மேலும் அறிய

’தஞ்சாவூரில் விநாயகர் ஊர்வலம் தடுத்து நிறுத்தம்’- சிலைகளை கைப்பற்றி போலீசாரே ஆற்றில் கரைத்தனர்

’’ஊர்வலத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும், இந்து அமைப்பினருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.  பின்னர் ஊர்வலமாக எடுத்து சென்று கரைப்போம் என கோஷம்’’

விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டு விமரிசையாக கொண்டாடப்படும். இதையொட்டி விநாயகர் சிலைகள் ஆங்காங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டு, மூன்றாவது நாள் ஊர்வலமாக எடுத்துச்சென்று கரைக்கப்படுவது வழக்கம். ஆனால்  இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கவும், ஊர்வலமாக செல்லவும் அரசு தடை விதித்து உத்தரவிட்டது. இந்த தடையை நீக்க வேண்டும் என்று பல்வேறு இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் தடையை மீறி சிலைகள் வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.


’தஞ்சாவூரில் விநாயகர் ஊர்வலம் தடுத்து நிறுத்தம்’- சிலைகளை கைப்பற்றி போலீசாரே ஆற்றில் கரைத்தனர்

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் தடையை மீறி 110 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. பொது இடங்களில் வைக்கப்பட்ட சிலைகளை அதிகாரிகள் மற்றும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த சிலைகளை நீர் நிலைகளில் கரைத்தனர். அதன்படி விநாயகர் சதுர்த்தி அன்றே 110 விநாயகர் சிலைகளையும் கரைத்தனர். இந்தநிலையில்  தஞ்சை கீழவாசல் பகுதியில் வீடுகளில் வைக்கப்பட்ட அரை அடி, ஒரு அடி, 2 அடி உயர விநாயகர் சிலைகளை, அப்பகுதி மக்கள் மற்றும் பல்வேறு இந்து அமைப்பினர், கீழவாசல், வெள்ளைப்பிள்ளையார் கோவில் பகுதியில் இருந்து ஊர்வலமாக எடுத்துச்சென்று வடவாறு பகுதியில் கரைக்கப்போவதாக இந்து இளைஞர் எழுச்சி பேரவையினர் அறிவித்து இருந்தனர்.

அதன்படி ஒரு அடி மற்றும் அரை அடி  என 20 விநாயகர் சிலைகள், 2 அடி உயரமுள்ள 6 விநாயகர் சிலைகள் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டன. பின்னர் அங்கு இந்து அமைப்பை சேர்ந்த சந்தோஷ்குமார் தலைமையில் 20-க்கும் மேற்பட்டவர்கள் சிலைகளுடன் ஊர்வலமாக சென்றனர். சில அடி தூரம் சென்ற போதுஅவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி ஊர்வலமாகசெல்ல அனுமதி கிடையாது என தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், இந்து அமைப்பினருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.  பின்னர் ஊர்வலமாக எடுத்து சென்று கரைப்போம் என கோஷமிட்டனர்.


’தஞ்சாவூரில் விநாயகர் ஊர்வலம் தடுத்து நிறுத்தம்’- சிலைகளை கைப்பற்றி போலீசாரே ஆற்றில் கரைத்தனர்

ஆனாலும் போலீசார், தமிழக அரசு, விநாயகர் சிலைகளை ஊர்வலகமாக எடுத்து செல்ல அனுமதி மறுத்துள்ளது. விநாயகர் சதுர்த்தியன்றி வைத்த விநாயகரை, ஊர்வலமாக எடுத்து செல்லாமல் ஆறுகளில் கரைத்துள்ளோம். அதனால் நீங்களும், ஊர்வலமாக செல்லாமல், விநாயகர் சிலைகளை எடுத்து சென்று கரைக்க வேண்டும் என போலீசார் கேட்டு கொண்டதற்கிணங்க, சிலைகளை தங்களது இருசக்கர வாகனங்கள் மற்றும் வாகனங்களில் எடுத்துச்சென்று வடவாற்றில் கரைத்தனர். இதனால் தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் போக்குவரத்து பாதித்து, சுமார் 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Embed widget