மேலும் அறிய

Mayiladuthurai: தண்டவாளத்தில் தலையை வைத்து ரயிலை நிறுத்த முடிவெடுத்த பொதுமக்கள் - சீர்காழியில் பரபரப்பு

சீர்காழியில் கொரோனா காலத்தால் நிறுத்தப்பட்ட அனைத்து ரயில்களும் வழக்கம் போல் நின்று செல்ல வலியுறுத்தி தண்டவாளத்தில் தலை வைக்கும் போராட்டத்தை பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில் நிலையத்தில் நாளொன்றுக்கு 40க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. கடந்த 2019 -ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக நெடுந்தூரம் செல்லும் ரயில்கள் சீர்காழி ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்லும் நிலை உருவானது. கொரோனா கட்டுப்பாடுகள் நிறைவடைந்து மூன்று ஆண்டுகளை கடந்த நிலையிலும் தற்பொழுது வரை இரவு நேரங்களில் ரயில்கள் நின்று செல்வது இல்லை. இதனால் ரயிலில் பயணிக்கும் ஏழை எளிய மக்களும், வயது முதிர்ந்தவர்களும் சிதம்பரம் அல்லது மயிலாடுதுறை ரயில் நிலையங்களில் இறங்கி அங்கிருந்து சீர்காழிக்கு வந்து சேரும் அவல நிலையே தொடர்கிறது.


Mayiladuthurai: தண்டவாளத்தில் தலையை வைத்து ரயிலை நிறுத்த முடிவெடுத்த பொதுமக்கள் - சீர்காழியில் பரபரப்பு

மயிலாடுதுறை மற்றும் சிதம்பரம் ரயில் நிலையங்களில் இருந்து சீர்காழிக்கு வந்து சேர்வதற்கு உரிய நேரத்தில் பேருந்து வசதிகள் உரிய நேரத்தில் இல்லாததால் பல மணி நேரம் காத்திருந்து சீர்காழி வந்தடைய வேண்டிய நிலை உள்ளது. எனவே 2019 -வரை சீர்காழியில் நின்று சென்ற அனைத்து ரயில்களும் வழக்கம் போல் மீண்டும் நின்று செல்ல வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள், வணிகர்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட போராட்டத்தின் போது ஜூன் மாதம் 30ஆம் தேதிக்குள் அனைத்து ரயில்களும் வழக்கம் போல் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என தென்னக ரயில்வே சார்பாக உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை இரவு நேர ரயில்கள் எதுவும் சீர்காழி ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்கிறது.

Prabhas: மூன்று படங்கள் ஹாட்ரிக் தோல்வி.. பிரபாஸை நம்பி மேலும் ரூ.1100 கோடி முதலீடு.. தயாரிப்பாளர்கள் நிலை?


Mayiladuthurai: தண்டவாளத்தில் தலையை வைத்து ரயிலை நிறுத்த முடிவெடுத்த பொதுமக்கள் - சீர்காழியில் பரபரப்பு

இதனால் பொதுமக்களும், வணிகர்களும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். எனவே அனைத்து ரயில்களும் சீர்காழி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தொடர்ந்து சீர்காழி பகுதியை வஞ்சிக்கும் தென்னக ரயில்வேயை கண்டித்தும் ரயில்வே தண்டவாளங்களில் தலை வைக்கும் போராட்டத்தை ரயில் நிறுத்த  போராட்ட குழுவினர் முன்னெடுத்துள்ளனர். அது தொடர்பாக நடைபெற்ற அனைத்து கட்சியினர், வணிகர்கள் மற்றும் அனைத்து சமூக நல ஆர்வலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் விரைவில் தண்டவாளத்தில் தலை வைக்கும் போராட்டத்தை நடத்துவது என ஏக மனதாக தீர்மானித்து அறிவிப்பு வெளியிட்டது. மேலும் போராட்டம்  தொடர்பான போஸ்டர்கள் ஒட்டும் பணியையும் துவங்கினர். இதனால் சீர்காழி நகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள  https://t.me/abpnaduofficial  என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Iranian President Raisi: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரான் ஊடகங்கள் தகவல்
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரான் ஊடகங்கள் தகவல்
Breaking News Tamil LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Breaking News Tamil LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iranian President Raisi: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரான் ஊடகங்கள் தகவல்
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரான் ஊடகங்கள் தகவல்
Breaking News Tamil LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Breaking News Tamil LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Embed widget