மேலும் அறிய

மயிலாடுதுறை: ரயில் மறியலில் ஈடுபட்ட திமுக எம்.பி - சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை

’’கர்ப்பிணி தாய்மார்கள், உடலநலக்குறைவாக உள்ளவர்களை ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்து செல்லும் போது, ரயில் வந்தால், மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு தாமதமாகின்றது’’

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள திருபுவனம் காங்கேயன் பேட்டை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். திருபுவனத்தில் இருந்து காங்கேயன் பேட்டை செல்லும் வழியில் ரயில்வே தண்டவாளம் செல்கிறது இங்கு ரயில்வே கேட் கிடையாது ஆட்கள் மட்டும் நடந்து செல்லலாம் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாது. இதனால் அவசர மருத்துவ தேவைகளுக்கும், மரணம் அடைந்தவர்களை மயானத்திற்கு கொண்டு செல்வதற்கும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். பல ஆண்டுகளாக கிராம மக்கள் ரயில்வே சுரங்கப்பாதை அமைத்து தரும்படி கோரிக்கை வைத்து வருகின்றனர்.


மயிலாடுதுறை: ரயில் மறியலில் ஈடுபட்ட திமுக எம்.பி - சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை

இந்நிலையில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மணீஸ் அகர்வால் செல்லும் சிறப்பு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். எம்பி ராமலிங்கம் மற்றும் பொது மக்கள், ரயிலை மறியல் செய்ய உள்ளதாக தகவல் வந்ததையடுத்து, திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மணீஸ் அகர்வாலுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மணீஸ் அகர்வால், காங்கேயன்பேட்டையில் ரயிலை நிறுத்த உத்தரவிட்டார். பின்னர், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மணீஸ் அகர்வால், ரயிலிருந்து கீழே இறங்கி,  எம்பி ராமலிங்கம் மற்றும் பொது மக்களிடம் கருத்துக்களை கேட்டு, மனுக்களை பெற்று கொண்டு, எம்பி ராமலிங்கத்தை, தனது கும்பகோணத்திற்கு அழைத்து வந்தார்.


மயிலாடுதுறை: ரயில் மறியலில் ஈடுபட்ட திமுக எம்.பி - சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை

கும்பகோணம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது, எம்பி ராமலிங்கம் பேசுகையில், திருபுவனத்திலிரந்து காங்கேயன்பேட்டை கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலையில் ரயில்வே தண்டவாளம் செல்கின்றது. ஆள் இல்லாத  ரயில்வே கேட்டில், ஆடு, மாடுகள் அடிக்கடி ரயிலில் அடிபட்டு உயிரிழந்து விடுகிறது. முதியவர்கள், குழந்தைகள், ரயில் வரும் ரயிலில் சிக்கி இறந்து விடுகிறார்கள்.  கர்ப்பிணி தாய்மார்கள், உடலநலக்குறைவாக உள்ளவர்களை ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்து செல்லும் போது, ரயில் வந்தால், மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு தாமதமாகின்றது.

தற்போது பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ளதால், ஏராளமான மாணவர்கள், ரயில் தண்டவாளத்தை கடந்து பள்ளி, கல்லுாரிக்கு சென்று வருகிறார்கள். இதனால் வீட்டிலுள்ள பெற்றோர்கள், தினந்தோறும் குழந்தைகள் வரும்வரை காத்துகிடக்கின்றனர். எனவே, ரயில்வே நிர்வாகம், காங்கேயன்பேட்டை கிராமத்தின் வழியாக செல்லும் ரயில் தண்டவாளத்தின் கீழே கீழ் பாலம் அமைத்து தர வேண்டும். பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்துள்ள நிலையில், பாலம் அமைத்து தர வேண்டும் என்றார்.

திருச்சி கோட்ட மேலாளர் மணீஸ்அகர்வால் கூறுகையில், காங்கேயன்பேட்டை தண்டவாளத்தின் கீழே கீழ் பாலம் அமைப்பதற்கு ரயில்வே போர்டு தான் முடிவு செய்ய வேண்டும். உங்களது கோரிக்கையை, ரயில்வே போர்டுக்கு பரிந்துரை செய்கின்றேன் என்றார். இதனை தொடர்ந்து காங்கேயன்பேட்டை ரயில்தண்டவாளத்தில் நின்றிருந்த பொது மக்கள் கலைந்து சென்றனர். இதனால் எம்பி ராமலிங்கம் ரயில் மறியல் செய்யஉள்ளார் என தகவல் பரவியதையடுத்து, அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பானது.

தலைப்பு செய்திகள்

இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget