மேலும் அறிய

’தஞ்சாவூரில் விநாயகர் ஊர்வலம் தடுத்து நிறுத்தம்’- சிலைகளை கைப்பற்றி போலீசாரே ஆற்றில் கரைத்தனர்

’’ஊர்வலத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும், இந்து அமைப்பினருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.  பின்னர் ஊர்வலமாக எடுத்து சென்று கரைப்போம் என கோஷம்’’

விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டு விமரிசையாக கொண்டாடப்படும். இதையொட்டி விநாயகர் சிலைகள் ஆங்காங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டு, மூன்றாவது நாள் ஊர்வலமாக எடுத்துச்சென்று கரைக்கப்படுவது வழக்கம். ஆனால்  இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கவும், ஊர்வலமாக செல்லவும் அரசு தடை விதித்து உத்தரவிட்டது. இந்த தடையை நீக்க வேண்டும் என்று பல்வேறு இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் தடையை மீறி சிலைகள் வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.


’தஞ்சாவூரில் விநாயகர் ஊர்வலம் தடுத்து நிறுத்தம்’- சிலைகளை கைப்பற்றி போலீசாரே ஆற்றில் கரைத்தனர்

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் தடையை மீறி 110 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. பொது இடங்களில் வைக்கப்பட்ட சிலைகளை அதிகாரிகள் மற்றும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த சிலைகளை நீர் நிலைகளில் கரைத்தனர். அதன்படி விநாயகர் சதுர்த்தி அன்றே 110 விநாயகர் சிலைகளையும் கரைத்தனர். இந்தநிலையில்  தஞ்சை கீழவாசல் பகுதியில் வீடுகளில் வைக்கப்பட்ட அரை அடி, ஒரு அடி, 2 அடி உயர விநாயகர் சிலைகளை, அப்பகுதி மக்கள் மற்றும் பல்வேறு இந்து அமைப்பினர், கீழவாசல், வெள்ளைப்பிள்ளையார் கோவில் பகுதியில் இருந்து ஊர்வலமாக எடுத்துச்சென்று வடவாறு பகுதியில் கரைக்கப்போவதாக இந்து இளைஞர் எழுச்சி பேரவையினர் அறிவித்து இருந்தனர்.

அதன்படி ஒரு அடி மற்றும் அரை அடி  என 20 விநாயகர் சிலைகள், 2 அடி உயரமுள்ள 6 விநாயகர் சிலைகள் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டன. பின்னர் அங்கு இந்து அமைப்பை சேர்ந்த சந்தோஷ்குமார் தலைமையில் 20-க்கும் மேற்பட்டவர்கள் சிலைகளுடன் ஊர்வலமாக சென்றனர். சில அடி தூரம் சென்ற போதுஅவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி ஊர்வலமாகசெல்ல அனுமதி கிடையாது என தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், இந்து அமைப்பினருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.  பின்னர் ஊர்வலமாக எடுத்து சென்று கரைப்போம் என கோஷமிட்டனர்.


’தஞ்சாவூரில் விநாயகர் ஊர்வலம் தடுத்து நிறுத்தம்’- சிலைகளை கைப்பற்றி போலீசாரே ஆற்றில் கரைத்தனர்

ஆனாலும் போலீசார், தமிழக அரசு, விநாயகர் சிலைகளை ஊர்வலகமாக எடுத்து செல்ல அனுமதி மறுத்துள்ளது. விநாயகர் சதுர்த்தியன்றி வைத்த விநாயகரை, ஊர்வலமாக எடுத்து செல்லாமல் ஆறுகளில் கரைத்துள்ளோம். அதனால் நீங்களும், ஊர்வலமாக செல்லாமல், விநாயகர் சிலைகளை எடுத்து சென்று கரைக்க வேண்டும் என போலீசார் கேட்டு கொண்டதற்கிணங்க, சிலைகளை தங்களது இருசக்கர வாகனங்கள் மற்றும் வாகனங்களில் எடுத்துச்சென்று வடவாற்றில் கரைத்தனர். இதனால் தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் போக்குவரத்து பாதித்து, சுமார் 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget