மேலும் அறிய

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தராமல் தண்ணீர் காட்டி வரும் கர்நாடகா...!

’’கர்நாடக அணைகளான, கிருஷ்ணராஜசாகர் அணையில் 77 சதவீத நீரும், கபினி அணையில் 90 சதவீதமும், ஹேரங்கி அணையில் 96 சதவீதமும், ஹேமாவதி அணையில் 83 சதவீதமும், தண்ணீர் இருப்பு உள்ளது’’

கர்நாடக மாநிலத்தில் உருவாகி வரும் காவிரி ஆற்றில் ஆண்டுதோறும் தமிழகத்திற்கு 177 டிஎம்சி தண்ணீரை திறக்க வேண்டும் என காவிரி நடுவர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை தவணை முறையில் தண்ணீர் திறப்பது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு முழுமையாக தண்ணீரை திறப்பதில்லை. அதே நேரத்தில் அணைகளில் இருந்து உபரி நீரை திறந்து விட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி திறக்கப்பட்டு வருவதாக கணக்கு காட்டப்பட்டு வருகிறது.
 

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தராமல் தண்ணீர் காட்டி வரும் கர்நாடகா...!
 
இந்நிலையில் நடப்பாண்டில் ஜூன் மாதத்தில் திறக்க வேண்டிய 9.19 டிஎம்சி தண்ணீரில் 7.6 டிஎம்சியும், ஜூலை மாதத்தில் 31.24 டிஎம்சியில், 22.64 டிஎம்சியும், ஆகஸ்ட் மாதத்தில் 45.95 டிஎம்சியில், 22.6 டிஎம்சி திறக்கப்பட்டுள்ளது. ஆனால் செப்டம்பர் மாதத்தில் கடந்த 1ம் தேதி முதல் 8ஆம் தேதி வரை 9 டிஎம்சியில்,  11 டிஎம்சியாக அதிகரித்து திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 96.18 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும். ஆனால் தற்போது வரை 69.8 டிஎம்சி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு மாதத்தில் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய தண்ணீரில் 26.3 டிஎம்சி தண்ணீர் திறக்காமல், கர்நாடக அரசு நிலுவையில் வைத்துள்ளது.


தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தராமல் தண்ணீர் காட்டி வரும் கர்நாடகா...!
 
மேலும் மேட்டூர் அணையில் 38 டிஎம்சி தண்ணீர் மட்டுமே தற்போது வரை தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கர்நாடக அணைகளான, கிருஷ்ணராஜசாகர் அணையில் 77 சதவீத நீரும், கபினி அணையில் 90 சதவீதமும், ஹேரங்கி அணையில் 96 சதவீதமும், ஹேமாவதி அணையில் 83 சதவீதமும், தண்ணீர் இருப்பு உள்ளது. ஆனால் கர்நாடக அரசு நினைத்தால், தமிழகத்திற்கு காவிரி நடுவர் மன்றம் அறிவுறுத்தல் படி வழங்க வேண்டிய தண்ணீரை திறந்து விடலாம். ஆனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது என்ற எண்ணத்தில் கர்நாடக அரசு இருந்து வருகிறது.
 
இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி 120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் 76 அடி நீர்மட்டம் இருந்து வருகிறது. மேலும் நீர்மட்டம் 6அடி குறைந்தால், பாசனத்திற்கு தண்ணீர் வழங்க முடியாத நிலை ஏற்படும்.  மேட்டூர் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்கு நேற்று கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டால் மட்டுமே, டெல்டா மாவட்டங்களுக்கு விவசாய பாசனத்திற்கு தண்ணீர் வழங்க முடியும். எனவே உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி செப்டம்பர் மாதம் வரை திறக்க வேண்டிய 96.18 டிஎம்சி தண்ணீரில், மீதமுள்ள 26.3 டிஎம்சி தண்ணீரை திறக்க கர்நாடக அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
PM Modi: மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு  - திருமாவை சாடிய அன்புமணி
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு - திருமாவை சாடிய அன்புமணி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Lorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | MaduraiTVK Member Audio | RN Ravi Praised Tamilnadu | ”தமிழ்நாடு தான் BESTபெண்கள் பாதுகாப்பா இருக்காங்க” RN ரவி புகழாரம் | DMKCongress: Delhi-க்கு படையெடுக்கும்  தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
PM Modi: மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு  - திருமாவை சாடிய அன்புமணி
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு - திருமாவை சாடிய அன்புமணி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
Seeman Photo Troll: சீமானை போட்டு பொளக்கும் நெட்டிசன்கள்... தீராத புகைப்பட சர்ச்சை...
சீமானை போட்டு பொளக்கும் நெட்டிசன்கள்... தீராத புகைப்பட சர்ச்சை...
ஹேப்பி நியூஸ்! ‘புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டுள்ளது’ - டங்ஸ்டன் ஏலம் ரத்து – மத்திய அரசு அதிரடி உத்தரவு
ஹேப்பி நியூஸ்! ‘புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டுள்ளது’ - டங்ஸ்டன் ஏலம் ரத்து – மத்திய அரசு அதிரடி உத்தரவு
"நாட்டை சீர்குலைக்க சதி.. கவனமா இருங்க" பிரதமர் மோடி வார்னிங்!
ஸ்டாலின் பகிர்ந்த தமிழ்நாட்டின் சிறப்பு – புகழ்ந்து தள்ளிய ராகுல்காந்தி – என்ன விஷயம்?
ஸ்டாலின் பகிர்ந்த தமிழ்நாட்டின் சிறப்பு – புகழ்ந்து தள்ளிய ராகுல்காந்தி – என்ன விஷயம்?
Embed widget