மேலும் அறிய

ஒரு மாத சம்பளத்தை போனஸாக கொடுங்கள்... தூய்மைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தை ஏஐடியுசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.சந்திரகுமார் துவக்கி வைத்தார். தமிழ்நாடு உள்ளாட்சி பணியாளர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர்  தர்ம. கருணாநிதி ஆர்ப்பாட்டத்தினை நிறைவு செய்தார். 

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு ஒரு மாத சம்பளம் போனஸ்  வழங்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி  மாநகராட்சி       அலுவலகம் முன்பு உள்ளாட்சித் துறை பணியாளர் சங்கம் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் ஏ.கலியபெருமாள் தலைமை வகித்தார். நிர்வாகிகள் முனியம்மாள், ஆனந்தராஜ், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை ஏஐடியுசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.சந்திரகுமார் துவக்கி வைத்து பேசினார். தமிழ்நாடு உள்ளாட்சி பணியாளர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர்  தர்ம. கருணாநிதி ஆர்ப்பாட்டத்தினை நிறைவு செய்து பேசினார். 

ஆர்ப்பாட்டத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி ஒரு மாத போனஸ் வழங்க வேண்டும், வருங்கால வைப்பு நிதி அனைவருக்கும் முறையாக செலுத்தி அதற்கான கணக்கு ரசீது வழங்க வேண்டும், இ எஸ் ஐ அட்டை வழங்க வேண்டும்.


ஒரு மாத சம்பளத்தை போனஸாக கொடுங்கள்... தூய்மைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பயோமெட்ரிக் வருகை பதிவு என்ற பெயரில் தொழிலாளர்களை அலைக்கழிப்பதை கைவிட வேண்டும், ஒப்பந்தத்தாரர் ஒப்பந்த விதிகளை மீறி செயல்படுத்துவதால் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் நாளை 16ம் தேதி  முதல் மாநகராட்சி அலுவலகம் முன்பு தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.  

இதில் ஏஐடியுசி மாவட்ட தலைவர் வெ.சேவையா, மாவட்ட பொருளாளர் தி.கோவிந்தராஜன், ஏஐடியுசி உள்ளாட்சி பணியாளர் சங்க மாவட்ட தலைவர் தி.திருநாவுக்கரசு, அரசு போக்குவரத்து சங்க மாநில துணைத்தலைவர் துரை.மதிவாணன், தெரு வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.பி. முத்துக்குமரன்,ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் எஸ்.கருணாநிதி, காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் ஆர்.பழனியப்பன் மற்றும் தூய்மை பணியாளர்கள், ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.

கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கட்டுமானத்திற்கு என்று அரசு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும். கட்டுமான பொருட்களுக்கு தமிழக முழுவதும் ஒரே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மூவேந்தர் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தஞ்சாவூர் தலைமை தபால் அலுவலகம் அருகில் நடைபெற்றது.

கட்டுமான தொழிலாளர்களின் வீட்டு மனை உழவுகளுக்கு வீடு கட்ட வேண்டிய ரூ. 4 லட்சம் வழங்கப்படும் என்ற திட்டத்தை உடன் அமல்படுத்த வேண்டும். கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் நல வாரியத்தில் பதிவு செய்து 60 வயது நிரம்பிய அனைவருக்கும் ஓய்வூதியம் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். கட்டுமான பொருட்களுக்கு தமிழகம் முழுவதும் ஒரே விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கட்டுமானத்திற்கு என்று அரசு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும். கட்டுமான பணிகளுக்கு எம் சாண்ட், ப்ளீஸ் அண்ட் போன்றவற்றை தவிர்த்து மணல் குவாரியை திறக்கவும் அதை அரசை ஏற்று நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பிழை பல கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

தலைமை நிலைய பேச்சாளர் கோவிந்தராஜன் வரவேற்றார். அவைத்தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்து கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். மாநிலத் தலைவர் ரகுபதி, துணைத் தலைவர் கருப்பையா, பொருளாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் நகரத் தலைவர் இருதயராஜ், ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர், தென்மண்டல தலைவர் வியனரசு மற்றும் மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தலைமை நிலைய பேச்சாளர் தங்கராசு நன்றி கூறினார்.

பின்னர் தென்மண்டல தலைவர் வியனரசு நிருபர்களிடம் கூறுகையில், தற்பொழுது எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம். கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கொடுக்கும் திட்டத்தினை செயல்படுத்த வேண்டும். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் போராட்டம் தொடரும் என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

இருப்பதுதான் கிடைக்கும் ... உணவகங்கள் அதிரடி: தவிக்கும் பேச்சுலர்கள்
இருப்பதுதான் கிடைக்கும் ... உணவகங்கள் அதிரடி: தவிக்கும் பேச்சுலர்கள்
தஞ்சாவூரில் பெட்ரோல் தட்டுப்பாடு வதந்தி: மக்கள் குவிந்ததால் பரபரப்பு!
தஞ்சாவூரில் பெட்ரோல் தட்டுப்பாடு வதந்தி: மக்கள் குவிந்ததால் பரபரப்பு!
தஞ்சாவூரில் மீனாட்சி மருத்துவமனை இஃப்தார் கொண்டாட்டம்: 2000 பேர் பங்கேற்பு!
தஞ்சாவூரில் மீனாட்சி மருத்துவமனை இஃப்தார் கொண்டாட்டம்: 2000 பேர் பங்கேற்பு!
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பாதுகாப்புக்காக புதிய கேமராக்கள்: பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிரடி நடவடிக்கை!
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பாதுகாப்புக்காக புதிய கேமராக்கள்: பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிரடி நடவடிக்கை!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
"கேஸ் தட்டுப்பாடு தாக்கம் - 1 லட்சம் மாணவர்கள் பாதிப்பு" - ஹாஸ்டல்கள் மூடப்படுமா.?
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
Embed widget