மேலும் அறிய

மயிலாடுதுறை: ரயில் மறியலில் ஈடுபட்ட திமுக எம்.பி - சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை

’’கர்ப்பிணி தாய்மார்கள், உடலநலக்குறைவாக உள்ளவர்களை ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்து செல்லும் போது, ரயில் வந்தால், மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு தாமதமாகின்றது’’

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள திருபுவனம் காங்கேயன் பேட்டை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். திருபுவனத்தில் இருந்து காங்கேயன் பேட்டை செல்லும் வழியில் ரயில்வே தண்டவாளம் செல்கிறது இங்கு ரயில்வே கேட் கிடையாது ஆட்கள் மட்டும் நடந்து செல்லலாம் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாது. இதனால் அவசர மருத்துவ தேவைகளுக்கும், மரணம் அடைந்தவர்களை மயானத்திற்கு கொண்டு செல்வதற்கும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். பல ஆண்டுகளாக கிராம மக்கள் ரயில்வே சுரங்கப்பாதை அமைத்து தரும்படி கோரிக்கை வைத்து வருகின்றனர்.


மயிலாடுதுறை: ரயில் மறியலில் ஈடுபட்ட திமுக எம்.பி - சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை

இந்நிலையில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மணீஸ் அகர்வால் செல்லும் சிறப்பு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். எம்பி ராமலிங்கம் மற்றும் பொது மக்கள், ரயிலை மறியல் செய்ய உள்ளதாக தகவல் வந்ததையடுத்து, திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மணீஸ் அகர்வாலுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மணீஸ் அகர்வால், காங்கேயன்பேட்டையில் ரயிலை நிறுத்த உத்தரவிட்டார். பின்னர், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மணீஸ் அகர்வால், ரயிலிருந்து கீழே இறங்கி,  எம்பி ராமலிங்கம் மற்றும் பொது மக்களிடம் கருத்துக்களை கேட்டு, மனுக்களை பெற்று கொண்டு, எம்பி ராமலிங்கத்தை, தனது கும்பகோணத்திற்கு அழைத்து வந்தார்.


மயிலாடுதுறை: ரயில் மறியலில் ஈடுபட்ட திமுக எம்.பி - சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை

கும்பகோணம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது, எம்பி ராமலிங்கம் பேசுகையில், திருபுவனத்திலிரந்து காங்கேயன்பேட்டை கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலையில் ரயில்வே தண்டவாளம் செல்கின்றது. ஆள் இல்லாத  ரயில்வே கேட்டில், ஆடு, மாடுகள் அடிக்கடி ரயிலில் அடிபட்டு உயிரிழந்து விடுகிறது. முதியவர்கள், குழந்தைகள், ரயில் வரும் ரயிலில் சிக்கி இறந்து விடுகிறார்கள்.  கர்ப்பிணி தாய்மார்கள், உடலநலக்குறைவாக உள்ளவர்களை ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்து செல்லும் போது, ரயில் வந்தால், மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு தாமதமாகின்றது.

தற்போது பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ளதால், ஏராளமான மாணவர்கள், ரயில் தண்டவாளத்தை கடந்து பள்ளி, கல்லுாரிக்கு சென்று வருகிறார்கள். இதனால் வீட்டிலுள்ள பெற்றோர்கள், தினந்தோறும் குழந்தைகள் வரும்வரை காத்துகிடக்கின்றனர். எனவே, ரயில்வே நிர்வாகம், காங்கேயன்பேட்டை கிராமத்தின் வழியாக செல்லும் ரயில் தண்டவாளத்தின் கீழே கீழ் பாலம் அமைத்து தர வேண்டும். பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்துள்ள நிலையில், பாலம் அமைத்து தர வேண்டும் என்றார்.

திருச்சி கோட்ட மேலாளர் மணீஸ்அகர்வால் கூறுகையில், காங்கேயன்பேட்டை தண்டவாளத்தின் கீழே கீழ் பாலம் அமைப்பதற்கு ரயில்வே போர்டு தான் முடிவு செய்ய வேண்டும். உங்களது கோரிக்கையை, ரயில்வே போர்டுக்கு பரிந்துரை செய்கின்றேன் என்றார். இதனை தொடர்ந்து காங்கேயன்பேட்டை ரயில்தண்டவாளத்தில் நின்றிருந்த பொது மக்கள் கலைந்து சென்றனர். இதனால் எம்பி ராமலிங்கம் ரயில் மறியல் செய்யஉள்ளார் என தகவல் பரவியதையடுத்து, அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பானது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் பாஜக நிர்வாகி சுயேட்சையாக வேட்புமனு தாக்கல்
வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் பாஜக நிர்வாகி சுயேட்சையாக வேட்புமனு தாக்கல்
நாச்சியார்கோவில் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தேரோட்டம்
நாச்சியார்கோவில் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தேரோட்டம்
தஞ்சாவூரில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய கலெக்டர் அதிரடி! முதல் வாக்காளர்கள் உறுதிமொழி
தஞ்சாவூரில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய கலெக்டர் அதிரடி! முதல் வாக்காளர்கள் உறுதிமொழி
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: விஜயின் வேட்புமனுவிலேயே கோளாறு..! பெரம்பூரில் தள்ளுபடியாகும் சூழல்? அப்ப திருச்சி நிலைமை என்ன?
TVK Vijay: விஜயின் வேட்புமனுவிலேயே கோளாறு..! பெரம்பூரில் தள்ளுபடியாகும் சூழல்? அப்ப திருச்சி நிலைமை என்ன?
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
Embed widget