண்டிய கடன் தொகை குறித்து கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் இதில் ஆத்திரமடைந்த பிரதீப் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிராஜூதீனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சிராஜூதீன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

சிகிச்சை பலனின்றி இறந்தார்

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சிராஜூதீன் நேற்று உயிரிழந்தார். இதை அடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி அம்மாபேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பிரதீபை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget