மேலும் அறிய

செம பாய்ச்சல் காட்டி நின்று விளையாடிய காளைகள்... திருக்கானூர்பட்டியில் வெளிநாட்டினரும் ரசித்த ஜல்லிக்கட்டு

தஞ்சை அருகே திருக்கானூர்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் செம பாய்ச்சல் காட்டின பாய்ந்தன. முன்னதாக உறுதி ொழி போட்டியை கலெக்டர் தீபக் ஜேக்கப் தொடக்கி வைத்தார். 

தஞ்சாவூர்: தஞ்சை அருகே திருக்கானூர்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் செம பாய்ச்சல் காட்டின பாய்ந்தன. முன்னதாக உறுதிமொழி போட்டியை கலெக்டர் தீபக் ஜேக்கப் தொடக்கி வைத்தார். 

தஞ்சை அருகே திருக்கானூர்பட்டியில் புனித அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு அரசின் அனுமதி பெறப்பட்டது. தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்தப்படும் மாதா கோவில் தெருவில் வாடிவாசல் அமைப்பதற்கான பணிகள் மும்முரமாக நடந்தன.

வாடிவாசலில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை ஒரு அடி உயரத்திற்கு தென்னை நார்கள் பரப்பப்பட்டன. காளைகளும், வீரர்களுக்கும் கீழே விழுந்தாலும் காயம் ஏற்படாமல் இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. காளைகள் பார்வையாளர் பகுதிக்குள் சென்று விடாமல் இருப்பதை தடுக்க சவுக்கு கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டன. இவ்வாறு பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.


செம பாய்ச்சல் காட்டி நின்று விளையாடிய காளைகள்... திருக்கானூர்பட்டியில் வெளிநாட்டினரும் ரசித்த ஜல்லிக்கட்டு

மாடு பிடி வீரர்களை களத்துக்குள் அனுப்புவதற்கு தனி பாதை ஏற்படுத்தப்பட்டது. காயம் அடைந்த வீரர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்பட்டது. இதற்காகவும் தனிப்பாதை அமைக்கப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்கான விதிமுறைகளை பின்பற்ற விழாக்குழுவினர் அறிவித்தனர். இதன்படி ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாட்டுடன் உரிமையாளர் மற்றும் மாடுபிடி வீரர்கள் இணையத்தில் தங்களை பற்றி பதிவு செய்து கொண்டனர்.

ஆன்லைன் டோக்கன் முறைப்படி வரிசையாக மட்டுமே காளைகள் உள்ளே அனுமதிக்கப்பட்டன. மாடுபிடி வீரர்கள் அரசின் சட்டத்திற்கு உட்பட்டு தங்களுடைய பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். விழாவிற்கு வருபவர்கள், விழாக்குழுவினருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று விழாக்குழு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டில் 700 காளைகள் பதிவு செய்யப்பட்டன. கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் (பொ) டாக்டர் சுப்பையா, உதவி இயக்குனர்கள் அன்பு செழியன், கண்ணன், புருஷோத்தமன், ரவிச்சந்திரன், ஜான் சாமுவேல், டாக்டர்கள் கமலக்கண்ணன், முகமது ஷெரீப  உரிய சோதனைகளை மேற்கொண்டனர். மேலும் 350 மாடுபிடி வீரர்கள் தங்களின் பெயரை பதிவு செய்திருந்தனர்.
 
ஜல்லிக்கட்டு போட்டியை காலை 6.45 மணியளவில் தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தொடக்கி வைத்தார். வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, வட்டாட்சியர் (பொ) அருள் பிரகாசம், திருக்கானூர்பட்டி பங்குதந்தை தேவதாஸ் இக்னேசியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் அருளானந்தசாமி, இந்து ஜனநாயக கட்சி போராட்டக் குழு செயலாளர் சிமியோன் சேவியர் ராஜ், ஊராட்சி தலைவர் சேவியர், பார்க்கவ முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் திருமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

தஞ்சை மாவட்ட எஸ்பி ஆசிஷ் ராவத் உத்தரவின் பேரில், ஏ.டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் தலைமையில், வல்லம் டிஎஸ்பி., நித்யா மற்றும் 700 போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை விழா குழு தலைவர் ஆரோக்கியராஜ், தனிஸ்லாஸ், பிலிப், திவ்ய நாதன், ஆரோக்கியசாமி, அடைக்கலம், ஜான் பீட்டர் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை 20க்கும் அதிகமான வெளிநாட்டினரும் கண்டு ரசித்தனர்.

ஜல்லிகட்டு போட்டியை ஒட்டி திருக்கானூர்பட்டியில் உள்ள அனைத்து வீடுகளிலும் போட்டியை பார்க்க வந்தவர்கள், பங்கேற்றவர்கள் என அனைவரும் உணவு அளித்ததும் குறிப்பிடத்தக்கது. 
 
வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன. பல காளைகளை வீரர்கள் அடக்க முடியாமல் திணறினர். சில காளைகள் சுற்றி சுற்றி வந்து மாடு பிடி வீர்ரகளை தூக்கி வீசின. மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு சைக்கிள், வாஷிங்மெஷின், பிரிட்ஜ், கட்டில், எவர்சில்வர் , பித்தளை தவளை, குடம், மிக்ஸி என்று ஏராளமான பொருட்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
தஞ்சாவூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: விவசாய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
தஞ்சாவூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: விவசாய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
Tata Sierra: சியாராவின் 7 வேரியண்ட்கள் - முழு விலைப்பட்டியலையும் வெளியிட்ட டாடா - பணத்திற்கு நிகரான அம்சங்கள்
Tata Sierra: சியாராவின் 7 வேரியண்ட்கள் - முழு விலைப்பட்டியலையும் வெளியிட்ட டாடா - பணத்திற்கு நிகரான அம்சங்கள்
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
Embed widget