மேலும் அறிய

மழையால் சேதமடைந்த பயிர்கள் கணக்கெடுப்பு பணி: வேளாண் இணை இயக்குனர் கூறிய தகவல்

டித்வா புயல் காரணமாக ஒரு வாரத்திற்கும் மேலாக மழை நீடித்தது. இதனால் சம்பா, தாளடி இளம் நடவுப்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டன.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் வடகிழக்கு பருவமழையினால் சேதம் அடைந்துள்ளது. இது தொடர்பான கணக்கெடுப்பு பணிகள் இந்த வாரத்துக்குள் முடிவடையும் என்று வேளாண்மை இணை இயக்குனர் வித்யா தெரிவித்துள்ளார். 

தஞ்சை மாவட்டத்தில் குறுவை அறுவடை பணிகள் முடிவடைந்து தற்போது சம்பா, தாளடி சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி பெய்து வருகிறது. 

இதன் தொடக்க காலத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக மழை பெய்ததையடுத்து, குறுவை அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கி காணப்பட்டன. இதனால் நெல்மணிகள் முளைத்து விவசாயிகள் பாதிக்கப்பட்டன. அதன் பின்னர் டித்வா புயல் காரணமாக ஒரு வாரத்திற்கும் மேலாக மழை நீடித்தது. இதனால் சம்பா, தாளடி இளம் நடவுப்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டன.

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, ஒரத்தநாடு, பாபநாசம், அம்மாப்பேட்டை, திருவையாறு, பூதலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் 13,137 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன. இதில் பல இடங்களில் நடவு செய்யப்பட்ட இளம் நெற்பயிர்கள் அழுகின. இதனால் விவசாயிகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியுள்ள விவசாயிகளுக்கு இது மிகவும் வேதனையை ஏற்படுத்தியது. இதையடுத்து கனமழையால் பாதித்த நெல் வயல்களை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள், விவசாய சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன. 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு எக்டேருக்கு அரசு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது குறித்து தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வித்யா கூறியதாவது:

தஞ்சை மாவட்டத்தில் தற்போது 3 லட்சத்து 30 ஆயிரத்து 925 ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளன. டித்வா புயல் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழையினால் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. பின்னர் மழை நின்ற பின்னர் வயல்களில் தேங்கிய நீர் வடியத் தொடங்கின. தற்போது மழை வெள்ளத்தில் மூழ்கிய நெற்பயிர்கள் அழுகி காணப்பட்டதால் பல இடங்களில் விவசாயிகள் அதனை அழித்து விட்டு மீண்டும் நடவுப்பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் குறித்து வேளாண்மைத் துறையினர், வருவாய்த்துறையினர் இணைந்து கணக்கெடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த கணக்கெடுப்பு பணி இந்த வாரத்துக்குள் முடிவடையும். அதன் பின்னர் தான் எவ்வளவு ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிய வரும். இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Embed widget