மேலும் அறிய

தொடருது இவர்களின் போராட்டம்... இன்று பேச்சுவார்த்தை நடக்குமா?

தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இன்றும் மூன்றாவது நாளாக வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சாவூர்: தொடர்ந்து 3ம் நாளாக தூய்மைப்பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எங்கு தெரியுங்களா?

அரசாணை எண் 62ன் படி தூய்மை பணியாளர்கள் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இன்றும் மூன்றாவது நாளாக வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாநகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் 420 பேர் கடந்த 20 வருடமாக வேலை பார்த்து வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு குறைந்த பட்ச சம்பள சட்டப்படி  அரசாணை எண் 62 ண்படி ஊதியம் வழங்குவது உட்பட 12  அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 21ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தஞ்சாவூர் மாநகராட்சி முன்பு இன்றும் 3ம் நாளாக சங்க மாவட்ட தலைவர் ஏ.கலியபெருமாள் தலைமையில் நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு உள்ளாட்சி பணியாளர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் தர்ம.கருணாநிதி, ஏஐடியுசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் வழக்கறிஞர் சி.சந்திரகுமார், மாவட்ட தலைவர் வெ.சேவையா, அரசு போக்குவரத்து சங்க மாநிலத் துணைத் தலைவர் துரை.மதிவாணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மைய மாவட்ட செயலாளர்   கோ.ஜெய்சங்கர், முன்னாள் மாநகர செயலாளர்கள் தமிழ்முதல்வன், மார்ட்டின், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட செயலாளர் அ.யோகராஜ், நிர்வாகி சுரேஷ், சமூக ஆர்வலர் ஆர்.பழனியப்பன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். 

ஆர்ப்பாட்டத்தில் தஞ்சாவூர் மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு, அரசால் நிர்ணயிக்கப்பட்ட தினக்கூலி 760, ஓட்டுனர்களுக்கு 798, உடன் வழங்க வேண்டும், கடந்த ஓராண்டுக்கு மேலாக தங்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பிஎப்., இஎஸ்ஐ., தொகையை தங்களின் கணக்கில் வரவு வைக்காத, ஒப்பந்தக்காரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

ஒவ்வொரு மாதமும், ஐந்தாம் தேதிக்குள் தங்களுக்கு ஊதியம் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.  ஆண்டுக்கு இரண்டு செட் யூனிஃபார்ம் வழங்காததையும் மற்றும் எங்களது அத்தியாவசிய கோரிக்கைகளாகிய 12 அம்ச கோரிக்கைகளை, நிறைவேற்ற வேண்டும் என்று மூன்றாவது நாளாக நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 

வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத் துணைத் தலைவர் பி.ஆனந்தராஜ், நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், கே. முனியம்மாள், கை.இளவரசன், எஸ் .சேகர், எம்.கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநகராட்சி நிர்வாகம் கோரிக்கைகளை அழைத்துப் பேசி தீர்வு காணவில்லை என்றால் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் துப்புரவுப்பணியாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இன்று மதியம் தொழிலாளர் நல அலுவலர் தூய்மை பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறார்.

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர் இன்றைய வானிலை: மேகமூட்டமும் மதிய மழைக்கான வாய்ப்பும்!
தஞ்சாவூர் இன்றைய வானிலை: மேகமூட்டமும் மதிய மழைக்கான வாய்ப்பும்!
தஞ்சாவூரில் இன்று மழை பெய்யுமா? வெளியான லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
தஞ்சாவூரில் இன்று மழை பெய்யுமா? வெளியான லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
11 ஆண்டுகளாக தவிப்பு: இன்சூரன்ஸ் நிறுவன வாசலில் அமர்ந்து விவசாயி போராட்டம்... தஞ்சையில் பரபரப்பு!
11 ஆண்டுகளாக தவிப்பு: இன்சூரன்ஸ் நிறுவன வாசலில் அமர்ந்து விவசாயி போராட்டம்... தஞ்சையில் பரபரப்பு!
செவிலியர்கள் கையெழுத்து இயக்கம்: தஞ்சையில் அரசு நடவடிக்கைக்கு எதிர்ப்பு!
செவிலியர்கள் கையெழுத்து இயக்கம்: தஞ்சையில் அரசு நடவடிக்கைக்கு எதிர்ப்பு!

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Karur Visit: முதலமைச்சர் விஜயின் இன்றைய கரூர் விசிட் - எங்கு தொடங்கி எங்கு முடியும்? - முழு பயண விவரம்
முதலமைச்சர் விஜயின் இன்றைய கரூர் விசிட் - எங்கு தொடங்கி எங்கு முடியும்? - முழு பயண விவரம்
Udhayanidhi Stalin: மிஸ்டர் உதயநிதி.. இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க.. வெளுத்து வாங்கிய கர்நாடகா அமைச்சர்!
Udhayanidhi Stalin: மிஸ்டர் உதயநிதி.. இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க.. வெளுத்து வாங்கிய கர்நாடகா அமைச்சர்!
TN Weather Update: இன்றும் சென்னையில் கனமழை? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? - தமிழக வானிலை அறிக்கை
இன்றும் சென்னையில் கனமழை? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? - தமிழக வானிலை அறிக்கை
Minister Rajmohan: “கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
“கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
CM Joseph Vijay: களைகட்டிய கரூர்.. 9 மாதங்களுக்குப் பிறகு முதலமைச்சராக செல்லும் விஜய்.. குவியும் எதிர்பார்ப்பு!
CM Joseph Vijay: களைகட்டிய கரூர்.. 9 மாதங்களுக்குப் பிறகு முதலமைச்சராக செல்லும் விஜய்.. குவியும் எதிர்பார்ப்பு!
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
Embed widget