மேலும் அறிய

தடையை நீக்கிய தமிழக அரசு - எட்டுக்குடி, வேளாங்கண்ணி, நாகூரில் வழிபாட்டிற்கு குவிந்த பக்தர்கள்

’’வார இறுதி நாட்களில் வழிபாட்டு தளங்களுக்கு செல்லுவதற்கான தடையை தமிழக அரசு நேற்று நீக்கியது’’

வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்கா, எட்டுக்குடி முருகன், சிக்கல் சிங்காரவேலர் ஆலயம், நீலாயதாட்சி அம்மன் கோவில் என அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டன. வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்கள் பங்களிப்போடு வழக்கமான சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடன்  இருந்த நிலையில் திருமணம் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்து வசதி இல்லாமலும் வாகன வசதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். அரசின் முழு முயற்சியால் தடுப்பூசி செலுத்துவதில் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தியும் தடுப்பூசி முகாம்கள் அனைத்தும் பெரும்பாலும் தமிழகம் முழுவதும் முதல் மற்றும் இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தடையை நீக்கிய தமிழக அரசு - எட்டுக்குடி, வேளாங்கண்ணி, நாகூரில் வழிபாட்டிற்கு குவிந்த பக்தர்கள்
 
தற்போது கொரணா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகள் அறிவித்திருந்தது. இந்தநிலையில் வழிபாட்டுத்தலங்கள் வாரத்தில் நான்கு நாட்கள் திறக்கப்பட்டும் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. பல்வேறு தரப்பினர் வைத்த கோரிக்கையின் பேரில் தமிழக அரசு வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டு தளங்கள் திறக்க நேற்று அனுமதி அளித்தது. இதனையடுத்து நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம், நாகூர் தர்கா, நாகை நீலாயதாட்சி அம்மன், நெல்லுக்கடை மாரியம்மன் ஆலயம் மற்றும் எட்டுக்குடி முருகன் கோவில், சிக்கல் சிங்காரவேலன் ஆலயம் என அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டு காலை முதலே பக்தர்கள் இறைவனை வழிபட்டு வருகின்றனர். நாகூர் தர்கா இன்று அதிகாலை திறக்கப்பட்டு அங்கு இஸ்லாமியர்கள் மட்டுமில்லாமல் அனைத்து மதத்தினரும் வழிபட்டனர். இதேபோல் அனைத்து இந்து கோவில்களிலும் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி பேராலயம் இன்று பாதிரியார்கள் மற்றும் பக்தர்கள் பங்களிப்போடு பிரார்த்தனை செய்யப்பட்டு சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வருகிறது.

தடையை நீக்கிய தமிழக அரசு - எட்டுக்குடி, வேளாங்கண்ணி, நாகூரில் வழிபாட்டிற்கு குவிந்த பக்தர்கள்
 
நாகை மாவட்டம் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் பங்குகொண்டனர், முன்னதாக வேளாங்கண்ணி பேராலயத்தில் தானியங்கி கிருமிநாசினி வைக்கப்பட்டு அங்கு ஊழியர்கள் கிருமிநாசினி பயன்படுத்தியும் முக கவசம் அணிந்து உள்ளே வரவேண்டுமென அவர்களை அறிவுறுத்தினர். வேளாங்கண்ணி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வரத்து குறைவு காரணத்தால் வாழ்வாதாரம் பாதித்திருந்த வியாபாரிகளும் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தடையை நீக்கிய தமிழக அரசு - எட்டுக்குடி, வேளாங்கண்ணி, நாகூரில் வழிபாட்டிற்கு குவிந்த பக்தர்கள்
 
இதேபோல் வேளாங்கண்ணி நாகூர் கோடியக்கரை தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை காரைக்கால் சனீஸ்வர பகவான் ஆலயம் உள்ளிட்ட நவகிரக ஆலயங்களுக்கும் வரும் பக்தர்கள் பேருந்து மற்றும் ரயில் மூலமாக நாகை வந்து இறங்கி அங்கிருந்து வாடகை வாகனம் மூலம் சென்று வருவர் இதற்காக ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் வாகனத்தை வைத்துக்கொண்டு ஏராளமான வாகன ஓட்டிகள் காத்திருப்பர் பெரும்பாலும் விடுமுறை நாட்களில் அதிக வருமானத்தை ஈட்டும் வாகன ஓட்டிகள் கடந்த சில மாதங்களாக வருமான இழப்பை சந்தித்து வந்த நிலையில் இன்று வாகன மீண்டும் பரபரப்பான நிலையில் மாறியுள்ளனர் தற்போது பக்தர்கள் வரத்து தொடங்கி உள்ளதால் நல்ல வருமானம் கிடைக்கும் என தெரிவிக்கும் வாகன ஓட்டிகள் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் இந்த வருமானம் பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவிக்கின்றனர். மேலும் வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதியளித்த தமிழக அரசுக்கு வேளாங்கண்ணி பேராலயம் சார்பிலும் மற்றும் அனைத்து தரப்பினரும் நன்றி தெரிவித்தனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Embed widget