மேலும் அறிய

தஞ்சாவூர்: நில அளவீட்டில் அதிகாரிகள் செய்த குளறுபடி - கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம்

நிலங்கள் அளவீடு செய்வதில் ஏற்பட்ட குளறுபடியை களைய வேண்டும் என்று வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்: நிலங்கள் அளவீடு செய்வதில் ஏற்பட்ட குளறுபடியை களைய வேண்டும் என்று வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே களத்துார் பஞ்சாயத்தில், களத்துார் கிழக்கு, மேற்கு என இரண்டு கிராமம் உள்ளது. தற்போது, களத்துார் மேற்கு கிராமத்தைச் சேர்ந்த சுமார் 300 குடும்பங்களுக்குச் சொந்தமான வயல், தோப்பு, வீட்டு மனை உள்ளிட்ட என சுமார் 250 ஏக்கர் நிலத்தின் கிரயப்பத்திரம்,பட்டா,கணினி சிட்டா,வீட்டு வாி ரசீது ஆவணங்களில் களத்துார் மேற்கு என பதிவாகியுள்ளது.

இந்நிலையில், களத்துார் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியான சூரியநாராயண புரம் கிராமத்துடன், களத்துார் மேற்கு பகுதியில் உள்ள சுமார் 184.62 ஏக்கர் நிலத்தை இணைப்பதாக வருவாய்த்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும், கடந்த சில மாதங்களாக, ஆன்லைன் சிட்டாவையும் நிறுத்தி வைத்துள்ளனர்.  இதனால், ஏற்பட்ட குளறுபடியால், விவசாயிகள், பொதுமக்கள் வங்கிக் கடன், கல்விக் கடன், நில ஆவணங்கள் பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக, வருவாய்த் துறையினர் உடனடியாக பழைய முறைப்படி தங்கள் கிராமத்துடனே இந்த விளை நிலங்களைச் சிட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கிராம மக்கள் சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள், களத்துார் கிராம கமிட்டி செயலாளர் மாறன், தலைவர் கண்ணன், முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் முருகன் ஆகியோர் தலைமையில், தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகம் முன்பு, ரேஷன்,ஆதார்,வாக்காளர் அட்டை ஆகியவற்றை ஒப்படைப்பதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், கோரிக்கை அடங்கிய மனுவை கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் அளித்தனர்.

இது குறித்து களத்தூர் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் முருகன் கூறியதாவது;  களத்தூர் பஞ்சாயத்துக்குட்பட்ட களத்தூர் கிழக்கு,மேற்கு,சூரியநாராயண புரம் கிராமங்கள் உள்ளது. சூரியநாராயண புரத்தைச் சேர்ந்த தனி நபர் ஒருவர், மற்றொருவரிடம், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பாக  சுமார் 366.97 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளனர். ஆனால், அந்த இடம் அரசுக்குச் சொந்தமானது என வழக்கு நடந்தது. முறையாக வருவாய்த்துறையினர் வழக்கை நடத்த நிலையில், அந்த இடம் தனி நபர்களுக்குச் சொந்தமானது என நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது.

இதைத் தொடர்ந்து, சூரியநாராயண புரத்தைச் சேர்ந்தவர்கள் பட்டா கேட்டுக் கடந்த 2014ல் சென்னை ஐகோர்டில் வழக்குப் போட்டனர். அப்போது, சூரியநாராயண புரத்தில் உள்ள 366.97 ஏக்கர் நிலத்துடன், களத்தூர் மேற்கு கிராமத்தில் உள்ள 184.62 ஏக்கர் நிலத்தையும் சேர்ந்த தவறாகச் சேர்த்து அளவீடு செய்யப்பட்டது.

வருவாய்த் துறை அதிகாரிகள் தவறாகச் செயல்பட்டதால், களத்தூர் மேற்கு கிராமத்தில் உள்ள நிலத்திற்கு சூரியநாராயண புரத்தில் பட்டா,சிட்டா வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இந்த தவற்றை சாி செய்து, மீண்டும் பழைய படி எங்களுக்கு நிலத்திற்குச் சிட்டா வழங்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth : ”ஜெயலலிதா வீட்டிற்கு ரஜினி சென்றது ஏன்?” திமுகவிற்கு எதிராக பாஜக சதி?
Rajinikanth : ”ஜெயலலிதா வீட்டிற்கு ரஜினி சென்றது ஏன்?” திமுகவிற்கு எதிராக பாஜக சதி?
CUET UG 2025: என்னது, க்யூட் தேர்வில் இத்தனை மாற்றங்களா? மாணவர்களே மறக்காதீங்க- முழு விவரம்!
CUET UG 2025: என்னது, க்யூட் தேர்வில் இத்தனை மாற்றங்களா? மாணவர்களே மறக்காதீங்க- முழு விவரம்!
Modi on Kisan Scheme: அடேயப்பா..விவசாயிகளுக்கு இத்தனை லட்சம் கோடி கொடுத்துருக்காங்களா.? மோடி சொன்ன தகவல்...
அடேயப்பா..விவசாயிகளுக்கு இத்தனை லட்சம் கோடி கொடுத்துருக்காங்களா.? மோடி சொன்ன தகவல்...
CM Stalin: இந்தியையா திணிக்கிறீங்க? முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு - மார்ச் 5ம் தேதி சம்பவம்..!
CM Stalin: இந்தியையா திணிக்கிறீங்க? முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு - மார்ச் 5ம் தேதி சம்பவம்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்Kaliyammal: தவெக மேடையில் காளியம்மாள்? பதவியை அறிவிக்கும் விஜய்! வரிசை கட்டும் முக்கிய புள்ளிகள்!Delhi Assembly Fight: Kaliyammal Profile: நாதகவின் சிங்கப்பெண்! சீமானின் குலதெய்வம்! யார் இந்த காளியம்மாள்? | NTK |Seeman

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth : ”ஜெயலலிதா வீட்டிற்கு ரஜினி சென்றது ஏன்?” திமுகவிற்கு எதிராக பாஜக சதி?
Rajinikanth : ”ஜெயலலிதா வீட்டிற்கு ரஜினி சென்றது ஏன்?” திமுகவிற்கு எதிராக பாஜக சதி?
CUET UG 2025: என்னது, க்யூட் தேர்வில் இத்தனை மாற்றங்களா? மாணவர்களே மறக்காதீங்க- முழு விவரம்!
CUET UG 2025: என்னது, க்யூட் தேர்வில் இத்தனை மாற்றங்களா? மாணவர்களே மறக்காதீங்க- முழு விவரம்!
Modi on Kisan Scheme: அடேயப்பா..விவசாயிகளுக்கு இத்தனை லட்சம் கோடி கொடுத்துருக்காங்களா.? மோடி சொன்ன தகவல்...
அடேயப்பா..விவசாயிகளுக்கு இத்தனை லட்சம் கோடி கொடுத்துருக்காங்களா.? மோடி சொன்ன தகவல்...
CM Stalin: இந்தியையா திணிக்கிறீங்க? முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு - மார்ச் 5ம் தேதி சம்பவம்..!
CM Stalin: இந்தியையா திணிக்கிறீங்க? முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு - மார்ச் 5ம் தேதி சம்பவம்..!
Annamalai On CM Stalin: திமுககாரங்க ஸ்கூல்ல சேர்த்து விடனுமா? கருப்பு டப்பா? - முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி
Annamalai On CM Stalin: திமுககாரங்க ஸ்கூல்ல சேர்த்து விடனுமா? கருப்பு டப்பா? - முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி
Hindi Imposition: இந்திக்கு செம்மொழி அந்தஸ்து இல்லாதது ஏன்? என்ன குறை அந்த மொழியில்? தமிழுக்கு மட்டும் எப்படி?
Hindi Imposition: இந்திக்கு செம்மொழி அந்தஸ்து இல்லாதது ஏன்? என்ன குறை அந்த மொழியில்? தமிழுக்கு மட்டும் எப்படி?
MK Stalin Decision :
MK Stalin Decision : "மத்திய - மாநில அரசு உறவு” முக்கிய முடிவை அறிவிக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
ADMK: அதிமுகவை சுத்து போடும் மத்திய, மாநில அரசுகள் - எஸ்.பி. வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ., வீட்டில் ரெய்டு
ADMK: அதிமுகவை சுத்து போடும் மத்திய, மாநில அரசுகள் - எஸ்.பி. வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ., வீட்டில் ரெய்டு
Embed widget